மேலும் அறிய

Ethirneechal: சாம்பலாகப் போகும் கதிர்... கெளதம் பிளானில் ஒரு ட்விஸ்ட்... எதிர்நீச்சலில் பரபரப்பு!  

Ethirneechal Oct 30: கதிரைக் காணவில்லை என வளவன் கொந்தளிக்க, அவன் கதையை முடிப்பதில் குறியாக இருக்கிறான் கெளதம். ஆனால் எதிர்பாராத விதமாக போலீஸ் என்ட்ரி கொடுத்ததால் நேற்றைய எபிசோடில் ஒரு ட்விஸ்ட்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்.30) எபிசோடில் அப்பத்தாவின் வீட்டில் பெண்கள் அனைவரும் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கும்போது தர்ஷன் குணசேகரன் தன்னை அடித்ததைப் பற்றி நினைத்து கோபப்படுகிறான். நந்தினியும் அங்கே நடக்கும் அநியாயங்களை பற்றி சொல்லி கொந்தளிக்கிறாள். "திருவிழா முடியட்டும் அனைவரும் வேறு ஒரு நந்தினியை பார்க்கப் போகிறார்கள்" எனக் கொந்தளிக்கிறாள்.


Ethirneechal: சாம்பலாகப் போகும் கதிர்... கெளதம் பிளானில் ஒரு ட்விஸ்ட்... எதிர்நீச்சலில் பரபரப்பு!  

அந்த நேரத்தில் ஜான்சி ராணி வந்து வம்புக்கு இழுக்கிறாள். அப்பத்தா வந்து ஜான்சியை "ஏன் தொந்தரவு செய்யுற" எனக் கேட்கிறார். திருவிழாவுக்கு வந்தவங்களுக்கு கறி விருந்து போட வேண்டும் என வம்புக்கு இழுக்கிறாள்  ஜான்சி. அப்பத்தாவையும் அவள் எதிர்த்துப் பேச கொந்தளித்த சக்தி "மரியாதையா இங்க இருந்து கிளம்பு. மண்டையை பொளந்துருவேன்" என ஆவேசமாகப் பொங்கி எழுகிறான். அவமானப்பட்ட ஜான்சி அங்கிருந்து முறைத்துக்கொண்டு சென்று விடுகிறாள்.  

வளவனும் கரிகாலனும் கதிரைக் காணவில்லை எனக் கொந்தளிக்கிறார்கள். "அவன் ஒரு பொம்பளைகிட்ட போன்ல பேசிகிட்டு இருந்தான். அதை கூட உன்னால கண்டுபிடிக்க முடியவில்லை. நீ எல்லாம் ஒரு போலீஸ்" என கரிகாலன் வளவனைத் திட்ட மாறி மாறி இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

Ethirneechal: சாம்பலாகப் போகும் கதிர்... கெளதம் பிளானில் ஒரு ட்விஸ்ட்... எதிர்நீச்சலில் பரபரப்பு!  


ஈஸ்வரியின் அப்பா அப்பத்தாவிடம் வந்து இங்க நடப்பது எல்லாம் புதுசா இருக்கு. குணசேகரன் "வாங்க மாமா" என எழுந்து அழைத்தது எனக்கு ஆச்சரியமா இருக்கு. "நீங்க எதிர்பார்க்காத நிறைய விஷயம் நடக்கப்போகுது" என சொல்லி போன் பண்ணி வர சொன்னாரு என ஈஸ்வரியின் அப்பா சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

கெளதம் கதிரை கட்டிப் போட்டு அடைத்து வைத்து இருக்கிறான். "என்னை அவுத்து விடுங்கள் இல்லனா பீஸ் பீஸா போயிடுவீங்க" என கதிர் மிரட்டுகிறான். "இன்னும் அரை மணி நேரத்தில் உன்னை எரித்து சாம்பலாகிடுவேன். உங்க அண்ணன் கதையும் இன்னும் கொஞ்ச நேரத்தில்  முடியப் போகுது" என கெளதம் சொல்ல, கதிர் அப்பவும் திமிராகப் பேசுகிறான்.

 

Ethirneechal: சாம்பலாகப் போகும் கதிர்... கெளதம் பிளானில் ஒரு ட்விஸ்ட்... எதிர்நீச்சலில் பரபரப்பு!  

கெளதம் ஆள் ஒருவன் வெளியில் நிற்பதைப் பார்த்து போலீஸ் வந்து அவனிடம் ஒரு விலாசம் பற்றி விசாரிக்கிறார்கள். அவனை சந்தேகப்பட்ட போலீஸ்காரர்கள் ‘நீ யாரு?’ எனக் கேட்கிறார்கள். "இது என்னுடைய வீடு" என அவன் சொல்ல, போலீஸ் நம்பாமல் அவனை தரதரவென உள்ளே இழுத்து செல்கிறார்கள். கதிரை கட்டிப்போட்டு இருப்பதை பார்த்த போலீஸ் கௌதமையும் அவன் ஆட்களையும் விரட்டிச் செல்கிறார்கள். "என்னை யாராவது அவுத்து விடுங்கள்" எனக் கத்துகிறான் கதிர். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.

தலைப்பு செய்திகள்

மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
அனிருத் காவ்யா மாறன் திருமணத்தை உறுதிபடுத்திய ஒய் ஜி மகேந்திரன்
அனிருத் காவ்யா மாறன் திருமணத்தை உறுதிபடுத்திய ஒய் ஜி மகேந்திரன்
ராட்சசன் வெற்றிக்குப் பின் கண்டுகொள்ளாத இயக்குநர் ராம்குமார்..விஷ்ணு விஷால் ஆதங்கம்
ராட்சசன் வெற்றிக்குப் பின் கண்டுகொள்ளாத இயக்குநர் ராம்குமார்..விஷ்ணு விஷால் ஆதங்கம்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
RAIN ALERT: சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
Embed widget