மேலும் அறிய

Kantara prequel: “வரலாறு மிக ஆழமானது; வெளியானதே காந்தாரா-2 தான்”- அடுத்த பாகத்தின் அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி

”காந்தாரா படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது இந்த யோசனை எனக்குள் உதித்தது.  ஏனென்றால் காந்தாராவின் வரலாறு மிகவும் ஆழமானது” என ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு சத்தமே இல்லாமல் வெளியாகி நாடு முழுவதும் கவனமீர்த்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் காந்தாரா.

கர்நாடகாவைச் சேர்ந்த ஹோம்பலே ஃபில்ம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம் கேஜிஎஃப் 1&2 படங்களுக்குப் பிறகு கன்னட சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது.

16 கோடியில் 400 கோடி வசூல்

கிஷோர், சப்தமி கௌடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம், வெறும் 16 கோடி செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டு சினிமாத்துறையினர், ரசிகர்கள் என அனைவரது பாராட்டுகளையும் அள்ளியது.

இந்நிலையில் காந்தாரா படத்தின் அடுத்த பாகத்துக்குப் பதிலாக முந்தைய பாகத்துக்கான கதையை படக்குழு தயார் செய்து வருவதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகின.

 

இப்படம் வெளியாகி நேற்றுடன்100 நாள் நிறைவடைந்த நிலையில் காந்தாரா படத்தின் முந்தைய பாகம் குறித்து ரிஷப் ஷெட்டி மனம் திறந்து பேசியுள்ளார். 

காந்தாரா முந்தைய பாகம்

”காந்தாராவின் மீது அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் காட்டிய பார்வையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

கடவுளின் ஆசீர்வாதத்துடன் காந்தாரா வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். காந்தாராவின்  முந்தைய பாகத்தை அறிவிக்கிறேன்.

நீங்கள் பார்த்தது உண்மையில் பாகம் 2. பாகம் 1 அடுத்த ஆண்டு வரும்.  காந்தாரா படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது இந்த யோசனை எனக்குள் உதித்தது.  ஏனென்றால் இதன் வரலாறு மிகவும் ஆழமானது. கதையைப் பொறுத்தவரை நாங்கள் இப்போது  மேற்படி விவரங்களை தோண்டிக் கொண்டிருக்கிறோம்.

கதை குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து வருவதால், படத்தைப் பற்றிய விவரங்களை மிக விரைவாக வெளியிட விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மாடுபிடி விளையாட்டான கம்பாலாவில் ஈடுபடும் ரிஷப் ஷெட்டிக்கும் வன அலுவலருக்கும் இடையேயான பிரச்னை, நாட்டுப்புற தெய்வ வழிபாடான பூதகோலா ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காந்தாரா படம் சென்ற ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் பாராட்டுகளைக் குவித்தது.

வராஹ ரூபம் சர்ச்சை

எனினும் இப்படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடல் தாய்க்குடம் ப்ரிட்ஜ் இசைக்குழுவின் நவரசம் பாடலை காப்பியடித்து இசையமைக்கப்பட்டதாக கோழிக்கோடு கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல திரைத்துறையினரும் தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவினருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாடலை பயன்படுத்த திரையரங்கம், ஸ்ட்ரீமிங் தளங்கள் என அனைத்திலும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்குக்கான உரிய ஆவணங்களை தாய்க்குடம் பிரிட்ஜ் சமர்ப்பிக்காத நிலையில், பாடலின் மீதான தடை சென்ற டிசம்பர் மாதம் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget