மேலும் அறிய

9 Years Of Madras: அரசியலில் சுரண்டப்படும் மக்கள்.. வெளிச்சம் போட்டு காட்டிய பா.ரஞ்சித்.. 9 ஆண்டுகளை கடந்த மெட்ராஸ்..!

பா ரஞ்டித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் கடந்துள்ளன

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் இன்றுடன் 9 வருடங்களை கடந்துள்ளது.

மெட்ராஸ்

கடந்த 2014 ஆம் வருடம் மெட்ராஸ் திரைப்படம் வெளியானது. பா.ரஞ்சித் இயக்கி கார்த்தி, கேத்ரீன் டெரஸா, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

ஒரு சுவரின் கதை

காலம் காலமாக தங்களது அதிகாரத்தை காட்டும் வகையில் ஒரு சுவரை பயன்படுத்தி வருகிறார்கள் கண்ணன் தரப்பினர். கண்ணனின் தந்தை கிருஷ்ணப்பாவின் முகம் தான் அந்த சுவரில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அதை எப்படியாவது மாற்றி அந்த சுவரை பிடிக்க வேண்டும் என்பதே எதிர் தரப்பில் இருக்கும் மாரியின் ஆசை. மாரியின் விசுவாசியாக இருக்கும் அன்பு வர இருக்கும் தேர்தலில் எப்படியாவது மாரிக்காக சுவரை கைப்பற்ற முடிவு செய்கிறான். மறுபக்கம் அன்புவின் நண்பனாக காளி இந்த பிரச்சனைகள் எதிலும் தலையிடாமல் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். ட்

கலையரசி என்கிற பெண்ணின் மேல் காதல் வந்து அவர் பின்னால் சுற்றி திட்டு வாங்குகிறார். சுவரை கைப்பற்றும் இந்த போராட்டத்தில் தனது நண்பனை இழக்கிறான் காளி. இதன் பிறகு தன் மக்களை லாப நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்வது தெரிய வருகிறது. இதனையடுத்து என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும். 

அரசியலில் பந்தாடப்படும் மக்கள்


வடசென்னை மக்களின் வாழ்க்கை அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கான கால்பந்து, டான்ஸ், கானா பாடல்கள் என ஒரு பக்கம் உயிர்ப்பான ஒரு மக்களின் வாழ்க்கையை காட்டி மறுபக்கம் அரசியல் லாபத்திற்காக இந்த மக்களை ஒவ்வொரு தரப்பும் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது படத்தின் சாரம். இது எல்லாவற்றுக்கும் நடுவில் இருந்துகொண்டு எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் காளியை இந்த பிரச்சனைகளுக்குள் சூழ்நிலை இழுத்து வருகின்றன. காளியின் முன்கோபம் தனது நண்பன் மீதான அன்பு, இவை எல்லாவற்றில் இருந்தும் தன்னுடைய மக்களின் வாழ்க்கையை சுரண்டுபவர்களை அடையாளம் காட்டுகிறான் காளி.

அரசியல் ரீதியாக மெட்ராஸ் படம் ஒரு காத்திரமான படைப்பு என்றாலும் அதே அளவிற்கு அதன் அழகியல் அம்சங்களும். படத்தில் கிட்டதட்ட ஒரு கதாபாத்திரம் அளவிற்கு முக்கியத்துவம் பெறும் சுவர். ஒரு சுவர் எப்படி அதிகாரத்தின் குறியீடாக மாறுகிறது என்பதை படிப்படியாக காட்டுகிறது. அதே நேரத்தில் சுவரின் மீது தொடர்ச்சியாக அமானுஷ்யம் கட்டமைக்கப் பட்டே வருகிறது. சந்தோஷ் நாராயணின் இசையில் கீழிருந்து மேலாக செல்லும் கேமராவில் பார்க்க ஒரு நொடி சுவரை பார்த்து பயப்படும் அளவிற்கான ஒரு பிம்பம் படத்தில் உருவாகிவிடுகிறது.

சோம்பேறித் தனமாக இளைஞர்கள் தங்களது பொழுதை எதுவும் செய்யாமல் பார்க்கில் படுத்துக்கொண்டு வெயிலில் சோம்பல் முறித்தபடி இருப்பது மாதிரியான காட்சிகள் படத்தில் எந்த முக்கியமான நகர்வையும் சொல்லவில்லை என்றாலும் பார்வைக்கு உறுத்தாமல் கதை சொல்லலுடன் இசைந்திருந்தன காட்சிகள்.

மாரியின் உண்மையான வேஷம் தெரிந்து காளி சுவரின் மேல் பெயிண்டை வீசியதும் அவரைத் தொடர்து எல்லாரும் வீசுகிறார்கள். தங்களுடைய அரசியல் லாபத்திற்காக மக்களை சுரண்டும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் மாரியை அடித்து விரட்டுகிறார்கள். ஏதோ ஒரு வகையில் இந்த அரசியல் படம் எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget