மேலும் அறிய

Actress Jayaprada: "15 நாட்களில் சரணடைய வேண்டும்” .. நடிகை ஜெயப்பிரதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பிரபல நடிகை ஜெயப்பிரதாவுக்கு எழும்பூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

பிரபல நடிகை ஜெயப்பிரதாவுக்கு எழும்பூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் ஜெயப்பிரதா. இவர் தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். 

ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் இணைந்து அண்ணாசாலையில் தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு 1991 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலித்த ரூ.8.17 லட்சமும், 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ரூ.1.58 லட்சம் இஎஸ்ஐ பணத்தை தொழிலாளர் அரசு  காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர் அரசு  காப்பீட்டு கழகம் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதனை எதிர்த்து ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்தி விடுவதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் பணத்தை செலுத்தாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதாக தொழிலாளர் அரசு  காப்பீட்டு கழகம் சார்பில் வாதிடப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடைசியாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தொழிலாளர் அரசு  காப்பீட்டு கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தொழிலாளர் பணம் செலுத்தாதது தொடர்பாக பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது’ என கூற, அதற்கு நோட்டீஸ் அனுப்பி தன்னிலை விளக்கம் பெறாமல் நேரடியாக வழக்கு தொடரப்பட்டதாக ஜெயப்பிரதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து வட்டியுடன் பணத்தை மீண்டும் செலுத்துவதாக இருந்தால் சிறை தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இஎஸ்ஐ தொகையை செலுத்தி இருந்தாலும், வட்டித் தொகையை செலுத்ததால் தண்டனையை நிறுத்த மறுத்ததோடு 15 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ரூ.20 லட்சம் தொகையை 20 நாட்களுக்குள் டெபாசிட் செய்தால் மட்டுமே ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget