மேலும் அறிய

Nayanthara Interview: குழந்தை பிறந்தா நடிக்கக்கூடாதா? விமர்சனங்களுக்கு ஓப்பனாக பதிலளித்த நயன்தாரா!

“திருமணத்திற்கு பின் உங்கள் வாழ்க்கை முழுமை அடைகிறது. அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மென்மேலும் உயரவேண்டிய என்ற எண்ணமும் வருகிறது” என திருமணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரகளுடன் நடித்து வந்த நயன்தாரா ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு  2013 ஆம் ஆண்டு வெளியான  “ராஜா ராணி” படம் மூலமாக கம்-பேக் படமாக கொடுத்தார். அதன் பின்னர் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வரும் கதைகளை தேர்வு செய்து நடித்த அவர், மாயா, டோரா, அறம், அய்ரா, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல  படங்களில் நடித்தார். அவரின் படங்களுக்கு கதாநாயகர்களுக்கு வருவது போல ரசிகர் கூட்டம் அலைமோத அவருக்கு “லேடி சூப்பர்ஸ்டார் நயன்” என்ற பட்டமும் வந்து சேர்ந்தது. 

இதனிடையே தனது நீண்ட நாள் காதலாரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதத்தில்  மணந்து கொண்ட நயன், இனிமேல் படம் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழ், மலையாளம், தெலுங்கு , ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் ரவுண்டு கட்டி படங்களில் நடித்து வருகிறார் நயன்.  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

அந்த வகையில் தற்போது மாயா இயக்குநர் அஸ்வின் சரவணனுடன் மீண்டும் சேர்ந்து கனெக்ட் என்ற 99 நிமிடம் ஓடக்கூடிய பேய் படத்தில் நடித்துள்ளார், இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதியும், ஹிந்தியில் டிசம்பர் 30 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பேய் பிடித்த குழந்தையின் அம்மாவாக அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார் நயன். 

அவரிடம் பல கேள்விகளை கேட்ட தொகுப்பாளர் டிடி நீலகண்டன், கல்யாணம் ஆன பிறகு குழந்தை வந்த பிறகு, ஏன் நடிகைகளின் மீது இந்த சமூகம் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறதே? என்ற கேள்வியை முன்வைத்தார். 

அதற்கு பதிலளித்த நயன், “ ஏன், இப்படி எனக்கும் புரியவில்லை... இதை ஒரு கேள்வியாக கேட்பதற்கு, இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. கல்யாணம் முடிந்த பின் வழக்கம் போல, அந்த கணவன் வேலைக்கு சென்றுவிடுவான். ஆனால், பெண்களுக்கு அது வாழ்க்கையின் இடைவேளையாக கருதப்படுகிறது.

கல்யாணம் என்பது, அப்படிப்பட்ட விஷயம் அல்ல. திருமணத்திற்கு பின் உங்கள் வாழ்க்கை முழுமை அடைகிறது. அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மென்மேலும் உயரவேண்டிய என்ற எண்ணமும் வருகிறது. ஆண்கள், பொறுப்பாளராக மாறிவிட வேண்டும் என்பதும், பெண்கள்.. போதும் போதும் நீ வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்பது போன்ற சூழல் இருக்கிறது.

                           

என் மனநிலையிலும், என்னிலும், என்னை சுற்றியுள்ளவர்களிடமும் எந்தவொரு மாற்றமும் இல்லை. மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. எனக்கு அப்படிதான் இருக்கிறது. மற்றவர்களுக்கும் இது போன்ற மனநிலை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எனக்கு நிச்சயம் முடிந்த பின்னரும், திருமணம் முடிந்த பின்னரும் என் வாழ்க்கையில், நான் இன்னும் சாதிக்க முடியும் என்ற எண்ணமே வருகிறது. இது ஒரு அழகான மனநிலை. திருமணத்தில் இரு இதயங்களும் இரு ஆத்மாக்களும் ஒன்றினைக்கிறது. இதை ஒரு புதிய அத்தியாத்தின் தொடக்கமாக நினைத்தால் வாழ்க்கை இன்னும் கூட அழகானதாய் மாறிவிடும்" என்று தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay - Trisha: விஜய் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா.. நன்றி தெரிவித்த தவெகவினர்!
CM Vijay - Trisha: விஜய் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா.. நன்றி தெரிவித்த தவெகவினர்!
கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
ரசிகன் டூ தனிச் செயலாளர்..என்னுடைய கடவுள்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரூட் ஜகதீஷ்
ரசிகன் டூ தனிச் செயலாளர்..என்னுடைய கடவுள்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரூட் ஜகதீஷ்
நூறு சாமி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சுவாசிகா
நூறு சாமி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சுவாசிகா

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
Tamilnadu Round Up: திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
Consecutive holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Embed widget