மேலும் அறிய
Top 10 News Headlines: தேர்தலில் போட்டி? - ஓபிஎஸ், தெலங்கானா அரசு தாராளம், இந்தியா-இஸ்ரேல் 17 ஒப்பந்தங்கள் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Feb.27th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தந்தை ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து திமுகவில் இணைந்தார் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்.
- சட்டமன்றத் தேர்தலில் தளபதி வாய்ப்பு தந்தால் உறுதியாக போட்டியிடுவேன் என்று திமுகவில் இணைந்தபின் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி.
- திராவிட மாடல் அரசின் திட்டங்களால், ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டதாகவும், 7-வது முறையும் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிட உங்களது உழைப்பு அமைந்திட வேண்டும் என தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.1,19,200-க்கும், கிராம் ரூ.14,900-க்கும் விற்பனை.
- சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே நாளை (பிப்.28) பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை - மார்ச் 5ம் தேதி நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தா ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம்.
- ஐதராபாத் மாநகராட்சியில் மூத்த தூய்மைப் பணியாளருக்கு மாத சம்பளம் ரூ.2 லட்சமாகவும், தெலங்கானா அரசின் மின்வாரிய தலைமை பொறியாளருக்கு மாதம் ரூ.7 லட்சம் ஊதியமும் நிர்ணயம்.
- பிரதமர் மோடி மற்றும் நெதன்யாகு முன்னிலையில், இந்தியா-இஸ்ரேல் இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.
- சபாகர் துறைமுக திட்டத்திற்கு இந்தியா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
- ஆப்கானிஸ்தான் மீது வெளிப்படையாக போரை அறிவித்தது பாகிஸ்தான். தாலிபான்களுக்கு எதிராக ‘ஆப்பரேஷன் கசாப் லில்-ஹக்‘ என்ற போர் நடவடிக்கையை தொடங்குவதாக பாகிஸ்தான் அறிவிப்பு.
- அமெரிக்கா - ஈரான் இடையே ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 3-ம் கட்ட அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்தியஸ்த நாடான ஓமன் தகவல்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























