மேலும் அறிய

HBD Na.Muthukumar: இவரால் மட்டும் எப்படி? பெண் மனதை பிரதிபலிக்கும் நாமுவின் மாயாஜாலம்!

'ஒரு பெண்ணின் காதலை இவ்வளவு அழகாக சொல்லிவிட முடியுமா? இவ்வளவு எதார்த்தமாக சொல்லிவிட முடியுமா? கண்டிப்பா இந்த பாடலை ஒரு பெண் கவிஞர்தான் எழுதியிருக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.'

உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்

உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்

உன் பெயரைக் கேட்கையிலே உற்சாகம் துளிர் விடுதே

உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருது இன்று

எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்

என் நெஞ்சைக் கேட்கிறேன் பதில் சொல்லிடவில்லை

கல்லூரி படத்தில் வரும் பாடல் இது. இந்த பாடலை முதல் முறை கேட்டு முடித்தபோது, ஏதோ கனவு உலகிற்கு சென்று ரியாலிட்டியாக வாழ்ந்துவிட்டு வந்ததுபோல இருந்தது.

பல பாடல்களை கேட்டிருப்போம், கேட்டு கடந்திருப்போம், சில பாடல்கள் மனதில் நிற்பவை, சில பாடல்கள் பாதிக்கக்கூடியவை.... இப்படி பல பாடல்கள் இருப்பின், இந்த பாடலை கேட்டு முடித்தவுடன் இசையமைப்பாளரை யார் என்று கூட தேடவில்லை, பாடல் வரிகளை எழுதியது யார் என்றுதான் தேடினான். 'ஒரு பெண்ணின் காதலை இவ்வளவு அழகாக சொல்லிவிட முடியுமா? இவ்வளவு எதார்த்தமாக சொல்லிவிட முடியுமா? நம்ம நினைக்கிறது அப்படியே எழுத்திருக்காங்க, கண்டிப்பா இந்த பாடலை ஒரு பெண் கவிஞர்தான் எழுதியிருக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.'

அது பொய்யானது. ஏனென்றால், தேடலில் கிடைத்த பெயர் – நா. முத்துகுமார்!

அடடே நா. முத்துகுமார் நமக்கு பரிச்சயமானவர்தானே என நினைத்துக் கொண்டேன். பழக்கப்பட்ட பரிச்சயம் இல்லை, அவரது பாடல் வரிகளால் எந்நாளும் நம்மை ஏதாவதொரு சிந்தனையில் ஆழ்த்தக்கூடிய அவர் நமக்கு பரிச்சயமானவர்தானே!

இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் தோன்றும், நா.மு எந்த பெண்ணிடம் பேசி அவளது மனதை புரிந்து கொண்டு இந்த பாடலை எழுதியிருப்பார்? அவரே தன்னை ஒரு பெண் போல பாவித்து கொண்டு இந்த வரிகளை எழுதியிருப்பாரோ, இருந்தாலும் எப்படி சாத்தியமானது என ஒவ்வொரு முறையும் வியக்க வைப்பவர், இந்த பாடல் மட்டுமின்றி இதே போல பல ஆயிரம் பாடல்களை நமக்கு விட்டுச்சென்றுள்ளார். அவற்றை கேட்கும்போதெல்லாம் அந்த வியப்பு எட்டிப்பார்க்கும்!

இதே படத்தில் வரும் மற்றொரு பாடலான, “சரியா இது தவறா... இந்த உணர்வினை புரிந்திட மனதிற்கு தெரியல...” - இது அப்படியே இன்னொரு பக்கம். காதலை வெளிப்படுத்த ஓர் ஆணுக்கு இருக்கும் தயக்கத்தை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார். கல்லூரி படத்தில் இந்த பாடல்களை கேட்ட பிறகு, எனக்கும் மிகவும் பிடித்த நா.மு, நான் கொண்டாடிய நா.மு- யுவன் காம்போ அன்று வேறு பரிமாணத்தை எட்டியது. இந்த காம்போ அல்லாத நா.முவின் வேறு சில பாடல்களையும் தேடி தேடி ரசித்தேன்.

குறிப்பாக, பெண்கள் மனதை பிரதிபலிக்கும் காதல் பாடல்களுக்கு நா.மு மிகவும் அழகாக எழுதியிருப்பார். தில்லாலங்கடி படத்தில் “சொல் பேச்சு கேட்காத சுந்தரியே”, தென்னவன் படத்தில் வரும் “விநோதனே விநோதனே”, காதல் கொண்டேன் படத்தில் வரும் “நெஞ்சோடு கலந்திடு உறவாலே”, 7ஜி ரெயின்போ காலணியில் “நினைத்து நினைத்து பார்த்தால்...”, பாரிஜாதம் படத்தில் "உன்னை கண்டேனே முதல் முறை நான்", கிரீடம் படத்தில் "அக்கம் பக்கம் யாரும் இல்லா", சத்தம் போடதே படத்தில் "பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்", வெப்பம் படத்தில் "மழை வரும் அறிகுறி...", கழுகு படத்தில் "ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது"... இப்படி பல நூறு பாடல்களை விட்டுச்சென்றுள்ளார்! நான் அழகாக காதல் செய்ய, இத்தனை இத்தனை பாடல்களை விட்டுச்சென்ற நாமுவுக்கு நன்றிகள்!

காதல், நட்பு, ஏமாற்றம், நம்பிக்கை, தனிமை, கொண்டாட்டம், அழுகை என "ஒவ்வொரு எமோஷனுக்கும், ஒவ்வொரு பாடல்" நா.முவின் ப்ளேலிஸ்டில் இருக்கும். இசையமைப்பாளருக்கு ப்ளேலிஸ்ட் போட்டு கேட்ட பாடல்களையே திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருப்பது எவ்வளவு வழக்கமோ, அதே போல பிடித்த "பாடல் வரிகளுக்கென்றே" ஒரு தனி ப்ளேலிஸ்ட் அமைத்து, நாமுவின் பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருப்பதும் வழக்கம்தான். இப்படி பல நூறு பாடல்களை விட்டுச்சென்ற நாமுவின் பிறந்தநாள் இன்று! நன்றி நாமு, பிறந்தநாள் வாழ்த்துகள் விநோதனே!

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget