மேலும் அறிய

Maniratnam | வசனத்தை குறைத்து உணர்ச்சியை பேச வைத்த மகா கலைஞன்; மணிசாருக்கு இன்று பிறந்தநாள்!

பலரும் சொல்லத் தயங்கிய கதைக் களங்களை உலக சினிமாவிற்கு வழங்கியதில் மிகப்பெரிய பங்கு மணிரத்தினத்திற்கு உண்டு.

இந்திய சினிமா வியந்து பார்க்கும் பல மனிதர்களில் மிக முக்கியமானவர் தான் கோபால ரத்னம் சுப்ரமணியம் என்னும் மணிரத்னம். நானும் மதுரைக்காரன் தான் என்று பல நடிகர்கள் கூறக்கேள்விப்பட்டிருப்போம். அதுபோல மணிரத்தினினமும் மதுரையில் பிரபல சினிமா பட விநியோகஸ்தர் கோபால ரத்தினம் என்பவரின் மகனாக ஜூன் 2ம் தேதி 1956ம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்பிலேயே சினிமாவுடன் இணைந்து வளர்ந்த மணிரத்னம் இயக்குநராக களமிறங்க முடிவு செய்து அவர் இயக்கிய முதல் திரைப்படம் தான் பல்லவி அனுபல்லவி. கன்னட திரைப்படமான இந்த படத்தில் அணில் கபூர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மணிரத்னம் உணர்வு என்ற மலையாள படத்தை மோகன்லாலை வைத்து இயக்கினார்.


Maniratnam | வசனத்தை குறைத்து உணர்ச்சியை பேச வைத்த மகா கலைஞன்; மணிசாருக்கு இன்று பிறந்தநாள்!

1985ம் ஆண்டு மறைந்த பிரபல நடிகர் முரளி, நடிகை ரேவதி மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவான பகல் நிலவு என்ற படம் தான் தமிழில் மணிரத்னம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைக்கதை அமையப்பெற்றிருந்தும் அன்றைய தேதியில் பகல் நிலவு திரைப்படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து இதய கோவில் என்ற படத்தை இயக்கிய பிறகு 1986ம் ஆண்டு மோகன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான மௌன ராகம் என்ற படத்தை வெளியிட பட்டிதொட்டி எங்கும் சூப்பர்ஹிட்டானது. இந்த படத்தின் மூலம் பலரின் பார்வை மணிரத்னத்தின் பக்கம் திரும்பியது. 

உலக நாயகன் கமலுடன் நாயகன், பிரபு மற்றும் கார்த்திக் நடிப்பில் அக்னி நட்சத்திரம், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தளபதி, கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சத்ரியன் என்று ரத்தினம் தந்த அனைத்து கதைகளும் சூப்பர்ஹிட்டாக முன்னணி இயக்குநராக மாறினார் மணிரத்னம். பலரும் சொல்லத்தயங்கிய கதைக்களங்களை உலக சினிமாவிற்கு வழங்கியதில் மிகப்பெரிய பங்கு மணிரத்தினத்திற்கு உண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பம்பாய், இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் ஆயுத எழுத்து போன்ற பல படங்கள் அதற்கு சாட்சியாக திகழ்கின்றது.

நான்… ராஜா சார்… அப்புறம் அந்த வாழைப்பழம்! இசைஞானியின் இந்த முகம் தெரியுமா! 


Maniratnam | வசனத்தை குறைத்து உணர்ச்சியை பேச வைத்த மகா கலைஞன்; மணிசாருக்கு இன்று பிறந்தநாள்!

அரவிந்த் சாமி மற்றும் ஆர். மாதவன் போன்ற சில சிறந்த நடிகர்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை அவருக்கு உண்டு. இயக்குநரான மணிரத்னம் பல திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டுள்ளார். இறுதியாக தமிழில் பல முன்னணி நடிகர்கள் நடித்த செக்கச்சிவந்த வானம் என்ற படத்தை எழுதி, இயக்கி தயாரித்த மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய காவியத்தை மிகப்பெரிய பொருட்ச்செலவில் பல முன்னணி நடிகர்களை வைத்து எழுதி இயக்கி தயாரித்து வருகின்றார்.


Maniratnam | வசனத்தை குறைத்து உணர்ச்சியை பேச வைத்த மகா கலைஞன்; மணிசாருக்கு இன்று பிறந்தநாள்!

6 முறை தேசிய விருதுபெற்றுள்ள மணிரத்னம் தமிழ்நாடு அரசு வழங்கும் விருது, நந்தி விருது, Filmfare விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று திரையுலகி முன்னணி கலைஞர்களாக இருக்கும் நடிகர் கார்த்திக் மற்றும் சித்தார்த் போன்றவர்கள் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு Abp நாடு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget