மேலும் அறிய

Pradeep Ranganathan: "சார் சொல்ல மாட்டியா” .. வெற்றிமாறனை பாராட்டிய பிரதீப் ரங்கநாதனுக்கு நேர்ந்த கதி..!

விடுதலை படத்தை பாராட்டி ட்வீட் போட்ட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்துள்ளனர். 

விடுதலை படத்தை பாராட்டி ட்வீட் போட்ட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்துள்ளனர். 

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார். மேலும் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன்,  கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

முன்னதாக விடுதலை  படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தியேட்டரில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.  நாளுக்கு நாள் காட்சிகள் அதிகமாகி ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நடிகர் சூரி தொடங்கி படத்தில் நடித்த பலரின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சூரியும் அறிக்கை ஒன்றை வெளியீட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். 
 
அதேசமயம் பிரபலங்கள் பலரும் விடுதலை படத்தை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலை படம் சூப்பராக இருந்ததாகவும், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” எனவும் தெரிவித்திருந்தார். 

இதனைக் கண்ட இணையவாசிகள் பிரதீப் மீது அதிருப்தியடைந்து சரமாரியாக கருத்துகளை பதிவிட தொடங்கினர். ஒருவர், படத்தை பார்த்து பாராட்டி கருத்துப்போடுவது பாராட்டுக்குரிய  விஷயம் தான். ஆனால் சமூகவலைத்தளத்தில் வெற்றிமாறனின் பெயரை குறிப்பிடும் போது தயவு செய்து வெற்றிமாறன் சார் என்று குறிப்பிடுங்கள்.  இது எனது வேண்டுகோள் என தெரிவித்திருந்தார். 

இதேபோல் இன்னொரு இணையவாசி, ஒரு படம் நல்லா போனா போதுமே மரியாதை கிடையாதா எனவும், வெற்றிமாறனை சார் என சொன்னால் குறைந்து விடுவீர்களோ என சரமாரியாக விமர்சிக்க தொடங்கினர். அதேசமயம் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிட்டதால் அவரது ட்விட்டர் பக்கம் கருத்து மோதலால் நிரம்பி வழிந்தது.  

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக “லவ் டுடே” படத்தை இயக்கி அப்படம் மூலம் ஹீரோவாக பரிணாமித்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget