VIROSH Wedding: பொண்ணு மாப்ள ஜோரு.. திருமணத்திற்கு புறப்பட்ட விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா!
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்யவுள்ள விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மீண்டும் ஒரு காதல் ஜோடி
தெலுங்கு சினிமாவில் முன்னணி பிரபலங்களாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திகழ்கின்றனர். இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால் அதை பல ஆண்டுகளாக வெளிக்காட்டாமல் இருந்தனர். ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் வரை நடந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவர் சினிமாவில் புகழ்பெற அந்த திருமணமானது நிறுத்தப்பட்டது.
இப்படியான நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ஜோடி காதலை மறைமுகமாக வளர்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு வெளிப்படையாகவே நிகழ்ச்சிகளில் ஜோடியாக வலம் வர தொடங்கினர்.
திருமணத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்
இந்த நிலையில் பிப்ரவரி 26ம் தேதி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.முதல் முறையாக தங்கள் திருமணம் குறித்து இருவரும் பிப்ரவரி 22ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்துள்ளனர். ரசிகர்கள் தங்கள் பெயரை இணைத்து அழைத்ததை குறிப்பிட்டு தங்கள் திருமண விழாவிற்கு 'விரோஷ்' என்று பெயரிடுவதாக அறிவித்துள்ளனர்.
It’s finally happening. 😭❤️ Our hearts are so full seeing this beautiful wedding card. 💌✨ From fan theories to a forever bond, the journey of #ViRosh is pure magic.
— Rashmika Delhi Fans (@Rashmikadelhifc) February 16, 2026
Congratulations 2 d most beautiful duo @iamRashmika & @TheDeverakonda 🎊#RashmikaMandanna #VijayDeverakonda pic.twitter.com/3F9ptKjxNQ
மேலும் அந்த அறிவிப்பில், “"நாங்கள் என்ன திட்டங்களைச் செய்ய விரும்பினாலும், எங்களுக்காக என்ன தேர்வுகள் எடுத்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் முதலில் அங்கே இருக்கிறீர்கள். மிகுந்த அன்புடன், எங்கள் திருமணத்திற்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ரசிகர்கள் நீங்கள் அழைக்கும் விரோஷ் என்ற பெயரை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம்.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் நடைபெறவுள்ளது. இதில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். அதன்பின் ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது. திருமணம் நடைபெறும் அரண்மனையின் வெளிப்புறத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் வெளிநாட்டில் இருந்து ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை பணியமர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் உள்ளூர் பணியாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்காக ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு புறப்பட்டனர்.






















