மேலும் அறிய

Lakshmi Ramakrishnan: நாங்க அவரோட திறமைய ரசிச்சோம்.. வைரலான லாரன்ஸ் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்!

இணைய சமூகமே வலைவீசித் தேடிவரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ லாரன்ஸ் குறித்து இயக்குநர், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியுள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை லாரன்ஸ்

சமீப காலமாக ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரன்ஸ் என்பவரின் காணொளிகள் படுவைரலாகி வந்தன. 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாரன்ஸ் “மேடம் இது நடிப்பு மேடம்” சில்லு சில்லு சில்லுனு நடப்பான்” என்று அவர் பேசிய அனைத்தும் இணையதளத்தில் மீம்ஸ்களாக, ரீல்ஸ்களாக பகிரப்பட்டு வந்தன.

இப்படி அனைவரும் பேசி வந்த அந்த நபர் இறந்துவிட்டதாக திடீரென்று ஒரு தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் லாரன்ஸை தேடும் வேட்டையில் இறங்கினார்கள். கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்த லாரன்ஸை கடந்த 2 ஆண்டுகளாக யாரும் பார்க்கவில்லை என்று அனைவரும் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் லாரன்ஸ் தற்போது உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அவர் அல்லது அவரது குடும்பத்தினர் யாராவது உறுதிப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

‘அவரை நாங்க ரசிச்சோம்’

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் லாரன்ஸ் பங்கேற்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். லாரன்ஸ் குறித்து பேசிய அவர் இப்படி கூறியுள்ளார். “நான் எத்தனையோ குற்றவாளிகளுடன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன்.

சிலர் 4 கொலைகளை செய்துவிட்டு என் முன் கேஷுவலாக பேசிக் கொண்டிருப்பார்கள். படித்தவர்களை விட படிக்காதவர்களிடம்  நிறைய திறமைகளும் ஹ்யூமர் சென்ஸும் இருக்கு. ஒருத்தரின் ஒரு கோணத்தை மட்டும் வெளிப்படுத்தாமல், அவருடைய பிற கோணங்களையும் வெளிப்படுத்த இந்த நிகழ்ச்சியில் நாங்கள் அனுமதித்தோம். அதன் வெளிப்பாடு தான் லாரன்ஸ். 

அன்று லாரன்ஸ் வந்தது இன்று வரை எனக்கு நினைவு இருக்கிறது. அவருக்குள் அப்படி ஒரு காமெடி சென்ஸ். அதனால் தான் அவர் பேசினாலும் ஆக்‌ஷன் செய்தாலும் அதை அனுமதித்தோம். அவரோட திறன் வெளியே தெரிய வேண்டும் என்று நினைத்தோம். அதனால் தான் அவற்றை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிப்பரப்பினோம். நாங்கள் நினைத்திருந்தால் அந்தப் பகுதிகளை நீக்கியிருக்கலாம். அவர் தப்பு செய்துவிட்டு வந்திருந்தாலும் அவருடைய திறமையை நாங்கள் ரசிக்கவே செய்தோம்.

அதே நேரத்தில் நாங்கள் அவர் செய்த தப்பை நியாயப்படுத்தவும் இல்லை. அவருக்கு இருந்த திறமைக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருந்தால் அவர் பெரிய நகைச்சுவை நடிகராக வந்திருப்பார். அவருக்குள் அப்படி ஒரு திறமையை நாங்கள் பார்த்தோம். எங்கள் நிகழ்ச்சிக்கு வருபவர்களை நிகழ்ச்சி முடிந்ததும் அப்படியே நாங்கள் அனுப்பி விடுவது இல்லை. அவர்களின் தேவைகளையும் வறுமையையும் புரிந்துகொண்டு அதற்கான உதவிகளையும் செய்து தான் அனுப்பி வைக்கிறோம்“ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
Embed widget