மேலும் அறிய

5 Years Of Raatchasan: ரத்தம் உறையும் த்ரில்லர் திரைப்படம்..கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்..5 ஆண்டுகளை கடக்கும் ராட்சசன்..!

5 Years Of Raatchasan: ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன

 இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால் நடிப்பில் வெளியானத் திரைப்படம் இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

 ராட்சசன்

 தமிழில் வெளியான சைக்காலஜிக்கல் கிரைம் த்ரில்லர்களில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த ஒரு படமாக ராட்சசன் திரைப்படம் இருக்கிறது. விறுவிறுப்பாக அடுத்த என்ன நடக்கப்போகிறது என்று பார்வையாளர்களை சீட்டின் நுனியில் வைத்திருக்கும் திரைக்கதை முதலிய காரணங்களால் ராட்சசன் திரைப்படத்தை பாராட்ட வைக்கிறது என்றாலும் முக்கியமான சிக்கல் ஒன்று இந்தப் படத்தில் பேசப்படாமல் இருக்கிறது.

 

சைகோபாத்களின் ஃப்ளாஷ்பேக்

கூகுளில் சைக்கோபாத் என்று தேடிப் பார்த்தால் ”பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய  உளவியல் ரீதியான பாதிப்பிற்குள்ளாகி மனம் பிறழ்ந்தவர்கள்” என விளக்குகிறது. இது மிக பொதுப்படையான ஒரு விளக்கம் மட்டுமே. ஆனால் இன்று உளவியல் மருத்துவத் துறையில் பல்வேறு புதிய வகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு சைக்கோ கிரிமினல் உருவாவதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.

சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள்

ஒருவகையில் இந்தக் கொலைகாரர்கள் எல்லாம் இந்த சமூகத்தால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள். சமூகத்தில் அல்லது குடும்பத்தில் தங்களது பள்ளிகளில் ஏற்றுக்கொள்ளப்படாமல் தனித்துவிடப் பட்டவர்கள். இந்தக் காரணங்களால் மனம் பிறழ்ந்து சமூக விரோதபோக்கைத் தேர்வு செய்பவர்கள். இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி, இந்தக் குற்றவாளிகளின் ஃப்ளாஷ்பேக்கை காட்டும் திரைப்படங்கள், அந்தக் கதைகளை, படத்தை நகர்த்தும் ஒரு கருவியாக மட்டுமே கையாள்கின்றனவா, அல்லது  இந்தக் குற்றவாளிகளை புரிந்துகொள்ள முயற்சிக்கின்றதா?

ராட்சசன் க்ளைமேக்ஸ்

தனது சிறு வயதில் இருந்தே ஒரு வார்த்தையால் அனைவரும் அவனை துன்புறுத்தியிருக்கிறார்கள். அவன் ஒரு கொலைகாரனாவதற்கு முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கடைசியில் அவனை ஜெயிப்பதற்காக அவனை பலவீனமாக்குவதற்காக கதாநாயகன் பயன்படுத்துவதும் அதே வார்த்தையைத்தான். அதாவது அவன் எந்த வார்த்தையால் சமூக விரோதி ஆகினானோ அதே வார்த்தையால் அவனை வெல்ல நினைப்பது சரியாகுமா?

என்ன தேவை ?

சமீபத்தில் சோனாக்‌ஷி சின்ஹா நடித்து இந்தியில் தஹாத் என்கிற ஒரு இணையத் தொடர் வெளியானது. இந்த தொடரில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை ஏமாற்றி கொலை செய்கிறான் கொலைகாரன். இந்த கதாபாத்திரம் குறித்து இந்த தொடரின் திரைக்கதை எழுத்தார்ளர்கள் பேசுகையில் அவர்களது நோக்கம் என்னவாக இருந்தது என்பதை விளக்குகிறார்கள். அதாவது ஒரு சைக்கோ கொலைகாரன் உருவாகிறான் என்றால் அதற்கு பின்னால் பல்வேறு சமூக காரணிகள் மற்றும் தனிப்பட்ட ரீதியான உளவியல் காரணங்கள் இருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த காரணங்களை நாங்கள் நேர்மையாக காட்ட நினைத்தோம்.

ஆனால் இந்த காரணங்களை அவனது செயல்களை நியாயப்படுத்த இல்லாமல் அவன் எந்த மாதிரியான ஒரு நபர் என்பதை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது. ராட்ச்ச்சசன் திரைப்படத்தில் குற்றவாளியின் பின்னணி  சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பின்னணி அவனது செய்ல்களை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட வில்லை என்பது நல்ல அம்சமாக இருந்தாலும் குற்றவாளியாக மாறியப் பின் அந்த பின்னணியை அவனுக்கே எதிராக பயன்படுத்தக் கூடிய சுதந்திரத்தை தாமாக எடுத்துக்கொள்வதே அறமற்ற ஒரு செயல்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget