மேலும் அறிய

R. Mutharasan: ‘அரிசி’ படத்தில் நடிக்க முடியாது என சொன்னேன்.. இயக்குநர் கட்டாயப்படுத்தினார்’ - முத்தரசன் ஓபன் டாக்..!

அரிசி படத்தில் தான் நடிக்க என்ன காரணம் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அரிசி படத்தில் தான் நடிக்க என்ன காரணம் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

மோனிகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சண்முகம் தயாரிக்கும் படம் ‘அரிசி’. இந்த படத்தை எஸ்.ஏ.விஜயகுமார் இயக்குகிறார். இளையராஜா இசையமைத்துள்ள அரிசி படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் விவசாயியாக நடித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் சிசர் மனோகர், ராஜா திருநாவுக்கரசு, அன்பு ராணி, சுபா, அர்ஜூன் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

இப்படியான நிலையில் அரிசி படத்தில் தான் நடிக்க என்ன காரணம் என்பதை முத்தரசன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “நடிகராகும் ஆசையோ, விருப்பமோ எனக்கு சுத்தமாக கிடையாது. அரிசி படத்தின் இயக்குநர் விஜயகுமார் ஒருநாள் என்னை சந்திக்க வந்தார். அதற்கு முன்னால் அவர்களை நான் சந்தித்து இல்லை. வந்ததும், ‘இந்த மாதிரி ஒரு ஆவணப்படம் இருக்கு நீங்க நடிக்க வேண்டும்’ என சொன்னார்கள். நான் அவர்களிடம் ‘ஐயா சாமி.. எனக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது. அதில் ஆர்வமும் இல்லை. அதனால் என்னை கூப்பிடாதீர்கள். நீங்கள் ஏதாவது கிராமத்தில் போய் எடுக்குறீர்கள் என்றாலோ அல்லது கட்சியில் வேறு யாராவது நடிக்க வேண்டும் என்றாலோ தேவையான உதவி பண்றேன் என சொன்னேன். நான் வரமாட்டேன் என பிடிவாதமாக சொல்லிட்டேன். 

ஆனால் இயக்குநர் கதையெல்லாம் சொல்லிவிட்டு, என்னை ஏன் அணுகினார்கள் என விளக்கம் கொடுத்தார்கள். மேலும்,உங்கள் பேட்டியெல்லாம் பார்த்தேன். யதார்த்தாம பேசுறீங்கன்னு தான் தேடி வந்ததாக கூறினார்கள். நீங்கள் சிந்தித்து சொல்லுமாறு கூறி விட்டு மறுநாள் வருவதாக சொன்னார்கள். அப்புறம் கட்சியின் துணை செயலாளரிடம் விவரத்தை கூறினேன். அவர் என்னிடம், ‘ஆவணப்படம் என்றால் நடியுங்கள், பெரிய வேலையெல்லாம் அங்கு இருக்காது’ என சொன்னார்கள். மறுநாள் வந்ததும் என்னால் 2 நாட்கள் மட்டுமே வர முடியும் சொல்லி சென்றேன். குடவாசல் அருகே இருக்கும் நெய்குப்பை கிராமத்தில் தான் ஷூட் நடந்தது.  2 நாட்கள் தொடங்கி கிட்டதட்ட 35 நாட்கள் நடிக்க வைத்து விட்டார்கள். 

கேமரா முன்னால் நடிக்க எனக்கு மிகப்பெரிய தயக்கம் இருந்தது. நான் சினிமா பார்ப்பேனே தவிர, ஷூட்டிங் காட்சிகள் எதுவும் பார்த்தது இல்லை. இயக்குநர் விஜயகுமார் சொன்னது போல நடித்துக் கொடுத்தேன். ஒரு கட்டத்தில் யாருக்கும் என்னுடைய நடிப்பால் இழப்பு ஏற்பட்டு விடக்கூடாது என சொல்லி சரியான அளவில் நடித்து கொடுத்தேன்”என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget