மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bayilvan Ranganathan: நயன்-விக்கி கல்யாணம் இப்படிதான்; மிரட்டினாலும் பேசுவேன் - பயில்வான் பரபரப்பு பேட்டி
நயன்தாரா - விக்னேஷ் திருமணம் யானைமேல் அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளது - திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி.
![Bayilvan Ranganathan: நயன்-விக்கி கல்யாணம் இப்படிதான்; மிரட்டினாலும் பேசுவேன் - பயில்வான் பரபரப்பு பேட்டி Bayilvan Ranganathan Comment on Nayanthara Vignesh Shivan Marriage i will never stop commenting tamil actor actress Bayilvan Ranganathan: நயன்-விக்கி கல்யாணம் இப்படிதான்; மிரட்டினாலும் பேசுவேன் - பயில்வான் பரபரப்பு பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/26/78fbdf8926a3425e37f1e9bb890db9a9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பயில்வான் ரங்கநாதன்
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் 401 வது நாளான இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனை அவரசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காயம் பிரிவில் உள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கு திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிய உணவினை வழங்கினார். இதில் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நடிகை நயன்தாரா- விக்னேஷ்சிவன் திருமணம் 25 கோடி ரூபாய்க்கு ஓ.டி.டியில் விற்பனை செய்து ஆடம்பர கல்யாணமாக யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளது. என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன். - பயில்வான் ரங்கநாதன் மதுரையில் பேட்டியளித்தார்.@abpnadu ! pic.twitter.com/xdmtKv0W2K
— Arunchinna (@iamarunchinna) June 9, 2022
![Bayilvan Ranganathan: நயன்-விக்கி கல்யாணம் இப்படிதான்; மிரட்டினாலும் பேசுவேன் - பயில்வான் பரபரப்பு பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/09/e8871e08414d578a934612cc5d8aadbf_original.jpeg)
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில்...” நடிகை நயன்தாரா- விக்னேஷ்சிவன் திருமணம் 25 கோடி ரூபாய்க்கு ஓ.டி.டியில் விற்பனை. செய்து ஆடம்பர கல்யாணமாக யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளது. என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து அதனை நடத்தியது கிடையாது , எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன். நடிகர், நடிகைகளை பற்றி நான் கூறுவதை கேட்க 3 லட்சம் பேர் இருக்கின்றனர். தொடர்ந்து பேசுங்கள் எனவும் பொதுமக்கள் முதல் காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்” என்றார்.
![Bayilvan Ranganathan: நயன்-விக்கி கல்யாணம் இப்படிதான்; மிரட்டினாலும் பேசுவேன் - பயில்வான் பரபரப்பு பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/09/61ab093922281a77c9911b73eb09f797_original.jpg)
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - MK Stalin on AIADMK: ‘அதிமுக அரசு, மக்களுக்கான திட்டங்களை எப்படியெல்லாம் பாழ்படுத்தியது என்பதற்கு பெரியார் சமத்துவபுரம் சாட்சி’ - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தொடர்ந்து பேசிய ரங்கநாதன், தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரை தவிர யாரும் யோக்கியர் அல்ல. தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர் , நடிகைகளும் சம்பாதித்ததை பயன்படுத்தி பள்ளி, மருத்துவமனை, மஹால் தான் கட்டுகிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்வதில்லை. அதனால் நடிகர்கள் தலைவர் ஆவதை ஏற்க இயலாது என்றார். நான் யாரைபற்றியும் ஆபாசமாக பேசவில்லை எனவும், சட்டத்திற்கு உட்பட்டே பேசுவதாகவும் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: நீங்கல்லாம் தளபதியை பற்றி பேசலாமா? மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion