மேலும் அறிய

Ajith: "கையை ப்ளேடால அறுத்தாங்க.. என் மகன் கேட்பான்.." உருக்கமாக பேசிய அஜித்குமார்!

அஜித்குமார் தனது கையை ப்ளேடால் அறுத்த சம்பவம் குறித்தும், தனது மகனை பள்ளிக்கு ஏன் அழைத்துச் செல்ல முடியவில்லை என்பது குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வரும் அஜித்குமார் கடந்த ஓராண்டாக கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தனியார் ஆங்கில யூ டியூப் தொலைக்காட்சிக்கு அஜித்குமார் பேட்டி அளித்தார். அதில் அஜித்குமார் பல்வேறு விவகாரங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

அஜித் கை ப்ளேடால் கிழிப்பு:

2005ம் ஆண்டு இது நடந்தது. ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் கை கொடுக்க விரும்பினார்கள். ஏராளமான மக்கள் கை கொடுத்தனர். நான் காரின் உள்ளே சென்று பார்த்தபோது கையில் இருந்து ரத்தம் வழிகிறது. அதன்பின்புதான் எனக்குத் தெரிந்தது. ப்ளேடால் கையை கீறியுள்ளார்கள் என்பதை உணர்ந்தேன்.

அஜித் ஏக்கம்:

எனது மகன் அழுதுகொண்டே என்னிடம் கேட்பான். அப்பா நீங்கள் ஏன் மற்ற அப்பாக்களைப் போல, என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறீர்கள்? என்று கேட்பான். உங்களுக்கேத் தெரியும். இந்தியாவில் நான் கார் ஓட்ட இயலாது. ஒருவேளை நான் யாராலும் கவனிக்கப்பட்டால் 50 -60 மோட்டார்சைக்கிள்கள் புகைப்படம் எடுக்க பின்தொடர்ந்து வருவார்கள். அப்படி நடந்தால் அனைவரது உயிர்களும் ஆபத்தில் சிக்கும். 

துரதிஷ்டவசமாக மற்ற ஓட்டுனர்களைப் போல நானும் மோசமான விபத்துகளில் சிக்குகிறேன். ஆனால், நான் ஒரு நடிகர் என்பதால் மக்கள் நான் எப்போதும் விபத்தில் சிக்குவதாக நினைக்கிறார்கள். திரையுலகில் மட்டும் எனக்கு129 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. நான் ஒரு நேர்மறையான எண்ணம் கொண்ட நபர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இணையத்தில் பேசுபொருளான அஜித்:

அஜித்குமார் இது மட்டுமின்றி சமீபத்தில் நடந்த கரூர் துயர சம்பவம் குறித்தும், திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம் குறித்தும், ரசிகர்கள் மோதல் குறித்தும் விரிவாக தனது பேட்டியில் பேசியுள்ளார். குறிப்பாக, அஜித் கரூர் விவகாரம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

அஜித்தின் இந்த பேட்டிக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். ரசிகர்களை வழிநடத்தும் நோக்கில் அவர் இவ்வாறு அறிவுரைகளை வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அஜித்குமார் பொதுவெளியில் வருவதை பெரும்பாலும் தவிர்த்தே வருகிறார். சமீபகாலமாகவே அவர் அடிக்கடி பொதுவெளியில் வருவதும், பேட்டிகளும் அளித்து வருகிறார். 

மேலும், அஜித்தின் கருத்துக்கள் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. கடந்த காலத்தில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் கருணாநிதிக்கு முன்பே நடிகர்களை கட்டாயப்படுத்தி விழாக்களில் பங்கேற்க வைக்கின்றனர் என்று அஜித் பேசியிருந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அந்த விவகாரத்திற்கு பிறகு பொதுவெளியில் பேட்டி அளிப்பதை கடந்த பல ஆண்டுகளாகவே அஜித் தவிர்த்து வந்தார். தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்று வரும் சூழலில் தொடர்ந்து பேட்டிகள் அளித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget