மேலும் அறிய

`2 இட்லிக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்த பாலா!’ - திரைப்பயணம் குறித்து மனம் திறந்த கஞ்சா கருப்பு!

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் திரைத்துறைக்குள் தான் நுழைந்த கதை குறித்து பேசியுள்ளார்.. அதனை இங்கே கொடுத்துள்ளோம். 

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் திரைத்துறைக்குள் தான் நுழைந்த கதை குறித்து பேசியுள்ளார்.

கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு பேசிய போது, `திரைத்துறையில் பணியாற்றுவதை விட தொழில் செய்வது பெரிது. எத்தனையோ நடிகர்கள் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். நான் சின்ன வயதில் இருந்தே ஹோட்டல் நடத்தி வந்தேன். சிவகங்கை மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு சாதாரண கூரைக்கடை ஹோட்டல் நடத்தி வந்தேன்.. இட்லி, தோசை, ஆப்லெட், ஹாப்பாயில், சிக்கன், மட்டன் ஆகியவற்றை மட்டுமே செய்து விற்றுக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அங்கு இயக்குநர் பாலா அண்ணன் வந்தார்.. `அண்ணே என்ன வேணும்?’ என்று கேட்டேன்.. `இட்லி வேண்டும்.. கொத்தமல்லி சட்னியுடன் வேண்டும்’ எனக் கேட்டார். அவருக்குப் பிடித்த விதமாக அந்த சட்னியை அரைத்துக் கொடுத்தேன். ஆப்பாயில் போடச் சொன்னார்.. அதனையும் திருப்பாமல் தருமாறு கூறினார்.. அதனையும் செய்து கொடுத்தேன்... `பரவாயில்லயே.. ஹோட்டலில் இவ்வளவு தெளிவாக இருந்தால் வேறு இடங்களிலும் தெளிவாக இருப்பாயே’ எனக் கூறினார். அவருக்கு என் மேல் நம்பிக்கை வந்தது’ எனக் கூறியுள்ளார். 

`2 இட்லிக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்த பாலா!’ -  திரைப்பயணம் குறித்து மனம் திறந்த கஞ்சா கருப்பு!

20 ஆயிரம் ரூபாய்..

தொடர்ந்து அவர், `அவர் உணவைச் சாப்பிட்டுவிட்டு, `பில் எவ்ளோ ஆச்சு?’ எனக் கேட்டார்.. `அண்ணே, உங்ககிட்ட காசு எல்லாம் வாங்க மாட்டேன் அண்ணே’ என்றேன்.. `டேய் எவ்ளோன்னு சொல்லுடா’ எனக் கூறி, தன் பையில் இருந்து பணத்தை எடுத்தார். அவர் கிள்ளி பார்க்க மாட்டார்.. அள்ளிக் கொடுத்துவிட்டு அப்படியே போய்விடுவார்.. அதுதான் அவரது பழக்கம். அப்படியே 20 ஆயிரம் ரூபாயைக் கல்லாவுக்குள் தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டார்.. அன்றைக்கு 20 ஆயிரம் ரூபாய் என்பது எனக்கு 20 லட்சம் ரூபாய் மாதிரி இருந்தது.

சொந்தக் காரன்..

அதை வைத்து கடையை சற்றே முன்னேற்றினேன். திடீரென ஒரு நாள் ஒரு கார் வந்தது. அதில் வந்த பாலா சார், `எனக்கு ஒரு பிரச்னை.. நீ வரணும்’ எனக் கூறி அழைத்துச் சென்றுவிட்டார்.. எனக்கு என்னவென்றே தெரியாது. அங்கு சென்ற பிறகு தான் அது படப்பிடிப்பு என்று தெரியும். அப்போது என்னிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டார்.. `நீ என்னுடைய சொந்தக் காரன் என்று யாரிடம் சொல்லக் கூடாது.. வேலைக்காரர்களோடு வேலைக்காரனாக நீயும் வேலை செய்ய வேண்டும்.. நீ இந்தத் துறையில் வளர்ந்த பிறகு, உண்மையை சொல்லிக் கொள்’ எனக் கூறினார். அதை ஒரு லட்சியமாகக் கொண்டு வேலை பார்த்தேன்.. அதுதான் என்னை இந்த உயரத்திற்கு அழைத்து வந்திருக்கிறது’ என்று கூறினார். அவர் நடித்த அந்தத் திரைப்படம் தேசிய விருது பெற்ற `பிதாமகன்’ திரைப்படம் ஆகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget