மேலும் அறிய

‛பாக்யராஜூக்கு பாடல் எழுத எரிச்சலா இருக்கும்...’ மேடையில் போட்டு உடைத்த கவிஞர் வாலி!

பாக்யராஜ் பற்றி பேசிய கவிஞர் வாலி, பாக்யராஜ் உடன் 6 படங்களில் பணியாற்றியதாகவும், அப்போது தான் மோசமான அனுபவங்களை பெற்றதாக, அவரை வைத்துக் கொண்டே குற்றம்சாட்டினார்.

நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, ஏன்... இசையமைப்பாளராக கூட நாம் அனைவரும் அறிந்தவர் பாக்யராஜ். பாக்யராஜ் படத்தில் பாடல்கள் எப்போதும் தனித்துவமாக இருக்கும். அந்த தனித்துவத்திற்கு பெரும்பாலும் பக்க பலமாக இருந்தவர் இளையராஜா. ஒரு கட்டத்தில் இளையராஜா உடன் மோதல் ஏற்பட, தானே இசையமைப்பாளராக மாறி, அதிலும் வெற்றி பெற்றவர் பாக்யராஜ்.

பாக்யராஜ் எப்படி, இயக்குனராக இருந்து பல நடிகர்களுடன், கலைஞர்களுடன் பணியாற்றியிருப்பாரோ, அதே போல் தான், இசையமைப்பாளராக பல பாடகர்கள், பாடலாசிரியர்களிடமும் பணியாற்றி இருப்பார். அந்த வகையில், மறைந்த இளைமை கவிஞர் வாலி உடன், பாக்யராஜ் பணியாற்றிய காலங்கள், மிகவும் சுவாரஸ்யமானது என்கிறார்கள்.

பொதுவாகவே படங்களை எடுப்பதைப் போன்றே, பாடல்களையும் தேர்வு செய்துள்ளார் பாக்யராஜ். இதற்காக, கவிஞர் வாலி போன்ற பெரிய பாடலாசிரியர்கள் எல்லாம், அவரிடம் படாதபாடு பட்டுள்ளனர். ‛இனிமே இவருக்கு பாடலே’ எழுதக்கூடாது என்றெல்லாம் முடிவு செய்து, பலமுறை அதற்கான முயற்சியையும் எடுத்துள்ளார், வாலிப கவிஞர் வாலி.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பாக்யராஜ் பற்றி பேசிய கவிஞர் வாலி, பாக்யராஜ் உடன் 6 படங்களில் பணியாற்றியதாகவும், அப்போது தான் மோசமான அனுபவங்களை பெற்றதாக, அவரை வைத்துக் கொண்டே குற்றம்சாட்டினார். இதோ வாலியின் உரை...

’‛நம்ப மாட்டீங்க... ராப்பகலா சோறு தின்னாம, பத்து, பனிரெண்டு நாள், கையில ஆர்மோனியத்தை வெச்சிட்டு, கண்ணெல்லாம் வெளியே வந்திடுச்சு. அந்த அளவுக்கு போட்டு வருத்திகிட்டு, 6 படம், பாக்யராஜ் மியூசிக்ல பாடல் எழுதியிருக்கேன். நல்ல ரசிகர், நல்ல மரியாதை கொடுப்பார். ஆனால், அவரிடம் ஒரே ஒரு கஷ்டம். அந்த சிகரெட்டை எடுத்து புகையை விட்டார்னா... அவர் புகையையெல்லாம் நான் வாங்குவேன். 

என்ன விசயத்தில, அவர் மீது எரிச்சல் வரும்னா... ஒரு பல்லவி எழுதி கொடுத்தா, நான் தூங்கி எழுந்து, விடிஞ்சு பூர்ணிமா டிபன் செய்து கொடுத்தும் அதை படிச்சுட்டு இருப்பாரு. ஒரு முடிவுக்கு வரமாட்டான் அந்த ஆளு. நான் உடனே முடிவு பண்ணிடுவேன்... ‛இனிமே இந்த ஆளுட்ட அடுத்த பாட்டு எழுதவே கூடாது...’ என்று. அப்படி முடிவு பண்ணிட்டு இருக்கும் போது தான், என் மைத்துனன் சாமிநாதனிடம் ஒரு கவர் வந்து சேரும். கவர்ல 5 ஆயிரம் ரூபாய் இருக்கும். அப்புறம் எப்படி எழுத முடியாதுனு சொல்ல முடியும்’’

என்று கவிஞர் வாலி, பேசியிருந்தார். தான் இசையமைப்பாளராக வர வேண்டும் என்று முடிவு செய்ததுமே, பாக்யராஜ் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். முறையாக இசையை கற்று, அதற்கான பயிற்சிகளை இரவு, பகலாக மேற்கொண்டு, அதன் பிறகே இசையமைப்பாளர் ஆனார். அவரின் இசையில் பல ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் பலருக்கு அது பாக்யராஜின் இசை என்பதே தெரியாது. அந்த அளவிற்கு பாக்யராஜ், தனித்துவமான இசையை தந்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget