மேலும் அறிய

21 Years Of Mounam Pesiyadhe: அமீரின் முதல் படம்.. த்ரிஷா அறிமுகம்.. 21 ஆண்டுகளைக் கடந்த ‘மெளனம் பேசியதே’!

அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ‘மெளனம் பேசியதே' திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்துள்ளன.

மெளனம் பேசியதே

அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் மெளனம் பேசியதே, த்ரிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்தார். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் கடந்துள்ளன.

காதல் என்றாலே வெறுக்கும் கதாநாயகன்

மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பெரும்பாலான ஆண்களால் ரசிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். சூர்யாவின் கதாபாத்திர அமைப்பு அப்படியானது. பொதுவாக ஆண்கள் என்றாலே பெண்ணைப் பார்த்த இடத்திலேயே காதலில் விழுந்துவிடுவார்கள் என்கிற இமேஜுக்கு மாறாக, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன் கெளதம்.


21 Years Of Mounam Pesiyadhe: அமீரின் முதல் படம்.. த்ரிஷா அறிமுகம்.. 21 ஆண்டுகளைக் கடந்த ‘மெளனம் பேசியதே’!

பெண்களின் மேல், காதலின் மேல் எல்லாம் அவனுக்கு மாறுபட்ட ஒரு எண்ணம் இருக்கிறது. எந்தவித சிக்கலிலும் தேவையில்லாமல் மாட்டாமல் எதார்த்தமாக பேசக்கூடியவன். இப்படி சுயமரியாதையுடன் இருக்கும் ஒருவனாகவே கெளதம் இருப்பார். அதே நேரத்தில் திமிரும் அவரிடம் இருக்கத்தான் செய்கிறது. இப்போது பார்க்கையில் கெளதம் பேசும் பல கருத்துக்கள் விமர்சனத்திற்குரியவையாக தெரிகின்றன. 

தனது நண்பன் வேறு ஒரு பெண்ணை காதலிக்க, அவனுக்கு வீட்டில் பார்த்திருக்கும் பெண் சந்தியாவிடம் (த்ரிஷா)  திருமணத்தை நிறுத்தச் சொல்லி பேசப் போகிறார் கெளதம். ஆனால் தனக்கும் இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி கெளதமை குழப்பிவிடுகிறார் சந்தியா. நாட்கள் செல்ல செல்ல சந்தியா தன்னை காதலிக்கிறாரோ என்று நினைத்துக் கொண்டு தானும் சந்தியாவை காதலிக்கத் தொடங்குகிறார் கெளதம்.  ஆனால் சந்தியா கெளதமை காதலிக்கவில்லை, அவள் வேறு ஒருவனை தன் காதலன் என்று அறிமுகப்படுத்துகிறாள்.

ட்விஸ்ட் வைத்த அமீர்

பெண்கள் மீது ஏற்கெனவே பெரிதும் நல்ல அபிப்பிராயம் இல்லாத கெளதம், மீண்டும் “காதல் செய்தால் பாவம் , பெண்கள் எல்லாம் மாயம்” என்று பாட்டு பாடிக் கொண்டு சுற்றத் தொடங்குகிறார். இந்தப் படத்தை இயக்குநர் அமீர் இப்படியே முடிக்க நினைத்திருந்தால் வெறும் கெளதம் போன்ற ஆண்களின் தன்னகங்காரத்திற்கு தீனி போடும் ஒரு படமாக மெளனம் பேசியதே படம் இருந்திருக்கும். ஆனால் கடைசியாக ஒரு சின்ன ட்விஸ்டை இந்தப் படத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த அர்த்தத்தையும் மாற்றிவிடுகிறார்.


21 Years Of Mounam Pesiyadhe: அமீரின் முதல் படம்.. த்ரிஷா அறிமுகம்.. 21 ஆண்டுகளைக் கடந்த ‘மெளனம் பேசியதே’!

சந்தியா தன்னை காதலிப்பதாக நினைத்து அவள் தனக்காக என்னவெல்லாம் செய்தாள் என்று கெளதம் நினைத்தானோ, அதை எல்லாம் செய்தது லைலா. கெளதமின் கல்லூரி காலத்தில் அவனை உருகி உருகி காதலித்தவள். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே அவனை தூரத்தில் இருந்து காதலிக்கத் தயாராக இருப்பவர். 

கடைசியில் சந்தியாவுடம் கெளதம் காரில் ஏறிச் செல்வது பார்வையாளர்களுக்கு ஒரு நொடி குழப்பத்தையே ஏற்படுத்தும். சந்தியாவை காதலித்த கெளதம் எப்படி உடனே லைலாவின் மீது காதல் கொள்கிறார் என்று. ஆனால் காதல் என்றால் என்னவென்பதை கெளதமுக்கு உணர்த்தியது லைலாவின் செயல்கள்தான். சந்தியா கெளதமின் காதலுக்கு வெறும் ஒரு உருவமாக மட்டுமே இருந்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் காதல் என்கிற அடிப்படை உணர்வு இல்லாமல் திரிவதை இயக்குநர் அமீர் விரும்பவில்லை!

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget