மேலும் அறிய

Ragavan: காதலுக்கு எதிர்ப்பு.. போலீஸ் ஸ்டேஷனில் கல்யாணம்.. இயக்குநர் ராகவனின் காதல் கதை!

நான் ஒவ்வொரு படத்துக்கும் கதை பண்ணுவதற்கு அதிக இடைவெளி எடுத்துக் கொள்வேன். அதுதான் 10 ஆண்டுகளில் 4 படங்கள் மட்டுமே பண்ண காரணமாக அமைந்தது

காதல் படம் பார்த்து விட்டு தான் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என தான் முடிவெடுத்ததாக இயக்குநர் ராகவன் தெரிவித்துள்ளார். 

மஞ்சப்பை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரானார் ராகவன். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து கடம்பன், மை டியர் பூதம் என 3 படங்கள் இயக்கியுள்ளார். அடுத்ததாக ஒரு படம் இயக்கி வருகிறார். இயக்குநர் ராகவன் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி தெரிவித்துள்ளார் 

அதில், “நான் ஒவ்வொரு படத்துக்கும் கதை பண்ணுவதற்கு அதிக இடைவெளி எடுத்துக் கொள்வேன். அதுதான் 10 ஆண்டுகளில் 4 படங்கள் மட்டுமே பண்ண காரணமாக அமைந்தது. என்னுடைய பாட்டி சென்னைக்கு வந்து ஒரு மாதம் இருந்தார்கள். அதைத்தான் மஞ்சப்பை கதையாக அமைந்தேன். 

என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தது இயக்குநர் பாலாஜி சக்திவேல் தான். அவர் இயக்கிய காதல் படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்து கொண்டிருந்தது.நான் அப்போது பிரபலமான கேசட் கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கடைக்கு பின்னால் தான் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்ததை பார்த்தேன். என்னுடைய அப்பா மதுரையில் ராமராஜன் நடத்திய தியேட்டரில் வேலை பார்த்தார். அதற்கு முன்பு கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் பணியாற்றினார். நாங்கள் எப்போதும் தியேட்டரில் தான் இருப்போம். 

காதல் படம் ரிலீசான பிறகு தியேட்டரில் பார்த்து விட்டு ஒரே அழுகை. சினிமா தான் நம் வாழ்க்கை என்பதை மறந்து அதை வேற எங்கேயோ தேடிக் கொண்டிருக்கிறோம். அப்ப எனக்கு கல்யாணமாகி 3 மாதம் தான் ஆகியிருந்தது. நாங்கள் காதல் திருமணம் செய்துக்கொண்டோம். காவல் நிலையத்தில் தான்  கல்யாணம்  நடந்தது. அங்கிருந்து சென்னை வந்த பிறகு பாலாஜி சக்திவேலிடம் சேர வேண்டும் என காத்திருந்தேன். அவருடைய குடும்பத்துடன் நல்ல பழக்கம் இருந்தது. 

இதன்பின்னர் இயக்குநர் ஜி.வி.குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அப்போது பெப்சி விஜயனிடம் வேலை பார்த்தேன். அதன்பின்னர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். என்னுடைய தம்பி உதவி எடிட்டராக இருந்தால் அவனுடைய உதவியால் வாய்ப்பு கிடைத்தது. களவாணி படத்தில் போஸ்ட் புரொடக்‌ஷனில் வேலை செய்தேன். பின்னர் வாகை சூடவா படம் முழுவதும் பணியாற்றி விட்டு இனி இயக்குநர் ஆகலாம் என சற்குணத்திடம் இருந்து வெளியேற முடிவு செய்தேன். 

அதைக் கேட்டு விட்டு சற்குணம் கதை இருந்தால் சொல் என கூறினார். நானும் கதை சொன்னால் இதெல்லாம் ஒரு கதையா என சத்தம் போட்டார். இரண்டாவதாக நான் சொன்ன கதை தான் மஞ்சப்பை. என் வாழ்க்கையில் நடந்த 10 காட்சிகளை அடிப்படையாக கொண்டு கதை உருவாக்கி பாட்டிக்கு பதில் தாத்தாவாக மாற்றினேன். கதையை சொன்னதும் நான் தான் இயக்குவேன் என இயக்குநர் சற்குணம் என சொன்னார். 

முதலில் அந்த கேரக்டரில் ஆடுகளம் ஜெயபாலன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா போன்றோர் பெயரை பரிசீலித்த நிலையில் சற்குணம் தான் ராஜ்கிரண் பெயரை சொன்னார். விமலிடம் கதை சொன்னதும் ராஜ்கிரண் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னார். விமல் கதை கேட்டும் அழுதார்” என இயக்குநர் என்.ராகவன் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!
மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!
தனுஷ் படத்தை இயக்கவில்லை...ஜனநாயகன் இயக்குநர் எச் வினோத் விளக்கம்
தனுஷ் படத்தை இயக்கவில்லை...ஜனநாயகன் இயக்குநர் எச் வினோத் விளக்கம்
Thalapathy Vijay: இன்றே சினிமாவில் கடைசி நாள்.. விலகும் விஜய்.. சோகத்தில் ரசிகர்கள்!
Thalapathy Vijay: இன்றே சினிமாவில் கடைசி நாள்.. விலகும் விஜய்.. சோகத்தில் ரசிகர்கள்!
ஃபர்ஸ்ட் ஷோவுக்கு பார்க்க கிட்னி விக்கணும் போலயே? 'ஜனநாயகன்' டிக்கெட் அலப்பறை!
ஃபர்ஸ்ட் ஷோவுக்கு பார்க்க கிட்னி விக்கணும் போலயே? 'ஜனநாயகன்' டிக்கெட் அலப்பறை!

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
Embed widget