மேலும் அறிய

''தமிழன்னு சொன்னாலே இந்த கேரக்டர்ஸ்தானா?'' - ஃபார்முலாவை மாற்றாத மலையாள சினிமாக்கள்!

திரையில் கையாளப்படும் மொழியின் மக்களை இந்த  திரைத்துறை எப்போதும் சரியாக கையாள்கிறதா என்ற கேள்வி அவ்வப்போது எழுவதும் உண்டு. அதில் எப்போதுமே மலையாள திரையுலகம் தெரிந்தோ தெரியாமலோ(!) ஒரு ஃபார்முலாவை கையாண்டுகொண்டே வருகிறது. அது தமிழர்கள் மீதான பார்வைதான்

மொழி, எல்லை என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சிறகடித்து பறப்பது கலை. திரைப்படமோ, இசையோ உலகின் எந்த மூலையில் இருந்தும் யாராலும் ரசிக்கப்படலாம். குறிப்பாக இந்தியா பல மொழிகளை கொண்ட நாடு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என சினிமாவும், இசையுமே இங்கு பல வகையாக நமக்கு கிடைக்கும். வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகம் எல்லாவற்றையும் எல்லாரிடம் எளிதாக கொண்டு சேர்க்கின்றன. கேரளாவில் வெளியாகும் ஒரு திரைப்படத்திற்கு தமிழக இளைஞர்கள் ரைட்டப்பை எழுதி தள்ளுகின்றனர். தமிழ் திரைப்படம் என்றுமே கேரளாவில் கொண்டாட்டம்தான். ஆனால் திரையில் கையாளப்படும் மொழியின் மக்களை இந்த  திரைத்துறை எப்போதும் சரியாக கையாள்கிறதா என்ற கேள்வி அவ்வப்போது எழுவதும் உண்டு. அதில் எப்போதுமே மலையாள திரையுலகம் தெரிந்தே தெரியாமலோ ஒரு ஃபார்முலாவை கையாண்டுகொண்டே வருகிறது. அது தமிழர்கள் மீதான பார்வை.


'தமிழன்னு சொன்னாலே இந்த கேரக்டர்ஸ்தானா?'' - ஃபார்முலாவை மாற்றாத மலையாள சினிமாக்கள்!

நீங்கள் மிகத்தீவிர மலையாளப்பட ரசிகர் என்றால், அதிகமாக வேண்டாம், மம்முட்டி,  மோகன்லால் காலத்தில் இருந்து மலையாள சினிமாவை ஃபாலோ செய்யும் ஒருவர் என்றால் இங்கே குறிப்பிடுவதை மறுக்கமுடியாது. அப்போது முதல் போன வாரம் வந்த கள, ஆப்ரேஷன் ஜாவா வரையிலும் தமிழர்கள் மீதான பார்வை மலையாள சினிமாவில் என்னவாக இருக்கிறது  என்பதை உன்னிப்பாக பார்த்தால் கொஞ்சம் புரியும். மலையாள சினிமாக்களில் தமிழர்கள் என்ற கதாபாத்திரம் வந்தாலே அவர்கள் திருடர்கள், ரவுடிகள், பாலியல் தொழிலாளி, ஏழைகள், படிப்பறிவற்றவர்கள், கூலிகள் என இந்த பட்டியல் ஒரு வித எதிர்மறையாகவே செல்லும். பிரேமம் மலர் டீச்சர் எல்லாம் அதில் இருந்து தப்பித்தவர்கள்.

தமிழர்களை பாண்டிகள் என்ற அடைமொழியோடு ஏளனம் செய்வதும், பொள்ளாச்சி, திருநெல்வேலி, மதுரை என டெம்பிளேட் வில்லன் செட்டப்களை வைத்துக்கொண்டு அடித்து துவைப்பதும் மலையாள சினிமாவில் தொடர்கதை. இன்று நேற்று அல்ல. இது மம்முட்டி  காலத்தில் இருந்து துல்கர் சல்மான் காலம்வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 


'தமிழன்னு சொன்னாலே இந்த கேரக்டர்ஸ்தானா?'' - ஃபார்முலாவை மாற்றாத மலையாள சினிமாக்கள்!

