மேலும் அறிய

Arya: ‛நம்பாதீங்க... நான் எல்லாத்துக்கும் ஒத்துழைக்கிறேன்...’ விசாரணையில் புலம்பிய நடிகர் ஆர்யா!

‛‛நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. தயவு செய்து என்னை நம்புங்கள். என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. என் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் விளைவிக்க முயற்சி இது’’ -ஆர்யா

ஜெர்மனை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை ஏமாற்றிய அவரிடமிருந்து 70 லட்சம் ரூபாயை ஆர்யா அபகரித்ததாக சம்மந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆர்யா தரப்பு தந்த அழுத்தத்தின் பேரில் இந்த விசாரணை முடங்கியிருப்பதாக சம்மந்தப்பட்ட பெண்,வெளிநாட்டில் இருந்த படி தனது வழக்கறிஞர் மூலம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வாளர் கீதா தலைமையில் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன் படி நேற்று இரவு சம்மந்தப்பட்ட கீதா முன்னிலையில் நடிகர் ஆர்யா ஆஜரானார். அப்போது வித்ஜா அளித்த புகார் குறித்து ஆய்வாளர் கீதா, ஆர்யாவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அப்போது ஆர்யா பேசியதாக கூறப்படும் தகவல்கள் இதோ:

‛‛நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. தயவு செய்து என்னை நம்புங்கள். என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. என் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் விளைவிக்க முயற்சி இது. உங்கள் விசாரணைக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். மற்றபடி என் மீதான புகாரில் எந்த உண்மையும் இல்லை,’’ என ஆர்யா தனது தரப்பு வாதத்தை கூறியுள்ளார். இருப்பினும் அந்த பெண் சமர்பித்துள்ள ஆவணங்கள் தொடர்பாக அவர் எந்த கருத்தும் கூறவில்லை எனக்கூறப்படுகிறது. இணையவழியாக தான் அவர்களின் நட்பு மற்றும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படும் நிலையில், சைபர் க்ரைம் போலீசார் உதவியோடு அவற்றை ஆராயவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 


Arya: ‛நம்பாதீங்க... நான் எல்லாத்துக்கும் ஒத்துழைக்கிறேன்...’ விசாரணையில் புலம்பிய நடிகர் ஆர்யா!

வழக்கு தொடர்பான முழு விபரம் இதோ

ஜெர்மனியைச் சேர்ந்த ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல்துறைக்கு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ஆர்யா, வெஸ்டர்ன்யூனியன் மூலமாக ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் என்னை திருமணம் செய்துகொள்ளாமல் சாயிஷாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்கிறார் என தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள், வாட்ஸ் அப் சாட் உள்ளிட்ட விவரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த புகார் பின்னர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் இருந்தவாறே வழக்கறிஞர் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார் வித்ஜா. அதில், என்னிடம் வாங்கிய பணத்தைத் தான் சார்பட்டா, அரண்மனை 3, மலையாளத் திரைப்படம் ரெண்டகம் உள்ளிட்ட படங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். அதனால் சிபிசிஐடி வழக்கை முடிக்கும் வரை மேற்கண்ட படங்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வித்ஜா புகார் தொடர்பான விசாரணை விவரங்களை ஆகஸ்ட் 17-இல் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே ஆர்யா தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த புகாரை சிபிசிஐடி கிடப்பில் போட்டு இருக்கலாம் என வித்ஜாவின் வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். 

பிரபல தமிழ் நடிகர் ஆர்யா மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் சிபிசிஐடியிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அந்த விவகாரத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஆர்யா நேற்று இரவு நேரில் ஆஜரானார். 

ஆஜரான அவரை காவல் ஆய்வாளர் கீதா விசாரணை செய்துள்ளார். ஆனால், இந்த புகார் குறித்து ஆர்யா தரப்பில் இருந்து விளக்கம் தரப்படவில்லை.

 

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Embed widget