மேலும் அறிய

சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்.. அப்பா இதுக்காகத்தான் இந்த பாட்ட எழுதுனாங்க.. மனம் திறந்த கண்ணதாசன் மகள்

மதுவாலோ, மாதுவாலோ அப்பா பணத்தை இழக்கவில்லை. அதுபோல் மது அருந்தினால் தான் எழுதுவார் என்பதும் பொய். கட்சி ஆரம்பித்து, ஜாமீன் கையெழுத்து போட்டுதான் பணத்தை இழந்தார்.

சிலர் சிரிப்பார் சிலர், அழுவார் நான் சிரித்துக்கொண்டே, அழுகின்றேன்

இந்தப் பாடல் வரிகள் நாம் அனைவருமே நம் வாழ்வில் என்றேனும் ஒருநாளாவது ஒரு பொழுதாவது நம் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்திருப்போம். கண்ணதாசனின் கவிதைகள் ஒவ்வொன்றும் தொட்டில் தொடங்கி இடுகாடு வரை நம் வாழ்க்கை நிகழ்வுகளுடன் தொடர்புடையது. அப்பேற்பட்ட கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கை பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் அவரது மகள் ரேவதி சண்முகம்.

அப்பாவைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். எல்லோரும் சொல்வதுபோல் அப்பா குடிகாரர் இல்லை. அவர் ஒருநாள் போதையில் உளறியோ, தள்ளாடியோ நாங்கள் பார்த்ததில்லை. அப்பா மதியம் வீட்டுக்கு வருவார் ஒரு கோப்பையில் கால்வாசி மதுவும் மீதம் தண்ணீரும் சேர்த்து அருந்துவார். சாப்பிட்டுவிட்டு உறங்கிவிடுவார். மாலையில் ஸ்டூடியோ செல்வார்.

பணி முடித்து இரவு திரும்பியவுடன் அதேபோல் அதே அளவில் தான் அருந்துவார். அவரை உளறி, தள்ளாடி நாங்கள் பார்த்ததில்லை. அதுபோல் மதுவும் மாதுவும் அப்பா பெயருடன் சேர்த்து வைத்துள்ளார்கள். அப்பா பெண்களுடன் பழகியது எங்களுக்கு சிறு வயதில் தெரியாது. ஆனால் பின்னாளில் அம்மா, பெரியம்மாவிடம் கேட்கும்போது அப்பா எதையும் எங்களிடம் மறைத்ததில்லை எனக் கூறுவார்கள்.

அப்பா யாரோ ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்து போட அதனால் வீட்டை இழந்தோம். அந்தத் தகவலை அப்பாவுக்கு சொன்ன நேரத்தில் அவர் எழுதிய பாடல்தான் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் என்ற பாடல்.


சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்.. அப்பா இதுக்காகத்தான் இந்த பாட்ட எழுதுனாங்க.. மனம் திறந்த கண்ணதாசன் மகள்

அப்பா ஆயிரக்கணக்கில் பாடல்கள் எழுதியிருந்தாலும் எனக்கு உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் தான் ரொம்பப் பிடிக்கும். இப்போது கேட்டாலும் எனக்குக் கண்ணீர் வந்துவிடும். அப்பா எப்படி இத்தனை சோகங்களுக்கு மத்தியிலும் சிரித்துக்கொண்டே சிறந்த படைப்புகளைக் கொடுத்தார் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும்.

அப்பா, பாடல்களை எழுதுவதைக் குறைத்தது குறித்து நான் கேட்டிருக்கேன். அப்பாவை ஒரு இயக்குநர் மிகவும் டார்ச்சர் செய்தார். அதனாலேயே அப்பா திரையை விட்டு விலகினாரோ என்று எனக்குத் தோன்றியதுண்டு. அதன்பிறகு அப்பா சில பேனர்களுக்கு மட்டுமே எழுதினார்.

பின்னர் அப்பா ஆன்மிக எழுத்தில் நாட்டம் செலுத்தினார். அப்பா மறைவுக்குப் பின்னர் நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். சிலர் பயங்கர நெருக்கடி கொடுத்தனர். அப்பா இறந்த பின்னர் எங்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.

மதுவாலோ, மாதுவாலோ அப்பா பணத்தை இழக்கவில்லை. அதுபோல் மது அருந்தினால்தான் எழுதுவார் என்பதும் பொய். கட்சி ஆரம்பித்து, ஜாமீன் கையெழுத்து போட்டுதான் பணத்தை இழந்தார்.

இவ்வாறு ரேவதி சண்முகம் தனது தந்தை கண்ணதாசன் பற்றி கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Jananayagan Release: ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? சென்சார் சர்ச்சை குறித்து மனம் திறந்த தயாரிப்பாளர்!
Jananayagan Release: ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? சென்சார் சர்ச்சை குறித்து மனம் திறந்த தயாரிப்பாளர்!
RJ Balaji: தியேட்டரில் சாமியாட ஆள் கூட்டிட்டு வர்றோமா? - டென்ஷனான ஆர்.ஜே.பாலாஜி!
RJ Balaji: தியேட்டரில் சாமியாட ஆள் கூட்டிட்டு வர்றோமா? - டென்ஷனான ஆர்.ஜே.பாலாஜி!
Warrant Series Review : ஓடிடியில் வெளியாகியுள்ள வாரண்ட் வெப் சீரிஸ் எபிசோட் 1 விமர்சனம்
Warrant Series Review : ஓடிடியில் வெளியாகியுள்ள வாரண்ட் வெப் சீரிஸ் எபிசோட் 1 விமர்சனம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget