மேலும் அறிய

Kanchi Paramacharya : டிவியில் ஒளிபரப்பாகும் காஞ்சி பரமாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு.. எப்போ தெரியுமா?

காஞ்சி  சங்கர மடத்தின் 68வது பீடாதிபதி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி “பெரியவா” என்னும் தொடர் ஜனவரி 7 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. 

காஞ்சி  சங்கர மடத்தின் 68வது பீடாதிபதி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி “பெரியவா” என்னும் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

இதுகுறித்து சங்கரா தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஸ்ரீ சங்கரா டிவி வழியாக கடந்த 14 வருடங்களாக கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. எங்களது தயாரிப்பில் ஒரு புதிய சீரியல் தொடர் ஒன்றை சேர்க்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். "பெரியவா" என்ற பெயர் கொண்ட இந்த தொடர், காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் 68வது பீடாதிபதி பரமாச்சாரியார் அவர்களது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கராலயம் வளாகத்தில் இந்த தொடரின் தொடக்க விழா  நேற்று முன்தினம் நடைபெற்றது.  இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு  டாக்டர் பத்மா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். இத்தொடரை இயக்குனர் கே பாலச்சந்தருடன் பணியாற்றிய பாம்பே சாணக்யா இயற்றியுள்ளார். இவர் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகள் இயக்கியுள்ளார். 

காஞ்சி பரமாச்சாரியாரைப் பின்பற்றும் ஒரு குடும்பத்தின் பின்னணியில், நவீன காலத்தில் இந்த குடும்பம் எதிர்கொள்ளும் சவால்கள், மகாபெரியவரின் போதனைகளைப் பின்பற்றும் போது ஏற்படும் சூழ்நிலைகள், என குடும்ப நாடக பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது இத்தொடரின் கதைக்களம். நிகழ்ச்சியில் பேசிய பத்மா சுப்ரமணியம், “எந்த ஒரு கலைஞரும் வெற்றி பெற, கலை கற்று கொடுத்த குரு மற்றும் ஞானம் போதித்த குரு இருவரது பரிபூரண ஆசியும் அவசியம். நான் சேமித்த வெற்றி அனைத்தையும் மஹா பெரியவரின் காலடியில் சமர்ப்பிக்கிறேன் என பேசினார். 

சங்கரா டிவி இயக்குநர் சோனியா ராமதாஸ் பேசுகையில்,  இந்திய நாடு எண்ணற்ற மகான்களின் அருளால் ஆனது. நம் பாரம்பரிய அடையாளங்கள், கலாச்சார அம்சங்கள் அனைத்தும் பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே காலத்தின் கட்டாயம். காஞ்சி மகா பெரியவர் அதற்கான பல எளிய வழிமுறைகளை காட்டியுள்ளார். ஆகவேதான், இந்த பெரியவா தொடரை  எடுக்க முடிவு எடுத்தோம் என்று கூறினார்.

தொடர்ந்து ஆன்மீக பேச்சாளர் திரு கணேஷா சர்மா, "1960 களில் உணவுப் பற்றாக்குறை நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு. "எனக்கு தேவையானது ஒரு பிடி அரிசி" என்று அறிவித்தார் காஞ்சி பரமாச்சாரியார். அவரது கூக்குரலுக்கு செவிசாய்த்து, லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பி "ஒரு பிடி அரிசி" திட்டத்தின் ஒரு பகுதியாக மாறினார்கள்" என்று கூறினார். “பெரியவா” தொடர் ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget