Sundarrajan: "நான் இடைஞ்சலா இருப்பேனு பாக்யராஜ் நினைச்சுட்டான்.." இயக்குனர் சுந்தர்ராஜன் வேதனை
பாக்யராஜின் வளர்ச்சிப் பாதையில் தான் இடையூறாக இருப்பதாக அவர் நினைத்திருக்கலாம் என்று இயக்குனரும், அவரது ஆரம்பகால நண்பருமான சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் கங்கை அமரனுக்கு யூடியூப் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
நெருடல் வந்தது எப்படி?
"இரண்டு பேரையும் இனம்பிரிச்சு நான் பாக்கல. நீயும் நானும் சேந்துதான் பண்றோம்னு அவனும் பேசல, நானும் கேக்கல. நான் யாரையும் பெருசா விரும்பல. அவரைச் சந்தித்தோம். கலைமணிதான் வசனம் எழுதுனாரு. அப்புறம் கிழக்கே போகும் ரயிலே வசனம் செல்வராஜ். இவருக்கு வசனம் தனியா கார்டு. செல்வராஜுற்கு தனியா கார்ட், பாக்யராஜுற்கு தனியா கார்ட் போட்டாங்க.
கன்னிப்பருவத்திலே வசனம் எழுதி வில்லனா நடிச்சாரு. அதுக்கு அப்புறம்தான் புதிய வார்ப்புகள். புதிய வார்ப்புகள் நீங்கள் மிஸ் ஆகவும் அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் முதலிலே இருந்தது. நாங்க ஒன்னா இருந்தா பிரச்சினை வரும்னு அவர் நினைச்சதால, எங்களுக்குள் ஒரு நெருடல் வந்துச்சு. அவரு சைட்ல என்ன சொல்லப்போறாருனு எனக்குத் தெரியாது. இது பாத்தது. நடந்தது.
கடிதத்தில் எழுதியது என்ன?
ஒருவேளை வேற காரணங்கள் அவர்கூட சொல்லலாம். அது நியாயமான விஷயம். அவர் கதாநாயகனாக நடிக்கவும் ஒரு இடைவேளை விழுந்துடுச்சு. அவர் அங்க போயிட்டாரு. அப்புறம் கடிதம் எழுதுனாரு. அவர் நிறைய எழுதுவாரு. தங்கச்சிங்க இரண்டு பேரு, ஊருக்கு போனு சொன்னான்.
நான் காலையில எழுந்து பாத்தா அவன் ரூம்ல இல்ல. இரவோடு இரவாகவே புறப்பட்டு போயிட்டான். என்னடா நீ இத்தனை வருஷமா இருந்துட்டு, நீ திடீர்னு ஹீரோவாகிட்ட எப்படி? என்று நான் வாக்குவாதம் செய்கிறேன். அப்படி எல்லாம் போவேனா? என்று சொன்னவன் போயிட்டான். அவன்கிட்ட இருந்து ஒரு கடிதம் வருது.
நான் இடைஞ்சலா?
அந்த கடிதத்தில் நீ ஊருக்கு போ. கடையைப் பாத்துக்கோ. உன் தங்கச்சிகளை கல்யாணம் பண்ணிட்டு வா. நான் டைரக்ட் பண்றப்ப உன்னை கூப்பிட்றேன் வானு சொன்னான். நான் ஒரு கடிதம் வாங்கி நன்றினு மட்டும் எழுதி அவனுக்கு அனுப்பிட்டேன். அதுதான் எனக்கும், அவனுக்கும் கடைசி சந்திப்பு.
அவன் போற பாதையில் நான் முன்னுக்கு வரதுல இடைஞ்சல இருப்பேனு அவன் நினைச்சுருக்கலாம். ஆனா, என் வாழ்க்கையே போனதுக்கு காரணம் அவதான்னு நினைக்க வேண்டிய சூழல். வயது அப்படி. ஒன்றாக வருவோம் என்று நினைத்தேன். அவன் நினைக்காம கூட இருக்கலாம். அவன் அத்தனை படங்கள் பணியாற்றும்போது, நாம் உட்கார்ந்து பேசும்போது நீ வராத என்று சொல்லியிருந்தால் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
76 வயதான சுந்தர்ராஜன் பயணங்கள் முடிவதில்லை படங்கள் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, குங்குமச் சிமிழ், ராஜாதி ராஜா, எங்கிட்ட மோதாதே, என் ஆசை மச்சான் என பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.























