மேலும் அறிய

Anurag Kashyap: பாலியல் அச்சுறுத்தல்களால்.. என் மகளுக்கு.. அனுராக் காஷ்யப் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..

”என் மகளை கடுமையாக ட்ரோல் செய்யத் தொடங்கினர். பாலியல் அச்சுறுத்தல்களை அவர் சந்திக்கத் தொடங்கினார். அதனால் என் மகளுக்கும் மன அழுத்தம், பதட்டம் என பல சிக்கல்கள் வரத் தொடங்கின” - அனுராக் காஷ்யப்

இந்தியாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இயங்கி வருபவர். ஆனால் சில கசப்பான சம்பவங்களால் கடந்த 2019-ஆம் ஆண்டு மனம் நொந்து ட்விட்டரில் இருந்து வெளியேறினார்.

ட்விட்டரில் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்

2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர்ச்சியான கும்பல் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அனுராக் காஷ்யப் உள்பட திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் இணைந்து கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இதனையடுத்து ட்விட்டர் தளத்தில் அனுராக் காஷ்யப் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவரது மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் தொடங்கி கொலை மிரட்டல் வரை வந்த நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

’குண்டர்கள் நாட்டை ஆள்வார்கள்'

இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம், “இது தான் என் இறுதி ட்வீட். பயம் இன்றி என் மனதில் பட்டதை பேசமுடியாத சூழலில் நான் பேசாமலேயே இருந்து விடுவேன். 

உங்கள் மகள் ஆன்லைன் மிரட்டல்களுக்கு இலக்காவது குறித்து யாரும் யோசிக்க மாட்டார்கள். குண்டர்களே இனி ஆளப்போகிறார்கள். புதிய இந்தியாவைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்” என ட்வீட் செய்து விட்டு ட்விட்டரை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து அதே ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற 2019, டிசம்பர் மாதம் மீண்டும் ட்விட்டரில் இணைந்தார்.

நினைவுகூர்ந்த அனுராக்


Anurag Kashyap: பாலியல் அச்சுறுத்தல்களால்.. என் மகளுக்கு.. அனுராக் காஷ்யப் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..

தொடர்ந்து ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களிலும் அனுராக் காஷ்யப்  பங்கேற்றார். 

இந்நிலையில் தனது மகளுக்கு ட்விட்டரில் பாலியல் மிரட்டல்கள் வந்தது,அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால்தான் ட்விட்டரில் இருந்து வெளியேறியது ஆகியவற்றை நினைவுகூர்ந்து தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அனுராக் காஷ்யப் பேசியுள்ளார். நான் ட்விட்டரில் இருந்து வெளியேறிய நேரம், ஏனென்றால் என் மகளை கடுமையாக ட்ரோல் செய்யத் தொடங்கினர். பாலியல் அச்சுறுத்தல்களை அவர் சந்திக்கத் தொடங்கினார். அதனால் என் மகளுக்கும் மன அழுத்தம், பதட்டம் என பல சிக்கல்கள் வரத் தொடங்கின.

அதனையடுத்து ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு நான் ட்விட்டரில் இருந்து வெளியேறி போர்ச்சுகலுக்குச் சென்றேன். 

அதன் பிறகு படப்பிடிப்பில் இருந்த நான் ஜாமியா மில்லியா விவகாரம் நடந்தபோது தான் இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. நான் மீண்டும் ட்விட்டரில் பேச ஆரம்பித்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நெகட்டிவிட்டி

ட்விட்டரில் இருந்த கடும் நெகட்டிவிட்டி காரணமாக தான் ட்விட்டர் தளத்தை உபயோகிப்பதை நிறுத்தியதாகவும், தனது இருண்ட காலத்திலும் கடும் மன அழுத்தத்துக்கு மத்தியிலும்தான் பணியாற்றியது குறித்து அனுராக் இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதே நேர்காணலில், அனுராக் காஷ்யப்பும் கடந்த ஆண்டு மாரடைப்பு மற்றும் அவரது உடல்நிலை எவ்வாறு மோசமடைந்தது என்பதைப் பற்றி விவாதித்தார்.

அனுராக் காஷ்யப்பின் 'ஆல்மோஸ்ட் பியார் வித் டிஜே மொஹபத்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 19-வது மராகேச் திரைப்பட விழா இந்தப் படம் முன்னதாகத் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget