மேலும் அறிய

15 years of Poo : அள்ளித் தெளித்த கோலங்களுக்கு நடுவே அமைதியாய் பூத்த 'பூ'... கொண்டாட தவறிய 'பூ' திரைப்படம் வெளியான நாள்

15 years of Poo : மனித உணர்வுகளை மிக நுணுக்கமாக படம் பிடித்த 'பூ' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.   

 

ஒவ்வொரு மனிதனும் அவரவர்களின் வாழ்க்கையில் பல கனவுகளை, சந்தோஷங்களை விட்டு கொடுத்து தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி தனக்கு பிடித்தவர்கள் நன்றாக வாழ வேண்டும் என செய்த தியாகம் வீணாகி போகும் போது ஏற்படும் வலிக்கு அளவே இல்லை. அந்த துக்கத்தை மிகவும் எளிமையாக கிராமத்து மனம் மாறாமல் எந்த ஒரு கமர்சியல் சமாச்சாரமும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக காட்சிப்படுத்திய ஒரு படம் தான் இயக்குனர் சசியின் 'பூ' திரைப்படம். இந்த கவிதை வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

 

15 years of Poo : அள்ளித் தெளித்த கோலங்களுக்கு நடுவே அமைதியாய் பூத்த 'பூ'... கொண்டாட தவறிய 'பூ' திரைப்படம் வெளியான நாள்

ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட் :

தமிழ்செல்வனின் “வெயிலோடு போய்” என்ற சிறுகதையை மையமாக வைத்து வெளியான இப்படம் முழுக்க முழுக்க அறிமுக நாயகி பார்வதியை சுற்றிலும் நகர்த்தப்படுகிறது. இது தான் அவருக்கு முதல் படம் என சொல்ல முடியாத  அளவுக்கு காதல், ஏக்கம், சோகம், துக்கம் என அனைத்து உணர்வுகளையும் அத்தனை அழகாக வெளிக்காட்டி மாரியாகவே வாழ்ந்து இருந்தார் பார்வதி. ஸ்ரீகாந்த் தான் படத்தின் ஹீரோ என்றாலும் இது ஒரு ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட் என்பதை அறிந்தும் ஒதுங்கியே இருந்து  சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து இருந்தார். 

 

கதை சுருக்கம் :

விவரம் தெரியாத வயதில் இருந்தே மாமன் மகன் மீது தீராத அன்பு, பாசம் பின்பு காதலாக மாறினாலும் அது கைகூடாமல் இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகும் மாமன் மகன் மீது இருக்கும் இருக்கும் பாசம் குறையாமல் பழைய நினைவுகளோடு மாமாவின் வீட்டுக்கு சென்ற மாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி தான் படத்தின் கிளைமாக்ஸ்.

 

15 years of Poo : அள்ளித் தெளித்த கோலங்களுக்கு நடுவே அமைதியாய் பூத்த 'பூ'... கொண்டாட தவறிய 'பூ' திரைப்படம் வெளியான நாள்

நிலைத்த கதாபாத்திரங்கள் :

மாரியின் அம்மா, தோழி, பேனாக்காரர், சின்ன வயது மாரி என படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து போன சின்ன சின்ன கதாபாத்திரங்கள் என்றாலும் மனதோடு நிலைத்து நின்றார்கள். அந்த இரட்டை பனைமரம் மாரியின் காதல் அடையாளங்களாக நிமிர்ந்து நின்றன. மாரியின் எதிர்பார்ப்பில்லாத காதல் ஊரில் உள்ள அனைவருக்கும் புரிகிறது காதலன் ஸ்ரீகாந்தை தவிர.

 

சசிக்கு பாராட்டு :

இது வரையில் ஆண்களின் முன்னாள் காதலை மட்டுமே ஸ்பாட்லைட் மூலம் பார்த்து வந்த சினிமாவுக்கு பெண்ணின் முன்னாள் காதல் நினைவலைகளை மலர செய்த இயக்குனர் சசி பாராட்டப்பட வேண்டியவர். படத்துக்கு மற்றுமொரு பலமாக அமைந்தது எஸ்.எஸ். குமரனின் இசை. ச்சூ ச்சூ மாரி,  ஆவாரம்பூ உள்ளிட்ட பாடல்கள் கிராமத்து வாசத்தை வீசிய பாடல்கள். 

மனித உணர்வுகளை மிக நுணுக்கமாக படம் பிடித்த இப்படம் மிக பெரிய அடையாளமாக வந்திருக்க வேண்டும் ஆனால் படம் வெளியான போது இந்த அற்புதமான படைப்பை கொண்டாட தவறிய திரை ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதை ரசிக்க துவங்கி 15 ஆண்டுகளுக்கு பிறகும் கொண்டாடி வருகிறார்கள். ஒரு சில குறைகள் இருந்தாலும், புரியாத கவிதையாய், அழுத்தமான ஒரு திரைக்கதையாய் பூத்தது 'பூ' திரைப்படம். 
  

தலைப்பு செய்திகள்

நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்

வீடியோ

Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
US Iran Hormuz: துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
Embed widget