மேலும் அறிய

Maaveeran: மீண்டும் கம்பேக் கொடுத்த சரிதா.. மாவீரன் படத்தில் நடிக்க என்ன காரணம் தெரியுமா? - அவரே சொன்ன பதில்..!

சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு ரஜினியை பார்க்கிற மாதிரியே இருக்கும் என நடிகை சரிதா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்

சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு ரஜினியை பார்க்கிற மாதிரியே இருக்கும் என நடிகை சரிதா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்

கம்பேக் கொடுத்த சரிதா 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம்  தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு என பலரும் நடித்துள்ளனர்.பரத் சங்கர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பின் நடிகை சரிதா கம்பேக் கொடுத்துள்ளார்.  இதனிடையே மாவீரன் படத்தின் நடித்தது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் கருத்துகளை தெரிவித்துள்ளார். 

மாவீரனில் நடிக்க காரணம் 

”மாவீரன் படத்தின் கதையை இயக்குனர் மடோன் அஸ்வின் என்னிடம் சொன்ன போது மிகவும் சுவாரசியமாக இருந்தது. என்னால் இதில் நடிப்பதற்கு நோ சொல்ல முடியவில்லை. அதே சமயம் நான் இப்படத்தில் நடிப்பதற்கு மற்றொரு காரணம் நடிகர் சிவகார்த்திகேயன். அவரின் வளர்ச்சியை நான் தொடர்ந்து கவனிச்சுக்கிட்டே தான் இருக்கிறேன். அவர் நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான நிலையில் மாவீரன் படத்தில் நான் கமிட் ஆன பிறகு எனக்கு கொரோனா வந்துடுச்சு. உடனே அஸ்வினுக்கு போன் பண்ணி என்னுடைய நிலைமையை சொல்லி நான் சரியாக ரொம்ப நாட்கள் ஆகலாம். அதனால் நீங்கள் வேறு யாரையாவது தேர்வு செய்து கொள்ளுங்கள் என தெரிவித்து விட்டேன். 

ஆனால் வேற ஆப்ஷன் என்பதே இல்லை என சொன்ன அஸ்வின், சரிதா மேடம் எப்ப வராங்களோ வரட்டும் இந்த கேரக்டரை அவங்க தான் பண்ணனும் என சிவா சொன்னதாகவும் சொன்னார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் அருணின் அம்மா சமீபத்தில் தான் காலமானார். உங்க அம்மாவுக்கு பிடிச்ச நடிகை நான்தான் என சொல்லிக்கிட்டே இருப்பாங்க என கூறினார். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் மாவீரன் படத்தில் என்னை நடிக்க வைத்தது என சொல்லலாம். எப்போதும் எனக்கு படங்களில் நல்ல நல்ல கேரக்டர்கள் தான் வரும். இந்தப் படத்திலும் அப்படித்தான் அந்த வகையில் நான் பாக்கியசாலி என நினைக்கிறேன். இந்த சமயத்துல நான் என் இயக்குனர் பாலச்சந்தர் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 500 மடங்கு அன்பும் மரியாதையும்

மாவீரன் படத்தில் பணி புரிந்த அனைவரும் இளம் வயது உடையவர்கள் என்பதால் அவர்களுடன் பணியாற்றும்போது நானும் இளமையாகி விடுகிறேன். மொத்த டீமும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. அதே சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள சிவகார்த்திகேயன் ரொம்ப யதார்த்தமா இருந்து தனது உழைப்பை கொடுத்திருக்கிறார். மேலும் இளைஞர்கள் கூட வேலை செய்யும் போது பொதுவாக நாம் எதிர்பார்ப்பது மரியாதை தான். 

மாவீரன் படத்தில் நடித்த போது நான் நினைத்ததை விட 500 மடங்கு அன்பும் மரியாதையும் எனக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகிட்டோம். எனக்கு மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது இந்த மாதிரி திரும்பவும் ஒரு டீம் அமையுமா என்று எனக்கு தெரியல அமைஞ்சா நல்லா இருக்கும் என நினைக்கிறேன். இதேபோன்று ஒரு டீமோடு நல்ல கதையும் அமைந்தால் நிச்சயமாக தொடர்ந்து படம் பண்ணுவேன்.

மேலும் சிவகார்த்திகேயன் வளர்ச்சி எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அவரின் படங்களில் ரெமோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ரஜினியுடன் நான்கு படங்களில் நடித்திருந்த நிலையில் அவர் எப்படி என்று எனக்கு தெரியும். அதே மாதிரி நிறைய இடங்களில் சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு ரஜினியை பார்க்கிற மாதிரியே இருக்கும்.  அதனால் அவரை நான் குட்டி ரஜினி என செல்லமாக கூப்பிடுவேன்" என்றார். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget