மேலும் அறிய

Rambha Car Accident: ‛நான் தான் கார் ஓட்டினேன்... எனக்கு உங்க ஆதரவு வேணும்’ நேரலையில் ரம்பா உருக்கம்!

Rambha Car Accident: ‛‛தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிச் செல்லுங்கள். குழந்தைகளுடன் செல்லும் போது இன்னும் பாதுகாப்பாக செல்லுங்கள்’’ -ரம்பா

90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா, இந்திரன் என்ற இலங்கை தமிழ் தொழிலதிபரை மணந்து கொண்டு, கனடாவில் வசித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து தன் குழந்தைகளை அழைத்து வரும் போது, அவரது கார் மீது மற்றொரு கார் மோதியது. 

இதில் ரம்பா உள்ளிட்ட அவரது மூன்று குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோர் காயம் அடைந்தனர் .குறிப்பாக, கார் கதவு அருகே அமர்ந்திருந்த ரம்பாவின் இளைய மகள் சாஷாவிற்கு படுகாயம் ஏற்பட்டு, ஐசியூ.,பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தமிழ் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ரம்பாவுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வந்த ரம்பா, தன் குடும்பத்தார் மற்றும் மகளின் உடல்நிலை குறித்து விளக்கினார். இதோ அவரது பேச்சு...

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

 

‛‛என்னுடைய அனைத்து ரசிர்களே, என்னுடைய அனைத்து நண்பர்களே... என்னுடைய அனைத்து குடும்ப உறவினர்களே... நீங்கள் அனைவரும் எங்களுக்காக பிராத்தனை செய்தீர்கள். உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் எங்கள் பாதுகாப்பிற்காக வேண்டினீர்கள். உங்கள் அனைவருக்கும் என் அடி உள்ளத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  என் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அதற்கு உங்களின் பிரார்த்தனை தான் காரணம். தொடர்ந்து எங்களுக்கு உங்கள் அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த இப்போது என்னிடம் எந்த வார்த்தைகளும் இல்லை. 

உங்களால் தான் நாங்கள் நலமாக இருக்கிறோம்; குறிப்பாக என் இளைய மகள் சாஷா இப்போது நலமாக இருக்கிறாள். அவள் மீண்டும் நலமுடன் வீடு திரும்புவாள். உங்கள் அனைவருக்கும் என் அன்பும், என் முத்தங்களும். நான் முதன் முதலாக நேரலையில் வந்து பேசுகிறேன். என் மீது அன்பு கொண்ட உங்கள் அனைவருக்கும் மிக மிக நன்றி. எல்லா மொழிகள் பேசும் என் ரசிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் ரொம்ப கொடுத்து வைத்தவள். எனக்காக நீங்கள் அனைவரும் ப்ரே பண்றீங்க..! ஸ்ரீ லங்காவில் இருந்து பலர் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். நான் ஸ்ரீலங்கா வீட்டு மருமகள்; நான் உங்களோடு தான் இருக்கிறேன்; வேறு எங்கேயும் போக மாட்டேன். நீங்கள் எல்லாரும் கடவுளை வணங்கியதால் தான் நாங்கள் நலமுடன் இருக்கிறேன். எனக்கு இது முதல் முறை. எனக்கு ஒரு கவலை என்னவென்றால், நான் தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது இது நடந்ததும், எனக்கு பெரிய கவலையை கொடுத்துவிட்டது. 

நான் 7 மொழிகளில் நடத்திருக்கிறேன். இதனால் 7 மொழிகளை கற்றிருக்கிறேன். என் சின்ன பையன் என்னை அழைக்கிறான், எனவே நான் இப்போது இந்த நேரலையை முடித்து அவனிடம் செல்கிறேன். விபத்து நடந்து 24 மணி நேரத்தில் சில சோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. நான் இப்போது புறப்படுகிறேன்; இன்னொரு நாளில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிச் செல்லுங்கள். குழந்தைகளுடன் செல்லும் போது இன்னும் பாதுகாப்பாக செல்லுங்கள்,’’

என்று அந்த வீடியோவில் ரம்பா பேசியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget