மேலும் அறிய

Arya: ‛நம்பாதீங்க... நான் எல்லாத்துக்கும் ஒத்துழைக்கிறேன்...’ விசாரணையில் புலம்பிய நடிகர் ஆர்யா!

‛‛நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. தயவு செய்து என்னை நம்புங்கள். என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. என் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் விளைவிக்க முயற்சி இது’’ -ஆர்யா

ஜெர்மனை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை ஏமாற்றிய அவரிடமிருந்து 70 லட்சம் ரூபாயை ஆர்யா அபகரித்ததாக சம்மந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆர்யா தரப்பு தந்த அழுத்தத்தின் பேரில் இந்த விசாரணை முடங்கியிருப்பதாக சம்மந்தப்பட்ட பெண்,வெளிநாட்டில் இருந்த படி தனது வழக்கறிஞர் மூலம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வாளர் கீதா தலைமையில் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன் படி நேற்று இரவு சம்மந்தப்பட்ட கீதா முன்னிலையில் நடிகர் ஆர்யா ஆஜரானார். அப்போது வித்ஜா அளித்த புகார் குறித்து ஆய்வாளர் கீதா, ஆர்யாவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அப்போது ஆர்யா பேசியதாக கூறப்படும் தகவல்கள் இதோ:

‛‛நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. தயவு செய்து என்னை நம்புங்கள். என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. என் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் விளைவிக்க முயற்சி இது. உங்கள் விசாரணைக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். மற்றபடி என் மீதான புகாரில் எந்த உண்மையும் இல்லை,’’ என ஆர்யா தனது தரப்பு வாதத்தை கூறியுள்ளார். இருப்பினும் அந்த பெண் சமர்பித்துள்ள ஆவணங்கள் தொடர்பாக அவர் எந்த கருத்தும் கூறவில்லை எனக்கூறப்படுகிறது. இணையவழியாக தான் அவர்களின் நட்பு மற்றும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படும் நிலையில், சைபர் க்ரைம் போலீசார் உதவியோடு அவற்றை ஆராயவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 


Arya: ‛நம்பாதீங்க... நான் எல்லாத்துக்கும் ஒத்துழைக்கிறேன்...’ விசாரணையில் புலம்பிய நடிகர் ஆர்யா!

வழக்கு தொடர்பான முழு விபரம் இதோ

ஜெர்மனியைச் சேர்ந்த ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல்துறைக்கு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ஆர்யா, வெஸ்டர்ன்யூனியன் மூலமாக ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் என்னை திருமணம் செய்துகொள்ளாமல் சாயிஷாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்கிறார் என தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள், வாட்ஸ் அப் சாட் உள்ளிட்ட விவரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த புகார் பின்னர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் இருந்தவாறே வழக்கறிஞர் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார் வித்ஜா. அதில், என்னிடம் வாங்கிய பணத்தைத் தான் சார்பட்டா, அரண்மனை 3, மலையாளத் திரைப்படம் ரெண்டகம் உள்ளிட்ட படங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். அதனால் சிபிசிஐடி வழக்கை முடிக்கும் வரை மேற்கண்ட படங்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வித்ஜா புகார் தொடர்பான விசாரணை விவரங்களை ஆகஸ்ட் 17-இல் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே ஆர்யா தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த புகாரை சிபிசிஐடி கிடப்பில் போட்டு இருக்கலாம் என வித்ஜாவின் வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். 

பிரபல தமிழ் நடிகர் ஆர்யா மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் சிபிசிஐடியிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அந்த விவகாரத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஆர்யா நேற்று இரவு நேரில் ஆஜரானார். 

ஆஜரான அவரை காவல் ஆய்வாளர் கீதா விசாரணை செய்துள்ளார். ஆனால், இந்த புகார் குறித்து ஆர்யா தரப்பில் இருந்து விளக்கம் தரப்படவில்லை.

 

தலைப்பு செய்திகள்

GV Prakash: எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகர்.. 50 ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த ஜிவி பிரகாஷ்
GV Prakash: எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகர்.. 50 ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த ஜிவி பிரகாஷ்
நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
என்னை புரிந்துகொள்ளாதவர்கள் தான் தற்குறி...மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சோலார் ஸ்டார் மகேந்திரன்
என்னை புரிந்துகொள்ளாதவர்கள் தான் தற்குறி...மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சோலார் ஸ்டார் மகேந்திரன்
பொன்னாடை இல்லை பூங்கொத்து இல்லை... முதல்வர் விஜய்க்கு விஷால் கொடுத்த இன்ப அதிர்ச்சி
பொன்னாடை இல்லை பூங்கொத்து இல்லை... முதல்வர் விஜய்க்கு விஷால் கொடுத்த இன்ப அதிர்ச்சி

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: (அ)திமுகவின் சேம் கான்செப்ட்..! ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி..! ஸ்டாலின் அறிக்கை வைரல்
(அ)திமுகவின் சேம் கான்செப்ட்..! ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி..! ஸ்டாலின் அறிக்கை வைரல்
TN Finance: உதவித்தொகை திட்டங்களால் கடனாளியாகும் தமிழ்நாடு? தினமும் ரூ.184 கோடி வட்டி - ஷாக் நிதிநிலை
உதவித்தொகை திட்டங்களால் கடனாளியாகும் தமிழ்நாடு? தினமும் ரூ.184 கோடி வட்டி - ஷாக் நிதிநிலை
TN Weather Update: இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை.. சென்னை? தமிழக வானிலை
இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை.. சென்னை? தமிழக வானிலை
DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
Iran-US Peace Talk: “US-Iran ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இது நடந்துச்சுன்னா சரி வராது“: அப்பாஸ் அராக்சி முக்கிய அறிக்கை
“US-Iran ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இது நடந்துச்சுன்னா சரி வராது“: அப்பாஸ் அராக்சி முக்கிய அறிக்கை
TN Debt Per Capita: தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
200 கி.மீட்டர் மைலேஜ்.. கவர்ந்து இழுக்கும் Raptee HV T30 இ பைக்! விலை எவ்ளோ?
200 கி.மீட்டர் மைலேஜ்.. கவர்ந்து இழுக்கும் Raptee HV T30 இ பைக்! விலை எவ்ளோ?
TN Govt White Paper: “தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி“ இன்று வெளியான வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
“தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி“ இன்று வெளியான வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
Embed widget