சமீபத்தில் வெளியான ஆப்ரேஷன் ஜாவா படத்தில் சேலம் கோலமேடு பகுதி தான் திருட்டுக்கு பெயர் போன இடம் என்பதும், இப்போது படித்து முன்னேறிவிட்ட அவர்கள் சைபர் கிரைமில் திருடுகிறார்கள் என மீண்டும் ஒரு போடுபோடுவதும் என்னடா! இதுவென யோசிக்கத் தோன்றும். படிப்பு வந்தாலும் திருட்டை தொடர்கிறார்கள் எனும் எண்ணத்தை பதிவுசெய்யும் வசனமும், அதற்கான காட்சிகளும் படத்தின் கதை ஓட்டத்துக்கான் என்று வைத்துக்கொள்வோம். ஒரு படத்தின் கதைக்காக சில காட்சிகள், மனிதர்கள் வைக்கப்படுவது இயல்புதானே என்றாலும், இது ஒரு தொடர்கதையாக வருவதுதான் பலரையும் கேள்வி கேட்க வைக்கிறது. கள திரைப்படத்தில் கூலிக்கான வேலையாட்கள் முதல் டோவினோவை எதிர்க்கும் இளைஞன் வரை தமிழர் ரெஃபரன்ஸ்.சமீபத்தில் வந்த இரண்டு படங்கள்தான் இவை. ஆனால் 1980-களில் இருந்தே இந்த பார்வையும், படங்களும் நீண்டு கொண்டே வருகின்றன. போன வாரம் வரை.


'தமிழன்னு சொன்னாலே இந்த கேரக்டர்ஸ்தானா?'' - ஃபார்முலாவை மாற்றாத மலையாள சினிமாக்கள்!

மலையாள சினிமாக்களை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். இங்கும் 100 நாட்களை கடந்து ஓடிய மலையாள சினிமாக்கள் உண்டு. மலையாள நடிகர்களுக்கு இங்கு ரசிகர்கள்  கூட்டமுண்டு. தொழில் நுட்ப ரீதியாகவும் திரைத்துறையில்  மலையாளத்திற்கு தமிழ் முன்னோடியாகவே உள்ளது. நாட்கள் ஓடுகிறது,  இதுதான் வழக்கம் என ஒரு பார்முலாவை வைத்துக்கொண்டு அதேவழியில் பயணிப்பது காலப்போக்கில் கலையை நீர்த்துபோகச் செய்கிறது.

தமிழ்  திரைப்படங்களிலும் மதுரை என்றால் வெட்டுக்குத்து, வட சென்னை என்றால் திருட்டு, சேரி ,கேரள பெண்கள் என்றால் ஜாக்கெட், பாவாடை என ஒரே டெம்பிளேட்டை தூக்கிக்கொண்டு நிற்கிறார்கள். அதேமாதிரி ஒரு ஃபார்முலாவை தூக்கிக்கொண்டு மலையாள சினிமாவும் தமிழர்களை பயன்படுத்துகிறது.


'தமிழன்னு சொன்னாலே இந்த கேரக்டர்ஸ்தானா?'' - ஃபார்முலாவை மாற்றாத மலையாள சினிமாக்கள்!

இங்கு யாரும் எதையுமே வேண்டுமென்றே திணிப்பதில்லை என்பது உண்மைதான் என்றாலும், காலம் காலமாக ஒரு பார்முலா படைப்பாளர்களுக்கே தெரியாமல் அவர்களை பின் தொடர்கிறது என்பதும், மனதின் அடுக்குகளில் இந்த பாகுபாட்டுப் படிவம் படிந்திருக்கிறது என்பதும்தான் சுட்டிக்காட்டப்படுகிறது. கலையில் மண், மொழி, மக்களை அதுவாக பிரதிபலிப்பது முக்கியமானது. ஏனென்றால் முன்பே சொன்னதுபோல மொழி, எல்லை என்ற வட்டத்துக்குள் சுருக்கிக்கொள்ளாமல் சிறகடித்து பறந்துகொண்டிருக்கிறது கலை. அது அனைவரிடத்திலும் சென்று சேரக்கூடியது.

30வது ஆண்டில் சேரன் பாண்டியன்! சுவரை உடைத்து ஜாதியை தகர்த்த 90's கிட்ஸின் பேவரிட்!

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget