PTR Slams BJP: "டெல்லியில் சர்வாதிகாரி அரசு! தமிழ்நாடு தலைகுனியாது.." பாஜக-வை விளாசிய பி.டி.ஆர்
என்றைக்கும் தமிழ்நாடு தலைகுனியாது, சுயமரியாதை இயக்கத்திலிருந்து வந்தவர்களுக்கு சுய நிர்ணயம் ஆட்சி மிகவும் முக்கியம் சர்வாதிகாரிக்கும் அடக்குமுறைக்கும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என பிடிஆர் பேசினார்.

ஒரு காலத்தில் லண்டனில் நடந்த சர்வாதிகார அரசு இன்று டெல்லியில் நடக்கிறது அதுதான் அவர்களின் முழு எண்ணம் என அமைச்சர் P.T.R. பழினிவேல் தியாகராஜன் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
திமுக பொதுக்கூட்டம்:
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்கிற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது.
இந்த பொது கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் P.T.R. பழினிவேல் தியாகராஜன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு தலைகுனியாது
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,பாஜக பீகார் உத்தரபிரதேசத்தில் ஆட்சி செய்த பின்னர் அவர்கள் தேச துரோகி என கூறுகிறார்கள் அவர்கள் என்ன செய்வோம் என கூறுவதற்கு பதிலாக இவர்கள் நல்லவர்கள் இல்லை என கூறுகிறார்கள்.
அதனால் தான் தலைவர் கூறுகிறார் எங்களுடைய தனித்துவத்தை இன வரலாற்றை பண்பாட்டை கலாச்சாரத்தை, அண்ணா காட்டி இருமொழிக்கொள்கை என்றைக்கும் எதற்காவும், மாற்றவே மாட்டோம் யாராக இருந்தால் என்ன அதற்காக தான் இந்த கூட்டத்திற்கு தலைப்பு தமிழ்நாடு தலைகுனியாது, எத்தனையோ வகையில் வஞ்சிக்கிறார்கள் மக்களுடைய வரிப்பணத்தை வைத்து, கனவில் கூட காணமுடியாத அளவிற்கு பாஜக அரசு செய்கிறது.
நிதி கேட்டால் தருவதில்லை
மேலும் சிறப்பு திட்டங்கள், பெருவெள்ளமத்திற்கு நிதி கேட்டால் தருவதில்லை,பள்ளிக்கு மற்ற மாநிலங்களில் அதிகம் நிதிநிலை அறிக்கைப்படி தமிழகத்தில் தாருங்கள் என்றால் தேசிய கல்விக்கொள்கையை பின்பற்றி மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான், 2500 கோடி தருவேன் என கூறுகிறார்கள்.மசோதாவில் இப்படி இல்லை, சட்டத்தில் இல்லாத விதிமுறைகள் போடுகிறார்கள் இதுகுறித்து கேட்டால் அப்படி தான் போடுவோம் என கூறுகிறார்கள் சர்வாதிகாரி தனம் இதுதான் எல்லா பல்கலைக்கழகத்திலும் ஆளுஞரை வைத்து, துணைவேந்தர் பதவிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
அன்று லண்டன்.. இன்று டெல்லி:
ஒரு காலத்தில் லண்டனில் நடந்த சர்வாதிகார அரசு இன்று டெல்லியில் நடக்கிறது அதுதான் அவர்களின் முழு எண்ணம், அவர்கள் தான் எல்லாம் முடிவும், எடுப்பார்கள் அவர்களுக்கு ஒத்துழைத்தால் தான் எதிர்காலம், அதற்கு வாய்ப்பு கொடுக்கமாட்டோம், நீங்கள் கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி நாங்கள் வாழ்ந்து காட்டுவோம், எங்கள் வழியில் தான் நாங்கள் செல்வோம் என்றைக்கும் தமிழ்நாடு தலைகுனியாது, சுயமரியாதை இயக்கத்திலிருந்து வந்தவர்களுக்கு சுய நிர்ணயம் ஆட்சி மிகவும் முக்கியம் சர்வாதிகாரிக்கும் அடக்குமுறைக்கும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனப்பேசினார்.
உடன் இந்த பொதுகூட்டத்தின் போது நகர செயலாளர் ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், கந்திலி ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ், மாவட்ட துணை செயலாளர் மோகன், திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் வேலூர் ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
























