மேலும் அறிய

Madhampatty Rangaraj: குழந்தைக்கு நான் தான் அப்பா.. ஒருவழியாக ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தனது மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் வந்தது பேசுபொருளாக மாறியது.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு தான் தான் தந்தை என்பதை பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். இதன்மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படியான நிலையில் விஐபி வீட்டு நிகழ்ச்சி என்றாலே அதில் சமையல் மாதம்பட்டி ரங்கராஜ் என்னும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை அடைந்தார். அப்படியான தொழில் வாழ்க்கை வளர்ச்சி, தனிப்பட்ட வாழ்க்கையால் தலைகீழானது என சொல்லலாம். 

திருமணம் செய்து ஏமாற்றியதாக புகார்

மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படியான நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இருவருக்கும் இடையே உறவு இருந்து வருவதாக தகவல் வெளியாகி புகைப்படங்களும் வைரலான நிலையில் சில மாதங்களுக்கு முன் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 

இந்த புகைப்படத்தை ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு மறுநாளே தான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் அதிர்ச்சி கொடுத்தார். 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தான் கருவுற்றதால் அவர் தன்னிடமிருந்து விலகியதாகவும் தனது குற்றச்சாட்டில் தெரிவித்திருந்தார். 

தொடர்ச்சியாக மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ்

ஆனால் தன் மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். அதேசமயம் ஜாய் கிரிசில்டா நீங்கள் எங்கேயும் தப்ப முடியாது என்கிற ரீதியில் தொடர்ச்சியாக இருவரும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இப்படியான நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை ஜாய் கிரிசில்டா நாடினார். அவர் அளித்த மனுவில், தான் கருவுற்றிருப்பதால் தன்னால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. 

அதனால் தன்னுடைய பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை காவல்துறை மற்றும் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு தனது மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் வந்தது பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

தந்தை என ஒப்புக்கொண்டார்

இந்நிலையில் ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதையும், தன்னுடைய குழந்தைக்கு அப்பா என்பதையும் சமீபத்தில் நடந்த விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் மற்றும் மகளிர் குற்ற தடுப்பு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. குழந்தைக்கு தந்தை தான் என ஒப்புக்கொண்டதால் டிஎன்ஏ பரிசோதனை தேவையில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்டாலும், அவரின் தொழில் வாழ்க்கையில் இது என்ன மாதிரியான மாற்றத்தை உண்டாக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
Embed widget