மேலும் அறிய

Rajinikanth: பிச்சைக்காரர் என நினைத்த பெண்.. கோயிலுக்கு சென்ற இடத்தில் ரஜினிக்கு நடந்த மறக்க முடியாத சம்பவம்..!

ரஜினி நடிப்பில் கடைசியாக இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியானது. தொடர்ந்து அவர் சிறப்பு வேடத்தில் நடித்த லால் சலாம் படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

நடிகர் ரஜினி பெங்களூரு கோயிலுக்கு சென்ற இடத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவம் தொடர்பாக அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்த கருத்து இணையத்தில் ட்ரெண்டாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ரஜினி. கிட்டதட்ட 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். 73 வயதானாலும் தான் என்றும் ராஜா தான் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியானது. தொடர்ந்து அவர் சிறப்பு வேடத்தில் நடித்த லால் சலாம் படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

தொடர்ந்து ரஜினியின் 170வது படமாக வேட்டையன் படம் தீவிரமாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து 171வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படியான நிலையில் ரஜினி ஆன்மீகத்திலும் மிகுந்த நாட்டம் கொண்டவர் ரஜினி என்பவர் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அவர் கோவிலுக்கு சென்ற இடத்தில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்துள்ளது. 

இதனை சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நேர்காணல் ஒன்றில் ரஜினியே தெரிவித்திருப்பார். அந்த நேர்காணலில் அவரிடம், “சிவாஜி படம் வெளியாகி பெங்களூருவில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போது சாதாரணமாக ஒரு ரூமில் நண்பர் ஒருவரிடம் நீங்கள் கோயிலுக்கு போய் விட்டு வரலாம் என சொல்கிறீர்கள். அவரோ, எதுக்கு அதெல்லாம் என கேட்கிறார். ஆனால் நீங்கள் மாறுவேடம் போட்டு கோயிலுக்கு சென்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்ததே.. அதனை பற்றி சொல்லுங்கள்” என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு, ‘அந்த கோயிலில் பெங்கால் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். நானும் அங்கு மாறு வேடத்தில் நின்றிருந்தேன். என்னை ஏற, இறங்க பார்த்துவிட்டு, ‘என்ன பிச்சைக்காரனையெல்லாம் உள்ளே விட்டுருக்காங்க’ என நினைத்துக் கொண்டார் என புரிந்தது. உடனே ஒரு 10 ரூபாயை என்னிடம் கொடுத்தார். நானும் அதனை எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டேன். அந்த சம்பவத்தை பெரிதாக நினைக்காமல், சாமி கும்பிட்டு விட்டு பிரகாரம் சுற்றி வந்தால் அங்கே அந்த பெண்மணி நின்றிருந்தார். அவர் முன்னால் நான் உடனே 200 ரூபாயை எடுத்து உண்டியலில் போடுவதை கண்டு ஒன்று புரியாமல் முழித்தார்.

பின் கீழே உட்கார்ந்து என்னை பார்த்து யோசித்து கொண்டே இருந்தார். நான் அங்கிருந்து நகர்ந்ததும் என்னை பின் தொடர்ந்து வந்தார். நான் சென்ற கார் என்னை அழைத்து செல்ல வந்தது. அதனைப் பார்த்ததும் அந்த பெண்ணுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. நான் காருக்குள் சென்றதும் மாறு வேடத்தை கலைத்து எனது முகத்தை காட்டவும் அந்த பெண்மணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகி விட்டது. ஆனால் அதற்குள் நான் அங்கிருந்து வந்து விட்டேன்” என ரஜினி தெரிவித்திருந்தார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
நாகபந்தம்
நாகபந்தம்" திரைப்படத்தில் பார்வதி ஆக  நடிக்கும் நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது  
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Embed widget