மேலும் அறிய

Arya: ‛நம்பாதீங்க... நான் எல்லாத்துக்கும் ஒத்துழைக்கிறேன்...’ விசாரணையில் புலம்பிய நடிகர் ஆர்யா!

‛‛நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. தயவு செய்து என்னை நம்புங்கள். என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. என் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் விளைவிக்க முயற்சி இது’’ -ஆர்யா

ஜெர்மனை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை ஏமாற்றிய அவரிடமிருந்து 70 லட்சம் ரூபாயை ஆர்யா அபகரித்ததாக சம்மந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆர்யா தரப்பு தந்த அழுத்தத்தின் பேரில் இந்த விசாரணை முடங்கியிருப்பதாக சம்மந்தப்பட்ட பெண்,வெளிநாட்டில் இருந்த படி தனது வழக்கறிஞர் மூலம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வாளர் கீதா தலைமையில் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன் படி நேற்று இரவு சம்மந்தப்பட்ட கீதா முன்னிலையில் நடிகர் ஆர்யா ஆஜரானார். அப்போது வித்ஜா அளித்த புகார் குறித்து ஆய்வாளர் கீதா, ஆர்யாவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அப்போது ஆர்யா பேசியதாக கூறப்படும் தகவல்கள் இதோ:

‛‛நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. தயவு செய்து என்னை நம்புங்கள். என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. என் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் விளைவிக்க முயற்சி இது. உங்கள் விசாரணைக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். மற்றபடி என் மீதான புகாரில் எந்த உண்மையும் இல்லை,’’ என ஆர்யா தனது தரப்பு வாதத்தை கூறியுள்ளார். இருப்பினும் அந்த பெண் சமர்பித்துள்ள ஆவணங்கள் தொடர்பாக அவர் எந்த கருத்தும் கூறவில்லை எனக்கூறப்படுகிறது. இணையவழியாக தான் அவர்களின் நட்பு மற்றும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படும் நிலையில், சைபர் க்ரைம் போலீசார் உதவியோடு அவற்றை ஆராயவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 


Arya: ‛நம்பாதீங்க... நான் எல்லாத்துக்கும் ஒத்துழைக்கிறேன்...’ விசாரணையில் புலம்பிய நடிகர் ஆர்யா!

வழக்கு தொடர்பான முழு விபரம் இதோ

ஜெர்மனியைச் சேர்ந்த ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல்துறைக்கு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ஆர்யா, வெஸ்டர்ன்யூனியன் மூலமாக ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் என்னை திருமணம் செய்துகொள்ளாமல் சாயிஷாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்கிறார் என தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள், வாட்ஸ் அப் சாட் உள்ளிட்ட விவரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த புகார் பின்னர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் இருந்தவாறே வழக்கறிஞர் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார் வித்ஜா. அதில், என்னிடம் வாங்கிய பணத்தைத் தான் சார்பட்டா, அரண்மனை 3, மலையாளத் திரைப்படம் ரெண்டகம் உள்ளிட்ட படங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். அதனால் சிபிசிஐடி வழக்கை முடிக்கும் வரை மேற்கண்ட படங்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வித்ஜா புகார் தொடர்பான விசாரணை விவரங்களை ஆகஸ்ட் 17-இல் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே ஆர்யா தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த புகாரை சிபிசிஐடி கிடப்பில் போட்டு இருக்கலாம் என வித்ஜாவின் வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். 

பிரபல தமிழ் நடிகர் ஆர்யா மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் சிபிசிஐடியிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அந்த விவகாரத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஆர்யா நேற்று இரவு நேரில் ஆஜரானார். 

ஆஜரான அவரை காவல் ஆய்வாளர் கீதா விசாரணை செய்துள்ளார். ஆனால், இந்த புகார் குறித்து ஆர்யா தரப்பில் இருந்து விளக்கம் தரப்படவில்லை.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஏசி ரூம்ல உட்கார்ந்து பேசாதீங்க..அப்பா மகளை வெளுத்து வாங்கிய மோகன் ஜி
ஏசி ரூம்ல உட்கார்ந்து பேசாதீங்க..அப்பா மகளை வெளுத்து வாங்கிய மோகன் ஜி
எடப்பாடியாருக்குப் பின் விஜய் தலைமை தாங்கியிருக்கலாம்...நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேட்டி
எடப்பாடியாருக்குப் பின் விஜய் தலைமை தாங்கியிருக்கலாம்...நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேட்டி
JanaNayagan Release Date : சூர்யா , தனுஷ் படங்களுக்கு வழிவிட்ட விஜய்...ஜனநாயகன் ரிலீஸ் தேதி முடிவு
JanaNayagan Release Date : சூர்யா , தனுஷ் படங்களுக்கு வழிவிட்ட விஜய்...ஜனநாயகன் ரிலீஸ் தேதி முடிவு
ஸ்டுடியோவில் வைத்து பாலியல் வன்கொடுமை..மெட்ராஸின் எப்ஸ்டீன்..பிரபல இசையமைப்பாளர் மீது பாடகி குற்றச்சாட்டு
ஸ்டுடியோவில் வைத்து பாலியல் வன்கொடுமை..மெட்ராஸின் எப்ஸ்டீன்..பிரபல இசையமைப்பாளர் மீது பாடகி குற்றச்சாட்டு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026 Exit Poll: தமிழகம் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு - எங்கு? எப்போது? வரும், எப்படி பார்க்கலாம்?
TN Election 2026 Exit Poll: தமிழகம் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு - எங்கு? எப்போது? வரும், எப்படி பார்க்கலாம்?
Honeymoon Murder: ”ஹனிமூனில் காதலனுக்காக கணவனை கொன்ற சோனம்” - ஆனாலும் ஜாமின் எப்படி? நீதிமன்ற ஆர்டர்
Honeymoon Murder: ”ஹனிமூனில் காதலனுக்காக கணவனை கொன்ற சோனம்” - ஆனாலும் ஜாமின் எப்படி? நீதிமன்ற ஆர்டர்
WB Election 2026: மே. வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - 142 தொகுதிகள், பவானிபூரில் மம்தா Vs சுவேந்து
WB Election 2026: மே. வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - 142 தொகுதிகள், பவானிபூரில் மம்தா Vs சுவேந்து
Hyundai Ioniq 5: இதுவாச்சும் தேறுமா? பழைய பிரச்னைகளுக்கு ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்டில் தீர்வு இருக்கா? புது அம்சங்கள்
Hyundai Ioniq 5: இதுவாச்சும் தேறுமா? பழைய பிரச்னைகளுக்கு ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்டில் தீர்வு இருக்கா? புது அம்சங்கள்
Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்
Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்
Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?
Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?
Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Embed widget