மேலும் அறிய

கோமாவில் இருந்த மகளுக்காக போராடிய பிரபல நடிகை.. பிணவறையில் விட்டு சென்ற கணவர் - வேதனையின் உச்சம்!

மகளின் மரணத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் அளவிற்கு அந்த நடிகை மட்டுமின்றி அவரது குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. அந்த நடிகை யார் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

நடிகர், நடிகைகளின் சினிமா வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியானதாக தெரிந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பல ரகசியங்களும், வேதனைகளும் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆகணும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, அவர்கள் என்ன செய்தாலும் சில விஷயங்கள் அவர்களை தாண்டி வெளியே கசிந்து விடுகிறது.

அதில் இன்பமும் இருக்கும், துன்பமும் இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை தான் அந்த நடிகை வாழ்ந்து வந்துள்ளார். தனது மகளின் மரணத்திற்காக இறைவனிடம் வேண்டும் அளவிற்கு அந்த நடிகையின் சோகம் இருந்துள்ளது என்றால் நம்ப முடிகிறது? அப்படி என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளும் முன் அந்த நடிகை யார் என்பதை பார்ப்போம்.


கோமாவில் இருந்த மகளுக்காக போராடிய பிரபல நடிகை.. பிணவறையில் விட்டு சென்ற கணவர் - வேதனையின் உச்சம்!

அந்த நடிகை வேறு யாருமில்லை, மௌஷூமி சட்டர்ஜி. பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். வினோத் மெஹ்ரா, அமிதாப் பச்சன் என்று பல மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். ரசிகர்களால் அழகு தேவதை என வர்ணிக்கப்பட்டவர். பாலிவுட்டில் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்தில் அதிக சம்பளம் பெரும் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். தனது 10 வயதில் சினிமாவில் அறிமுகமான மௌஷூமி, 15 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர் ஜெயந்த் முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். 17 வயதில் பெண் குழந்தைக்கு அம்மாவானார். அதன் பிறகு 25 வயதில் 2ஆவது பெண் குழந்தையும் பெற்றெடுத்தார்.

சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்த போதும் கூட எந்தவித சர்ச்சையிலும் அவர் சிக்கவில்லை. இவரது மூத்த மகள் பாயல் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. 2018 ஆம் ஆண்டு திடீர் என நீதிமன்ற படி ஏறிய இவர்... தனது மகள் பாயலுக்கு தன்னை பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதற்கு காரணம் பாயல் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் 3 ஆண்டுகள் கோமாவில் இருந்தார்.


கோமாவில் இருந்த மகளுக்காக போராடிய பிரபல நடிகை.. பிணவறையில் விட்டு சென்ற கணவர் - வேதனையின் உச்சம்!

நோய்வாய்ப்பட்டு தனது மகள் கோமாவில் இருந்த போது அவரை பார்க்க விடாமல் அவரது கணவரும் குடும்பத்தினரும் தடுத்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக அந்த சமயத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்... "என்னுடைய மகள் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதோடு கோமாவில் இருந்து போராடிக் கொண்டிருந்த போது அவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். அவள் அழகானவள். இனிமேலும் அவள் வேதனையை அனுபவிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. இதற்கு அவள் அந்த இறைவனிடமே சென்று விடலாம் என கூறினார்".

அவரது வேண்டுதலும் நிறைவேறியது. 2019ல் அவரது மகள் பாயல் உயிரிழந்தார். கடைசி வரை பாயலின் முகத்தை மௌஷூமி பார்க்கவே இல்லை. இதற்கு மருமகனும் அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். தனது மகளின் பாதுகாப்பிற்காக தன்னை பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்ற நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, மகளின் இறுதி சடங்கை கூட அவர்களே செய்தனர். மருத்துவமனையில் இறந்த மகளுக்கான மருத்துவமனை பில்லை கூட அவர்கள் கட்டவில்லை. இதன் காரணமாக அவளை பிணவறைக்கு மாற்றிவிட்டனர் என்று வேதனையோடு கூறி இருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

RJ Balaji: தியேட்டரில் சாமியாட ஆள் கூட்டிட்டு வர்றோமா? - டென்ஷனான ஆர்.ஜே.பாலாஜி!
RJ Balaji: தியேட்டரில் சாமியாட ஆள் கூட்டிட்டு வர்றோமா? - டென்ஷனான ஆர்.ஜே.பாலாஜி!
Warrant Series Review : ஓடிடியில் வெளியாகியுள்ள வாரண்ட் வெப் சீரிஸ் எபிசோட் 1 விமர்சனம்
Warrant Series Review : ஓடிடியில் வெளியாகியுள்ள வாரண்ட் வெப் சீரிஸ் எபிசோட் 1 விமர்சனம்
தெளிவாக சிந்திக்கும் இயக்குநர்களில் பாண்டிராஜ் ஒருவர்..இயக்குநர் மிஷ்கின் பேச்சு
தெளிவாக சிந்திக்கும் இயக்குநர்களில் பாண்டிராஜ் ஒருவர்..இயக்குநர் மிஷ்கின் பேச்சு
'தங்களின் நட்பிற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம்' - சிவா & பிரேம்ஜி
'தங்களின் நட்பிற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம்' - சிவா & பிரேம்ஜி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
TN Govt Power Cut: நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
Vijay vs Eps : வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
TVK VIJAY: ”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
Embed widget