மேலும் அறிய

கோமாவில் இருந்த மகளுக்காக போராடிய பிரபல நடிகை.. பிணவறையில் விட்டு சென்ற கணவர் - வேதனையின் உச்சம்!

மகளின் மரணத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் அளவிற்கு அந்த நடிகை மட்டுமின்றி அவரது குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. அந்த நடிகை யார் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

நடிகர், நடிகைகளின் சினிமா வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியானதாக தெரிந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பல ரகசியங்களும், வேதனைகளும் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆகணும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, அவர்கள் என்ன செய்தாலும் சில விஷயங்கள் அவர்களை தாண்டி வெளியே கசிந்து விடுகிறது.

அதில் இன்பமும் இருக்கும், துன்பமும் இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை தான் அந்த நடிகை வாழ்ந்து வந்துள்ளார். தனது மகளின் மரணத்திற்காக இறைவனிடம் வேண்டும் அளவிற்கு அந்த நடிகையின் சோகம் இருந்துள்ளது என்றால் நம்ப முடிகிறது? அப்படி என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளும் முன் அந்த நடிகை யார் என்பதை பார்ப்போம்.


கோமாவில் இருந்த மகளுக்காக போராடிய பிரபல நடிகை.. பிணவறையில் விட்டு சென்ற கணவர் - வேதனையின் உச்சம்!

அந்த நடிகை வேறு யாருமில்லை, மௌஷூமி சட்டர்ஜி. பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். வினோத் மெஹ்ரா, அமிதாப் பச்சன் என்று பல மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். ரசிகர்களால் அழகு தேவதை என வர்ணிக்கப்பட்டவர். பாலிவுட்டில் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்தில் அதிக சம்பளம் பெரும் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். தனது 10 வயதில் சினிமாவில் அறிமுகமான மௌஷூமி, 15 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர் ஜெயந்த் முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். 17 வயதில் பெண் குழந்தைக்கு அம்மாவானார். அதன் பிறகு 25 வயதில் 2ஆவது பெண் குழந்தையும் பெற்றெடுத்தார்.

சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்த போதும் கூட எந்தவித சர்ச்சையிலும் அவர் சிக்கவில்லை. இவரது மூத்த மகள் பாயல் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. 2018 ஆம் ஆண்டு திடீர் என நீதிமன்ற படி ஏறிய இவர்... தனது மகள் பாயலுக்கு தன்னை பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதற்கு காரணம் பாயல் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் 3 ஆண்டுகள் கோமாவில் இருந்தார்.


கோமாவில் இருந்த மகளுக்காக போராடிய பிரபல நடிகை.. பிணவறையில் விட்டு சென்ற கணவர் - வேதனையின் உச்சம்!

நோய்வாய்ப்பட்டு தனது மகள் கோமாவில் இருந்த போது அவரை பார்க்க விடாமல் அவரது கணவரும் குடும்பத்தினரும் தடுத்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக அந்த சமயத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்... "என்னுடைய மகள் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதோடு கோமாவில் இருந்து போராடிக் கொண்டிருந்த போது அவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். அவள் அழகானவள். இனிமேலும் அவள் வேதனையை அனுபவிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. இதற்கு அவள் அந்த இறைவனிடமே சென்று விடலாம் என கூறினார்".

அவரது வேண்டுதலும் நிறைவேறியது. 2019ல் அவரது மகள் பாயல் உயிரிழந்தார். கடைசி வரை பாயலின் முகத்தை மௌஷூமி பார்க்கவே இல்லை. இதற்கு மருமகனும் அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். தனது மகளின் பாதுகாப்பிற்காக தன்னை பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்ற நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, மகளின் இறுதி சடங்கை கூட அவர்களே செய்தனர். மருத்துவமனையில் இறந்த மகளுக்கான மருத்துவமனை பில்லை கூட அவர்கள் கட்டவில்லை. இதன் காரணமாக அவளை பிணவறைக்கு மாற்றிவிட்டனர் என்று வேதனையோடு கூறி இருந்தார்.

தலைப்பு செய்திகள்

அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget