மேலும் அறிய

Ameer: “வேற வழியில்லாம கட்சியில வச்சிருக்காங்க” - பிரதமர் மோடியை விமர்சித்த இயக்குநர் அமீர்!

இந்தியாவின் அனைத்து இந்து மக்களையும் ஒருங்கிணைத்து சுபிட்ஷம் பெறுவதற்காக கட்டப்பட்டது ராமர் கோயில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

அரசியல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஸ்தலம் தான் அயோத்தி ராமர் கோயில் என இயக்குநர் அமீர் நேர்காணல் ஒன்றில் கடுமையாக விமர்சித்துள்ளார். 

அதில் பேசிய அவர், “பாசிசத்தின் கடைசி ஆயுதம் திரைத்துறை தான். மக்களை மதம், கடவுள் பெயரால் பிரித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள். மேலும் இந்திய இறையாண்மையின் 4 தூண்களையும் கைப்பற்றி விட்டார்கள். மீதமிருக்கும் ஒன்று திரைத்துறை மட்டும் தான். அதிலும் ஆதிபுருஷ், காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதை மாற்ற நினைக்கிறார்கள். வடநாட்டில் அது செல்லுபடியாகும். தமிழ்நாட்டில் ஆனால் அது நடக்காது. தென்னிந்தியாவில் உள்ள மக்கள் பாஜகவின் அரசியல் சூழ்ச்சியை புரிந்தவர்களாக இருப்பதாக நான் உணர்கிறேன்.

அதனால் தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், கர்நாடகாவில் பர்தா அணியும் விஷயத்தை பெரிதாக்கி கலவரமாக முயன்று  தோற்று போனார்கள். ஆன்மீகம், மதம் என்ற பெயரில் பாஜக நடத்தும் அரசியல் இங்கு எடுபடாது. தென்னிந்திய மாநிலங்களுக்கு தாய்நாடு தமிழ்நாடு தான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது, பெரியார் கொள்கையை அழிக்க நினைப்பது நடக்காது. இவை அந்தந்த நேரத்தில் விவாதம், கருத்து வேறுபாடுகளை உருவாக்குமே தவிர வெற்றியை தராது என்பது என்னுடைய எண்ணமாக உள்ளது. 

தொடர்ந்து அயோத்தி கோயிலை மோடி திறந்தது பற்றி பேசிய அமீர், ‘இந்திய ஆன்மீகவாதிகளுக்கு பிரதமர் மோடி யார் என்பது தெரியும். பாஜகவில் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நபராகத் தான் மோடி உள்ளார் என்பது உண்மை. ஏனென்றால் அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். வேறு வழியில்லாமல் தான் கட்சிக்குள் இவ்வளவு பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர் பெயரை சொல்லித்தான் ஓட்டுகளை ஒருங்கிணைத்துள்ளோம் என்பது அக்கட்சியில் உள்ளவர்களுக்கு தெரியும். அதனால் மோடியை வைத்துள்ளார்கள்.

அவருடைய செயல், அன்பு, பிறப்பு காரணமாக கட்சிக்குள் வைக்கவில்லை என்பது மோடிக்கும் தெரியும். ஆன்மீகத்தை நோக்கி, இந்தியாவின் அனைத்து இந்து மக்களையும் ஒருங்கிணைத்து சுபிட்ஷம் பெறுவதற்காக கட்டப்பட்ட கோயில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அரசியல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஸ்தலம் தான் அது. அந்த ராமர் கோயிலுக்கு நம்பிக்கையுடன் செல்பவர்களை நாம் ஒன்னும் சொல்ல முடியாது. 

நீங்கள் நன்றாக அந்த கோயிலை உருவாக்க எடுத்துக் கொண்ட காலங்களை பாருங்கள். அங்கு கோயில் இருந்தது என சொல்லி 20 ஆண்டுகள், அதனை இடிச்சிட்டு 20 ஆண்டுகள், அதை கட்டப்போறோம்ன்னு சொல்லி 10 ஆண்டுகால அரசியல், கட்டிட்டோம் என சொல்லி இன்னுமொரு 10 ஆண்டுகள் என அதனை சுற்றி 60 ஆண்டுகால அரசியல் இருக்கு. பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் கோயில் இருந்தது என சொன்னவர்கள், இன்றைக்கு ஏன் அந்த இடத்தில் இருந்து 3 கி.மீ., தள்ளி ஏன் ராமர் கோயிலை கட்ட வேண்டும். அதுதான் அரசியல்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget