மேலும் அறிய

Nayanthara: "சுயநலத்துக்கு பின்னால் ஒரு பொதுநலம் இருக்கு" - புது பிசினஸ் குறித்து மனம் திறந்த நடிகை நயன்தாரா!

சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Nayanthara: சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். 

நயன்தாரா:

தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்திலேயே, அப்போது  முன்னனி நடிகராக இருந்த சரத்குமாருடன் சேர்ந்து நடித்தார். இதனை அடுத்து,  ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் நடித்தார்.

தொடர்ந்து, சூர்யா, விஜய், அஜித்குமார் என தொடங்கி அடுத்த 10 வருடங்களில் வளர்ந்த ஹீரோக்களாக மாறிய ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என அனைவருடனும் சேர்நது நடித்து விட்டார். சமீபத்தில் பாலிவுட் வரை சென்று ஷாருக்கானுடனும் ஜவான் படத்தில் நடித்துவிட்டார். திரைத்துறையில் வெற்றி பாதையில் பயணித்து வரும் நயன்தாரா, கடந்த ஆண்டு தொழிலதிபராகவும் களம் இறங்கினார். 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் '9Skin' என்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி தொழில்முனைவோராக களம் இறங்கினார்.  சருமத்துக்கான க்ரீம், சீரம், ஆயில் போன்ற தயாரிப்புகளை வெளியிட்டார். இவற்றின் ஆரம்ப விலை ரூ.99 ஆக உள்ளது.

அதிகபட்ச விலை ரூ.1899 ஆக உள்ளது.  இந்த தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல் வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே 'Femi 9' என்ற நாப்கின் தயாரிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தினார்.

"சுயநலத்துக்கு பின்னால் பொதுநலன் உள்ளது”

இந்த நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடந்த ஃபெமினா விழாவில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகை நயன்தாரா, ”சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும்.

இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். பெண்கள் நல்லா இருந்தா சமுதாயமும் நல்லா இருக்கும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உள்ளது போல; ரொம்ப சாதித்த பெண்களுக்கும், ரொம்ப மகிழ்ச்சியாக உள்ள பெண்களுக்கும் பின்னாலும் கண்டிப்பா ஒரு ஆண் உள்ளனர்.

எனக்கு பின்னால் எனது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளார்.  அவரை சந்தித்து முதலே எனக்கு துணையாகவே உள்ளார். யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை என்றால் அதுதான் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் இதுமட்டுமல்லாமல் இதோடு ஏன் நிறுத்துகிறீர்கள் என கேட்பவர்தான் விக்னேஷ் சிவன்.

சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது. சானிட்டரி நேப்கின் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானோரை சென்றடையவில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு அனைத்து பெண்களையும் சென்றடைய வேண்டும்" என்றார். 


மேலும் படிக்க

Captain Miller Review: ”சம்பவம் இருக்கு” .. தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Vs Vijay: “ஒரு கவுன்சிலர் கூட ஆகல.. ஆனா“ விஜய்யை விளாசிய நயினார் நாகேந்திரன் - என்ன சொன்னார் தெரியுமா.?
“ஒரு கவுன்சிலர் கூட ஆகல.. ஆனா“ விஜய்யை விளாசிய நயினார் நாகேந்திரன் - என்ன சொன்னார் தெரியுமா.?
CM on Paddy: நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
சேவை செஞ்ச பட்டியல்ல பெயரே இல்ல.. பணக்காரர்களில் 6-ம் இடம் - ரங்சாமி மீது காண்டாகும் புதுச்சேரி மக்கள்
சேவை செஞ்ச பட்டியல்ல பெயரே இல்ல.. பணக்காரர்களில் 6-ம் இடம் - ரங்சாமி மீது காண்டாகும் புதுச்சேரி மக்கள்
CM Stalin: வரியால் பாதித்த துறைகளுக்கு உடனடி நிவாரணம்; புதிய கொள்கை - மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
வரியால் பாதித்த துறைகளுக்கு உடனடி நிவாரணம்; புதிய கொள்கை - மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

போடியில் களமிறங்கும் அதிமுகவினர் வளர்த்தவர்களே எதிராக சதி ராமநாதபுரமே செல்லும் OPS? | OPS Ramanathapuram
”தமிழ் நடிகர்களை விட இந்தியில்...மட்டம் தட்டிய ஜோதிகா”பதிலடி கொடுக்கும் ரசிகர்கள் Jyotika on Tamil actors
சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
Mohan Bhagwat on Modi : ’’75 வயதில் ஓய்வு?நான் அப்படி சொல்லல’’RSS தலைவர் அந்தர்பல்டி
Madhampatti Rangaraj :கர்ப்பமாக்கி கைவிட்ட ரங்கராஜ்!''ஜாய் க்ரிஷில்டா பகீர் புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Vs Vijay: “ஒரு கவுன்சிலர் கூட ஆகல.. ஆனா“ விஜய்யை விளாசிய நயினார் நாகேந்திரன் - என்ன சொன்னார் தெரியுமா.?
“ஒரு கவுன்சிலர் கூட ஆகல.. ஆனா“ விஜய்யை விளாசிய நயினார் நாகேந்திரன் - என்ன சொன்னார் தெரியுமா.?
CM on Paddy: நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
சேவை செஞ்ச பட்டியல்ல பெயரே இல்ல.. பணக்காரர்களில் 6-ம் இடம் - ரங்சாமி மீது காண்டாகும் புதுச்சேரி மக்கள்
சேவை செஞ்ச பட்டியல்ல பெயரே இல்ல.. பணக்காரர்களில் 6-ம் இடம் - ரங்சாமி மீது காண்டாகும் புதுச்சேரி மக்கள்
CM Stalin: வரியால் பாதித்த துறைகளுக்கு உடனடி நிவாரணம்; புதிய கொள்கை - மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
வரியால் பாதித்த துறைகளுக்கு உடனடி நிவாரணம்; புதிய கொள்கை - மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
Pakistan FM: “இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனா..“; பாக். வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனா..“; பாக். வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
USA Tariff: ”அமெரிக்கா ப்ராண்ட் டாய்லெட்ல இருக்கு” இந்தியாவை சீனா பக்கம் தள்ளிட்டீங்க ட்ரம்ப் - முன்னாள் அதிகாரி
USA Tariff: ”அமெரிக்கா ப்ராண்ட் டாய்லெட்ல இருக்கு” இந்தியாவை சீனா பக்கம் தள்ளிட்டீங்க ட்ரம்ப் - முன்னாள் அதிகாரி
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனம்...மூட நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனம்...மூட நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
ரூ.45 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்து கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
ரூ.45 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்து கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
Embed widget