மேலும் அறிய

"என்னை ஜட்ஜ் பண்ண வேணாம்" ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டுகளுக்கு அல்லு அர்ஜுன் விளக்கம்!

புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறித்து தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் பதில் அளித்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த சில நாட்கள் முன்பாக தெலங்கானா போலீஸால் கைது செய்யப்பட்டார். புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜூனை பார்க்க முண்டியடித்த கூட்டத்தில் ரேவதி என்கிற பெண் ஒருவர் உயிரிழந்தார் மேலும் அவரது 9 வயது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் .

கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது, ஹைதராபாத் போலீஸ்  ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தது.  இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி காவல்துறை கைது செய்தது.  போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டுகளுக்கு அல்லு அர்ஜூன் பதில்: 

இதையடுத்து, அல்லு அர்ஜூனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தருணத்தில் தற்போது அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது தெலங்கானா உயர்நீதிமன்றம்.

தெலங்கானா சட்டமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜூன் மீது அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு விளக்கம் அளித்துள்ள அல்லு அர்ஜூன், தன்னை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசியுள்ள அல்லு அர்ஜூன், "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். வெளிப்படையாகச் சொன்னால், இது யாருடைய தவறும் இல்லை. திரைப்படத் துறைக்கு அவர்கள் நிறைய ஆதரவைக் கொடுத்ததற்காக நான் உண்மையில் அரசாங்கத்திற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

என்னை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. தயவு செய்து என்னை ஜட்ஜ் செய்ய வேண்டாம். தயவு செய்து எனது குணத்தை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. 21-22 வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

"தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்"

நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நான் என் வாழ்நாளின் மூன்று வருடங்களை இந்தப் படத்திற்கு செலவழித்துள்ளேன். அதுதான் எனக்கு எல்லாமே. நான் அதை தியேட்டரில் பார்க்கச் சென்றேன். மேலும் இந்த திரையரங்கிற்கு 20-30 முறை வந்துள்ளேன்.

எந்தவித அனுமதியும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்று மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக தவறான தகவல் உள்ளது. அதில் உண்மையில்லை. திரையரங்கம் அனுமதி பெற்று நான் அங்கு சென்றேன். வழியில் போலீஸ்காரர்கள் இருந்தனர்.

அவர்களின் அறிவுறுத்தல்களின்படி நான் சென்றேன். உண்மையில் அனுமதி இல்லை என்றால், அவர்கள் என்னை திரும்பி செல்ல சொல்லி இருக்கலாம். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். நான் அதைப் பின்பற்றியிருப்பேன். எனக்கு அத்தகைய தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

நான் அவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன். எனவேதான், உள்ளே சென்றேன். அது ஒரு ரோட் ஷோ அல்லது ஊர்வலம் அல்ல. தியேட்டருக்கு வெளியே கூட்டம் இருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் உங்களைப் பார்க்க வரும்போது அது அடிப்படை மரியாதை என்பதால் நான் கை அசைத்தேன்" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget