இதுதான் மியூசிக்.. பாடல் ரெக்கார்டிங் இப்படித்தான் இருக்கும்.. இசை குறித்து மனம் திறந்த ஜானகி!
"ஏ.ஆர்.ரஹ்மானை பொருத்தவரையில அவர் என் இஷ்டத்துக்கு விட்டுருவாரு.."

80-களில் தொடங்கி இன்று வரை இருக்கும் 2k கிட்ஸ் வரை அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு குரல் எஸ்.ஜானகி அம்மாவின் குரல் . இளையராஜா-ஜானகி என்ற பிரிக்க, மறக்க முடியாத காம்போ. 80-களில் வந்த எல்லா திரைப்படங்களில் ஜானகி அம்மா குரல் ஒலிக்காத படங்களே இல்லை. தமிழ் , கன்னட, தெலுங்கு ,மலையாளம்,ஹிந்தி, கிட்டத்தட்ட 25 மொழிகளில் பாடியுள்ள பெருமை இவரையே சேரும். பல பாடல்களை தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.ஜானகியின் குரல் 70 மற்றும் 80-களில்தான் அதிகம் கேட்கப்பட்டது . இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இவர் பாடிய மச்சானா பாத்திங்களா பாடல் பட்டி தொட்டி எங்கும் இளையராஜா மற்றும் ஜானகி இசைக் காம்பவை ஒலிக்கச் செய்தது. அங்கிருந்து இவர்களின் காம்போ வெற்றி காம்போவாகவே தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று சவுத் இந்தியன் சினிமா முழுக்க கேட்கப்பட்டது எஸ்.ஜானகியின் குரல் .
ஜானகி அவர்கள் பாடுவது மட்டுமல்ல , பேசுவதும் கூட இனிமையாகத்தான் இருக்கும். ஒரு பாடல் ஒலிக்கும் பொழுது, அது ஜானகி அம்மா பாடியிருந்தால் அப்படியே கணித்துவிடலாம் அத்தனை தனித்துவமானது. ஆனாலும் அவ்வபோது சினிமாவில் தனது மிமிக்ரி திறமைகளை கச்சிதமாக பொருத்தி , பாராட்டை பெற்றுவிடுவார். குழந்தைகள் பாடும் பாடல் என்றால் , ஜானகி அம்மாவை தவிர வேறு யாரும் இசையமைப்பாளர்களின் சாய்ஸாக இருக்க முடியாது. எம்.எஸ்,விஸ்வநாதன் தொடங்கி தற்போது அனிருத் வரையிலும் அடுத்தடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுடன் ஜானகி பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜானகி அவர்கள் தான் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் குறித்தும், பாடல்கள் உருவாகும் விதம் குறித்தும் மனம் திறந்துள்ளார்.
அதில் ”ஒவ்வொரு மொழியிலையும் இசையமைப்பாளர்கள் உருவாக்கும் பாடலை அவ்வளவு ரசித்து பாடுவேன்.ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி சிறப்பு இருக்கும். சில இசையமைப்பாளர்கள் சொல்லிக்கொடுப்பாங்க. சில இசையமைப்பாளர்கள் நல்ல ஹார்மோனியம் வாசிப்பாங்க ஆனால் நல்லா பாடவே தெரியாது. நம்ம அதை புரிந்துக்கொண்டு பாட வேண்டும் அவ்வளவுதான்.எம்.எஸ்.வி சார், இளையராஜா இவங்கெல்லாம் கூடுதலா சங்கதிகள் போட்டா நல்லா என்ஜாய் பண்ணுவாங்க. சில பேர் இருக்காங்க. குறிப்பா தெலுங்குல நாகேஷ்வர ராவ் , ராஜேஷ்வர ராவ் இருந்தாங்க. அவங்களுக்கு அவங்க சொல்லுறதைத்தான் பாடனும் . கொஞ்சம் அப்படி இப்படியெல்லாம் சங்கதிகள் மிஸ் ஆக கூடாது. ஏ.ஆர்.ரஹ்மானை பொருத்தவரையில அவர் என் இஷ்டத்துக்கு விட்டுருவாரு.. அவர் ட்யூன் சொல்லிய பிறகு எக்ஸ்ட்ரா நான் என்ன பண்ணாலும் பாட சொல்லிடுவாரு. பாடலுக்கு ஏற்ற மாதிரி பாவனைகளை இணைத்துக்கொள்ளுவோம். சிலவற்றை இசையமைப்பாளர்கள் சொல்லுவாங்க. சிலபற்றை பாடலுக்கு ஏற்ற மாதிரியாக நாங்களே சேர்த்துக்கொள்வோம். சிரிப்பது, அழுவது அது போல. ”என கூறியுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

