மேலும் அறிய

Rambha Car Accident: ‛நான் தான் கார் ஓட்டினேன்... எனக்கு உங்க ஆதரவு வேணும்’ நேரலையில் ரம்பா உருக்கம்!

Rambha Car Accident: ‛‛தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிச் செல்லுங்கள். குழந்தைகளுடன் செல்லும் போது இன்னும் பாதுகாப்பாக செல்லுங்கள்’’ -ரம்பா

90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா, இந்திரன் என்ற இலங்கை தமிழ் தொழிலதிபரை மணந்து கொண்டு, கனடாவில் வசித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து தன் குழந்தைகளை அழைத்து வரும் போது, அவரது கார் மீது மற்றொரு கார் மோதியது. 

இதில் ரம்பா உள்ளிட்ட அவரது மூன்று குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோர் காயம் அடைந்தனர் .குறிப்பாக, கார் கதவு அருகே அமர்ந்திருந்த ரம்பாவின் இளைய மகள் சாஷாவிற்கு படுகாயம் ஏற்பட்டு, ஐசியூ.,பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தமிழ் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ரம்பாவுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வந்த ரம்பா, தன் குடும்பத்தார் மற்றும் மகளின் உடல்நிலை குறித்து விளக்கினார். இதோ அவரது பேச்சு...

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

 

‛‛என்னுடைய அனைத்து ரசிர்களே, என்னுடைய அனைத்து நண்பர்களே... என்னுடைய அனைத்து குடும்ப உறவினர்களே... நீங்கள் அனைவரும் எங்களுக்காக பிராத்தனை செய்தீர்கள். உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் எங்கள் பாதுகாப்பிற்காக வேண்டினீர்கள். உங்கள் அனைவருக்கும் என் அடி உள்ளத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  என் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அதற்கு உங்களின் பிரார்த்தனை தான் காரணம். தொடர்ந்து எங்களுக்கு உங்கள் அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த இப்போது என்னிடம் எந்த வார்த்தைகளும் இல்லை. 

உங்களால் தான் நாங்கள் நலமாக இருக்கிறோம்; குறிப்பாக என் இளைய மகள் சாஷா இப்போது நலமாக இருக்கிறாள். அவள் மீண்டும் நலமுடன் வீடு திரும்புவாள். உங்கள் அனைவருக்கும் என் அன்பும், என் முத்தங்களும். நான் முதன் முதலாக நேரலையில் வந்து பேசுகிறேன். என் மீது அன்பு கொண்ட உங்கள் அனைவருக்கும் மிக மிக நன்றி. எல்லா மொழிகள் பேசும் என் ரசிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் ரொம்ப கொடுத்து வைத்தவள். எனக்காக நீங்கள் அனைவரும் ப்ரே பண்றீங்க..! ஸ்ரீ லங்காவில் இருந்து பலர் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். நான் ஸ்ரீலங்கா வீட்டு மருமகள்; நான் உங்களோடு தான் இருக்கிறேன்; வேறு எங்கேயும் போக மாட்டேன். நீங்கள் எல்லாரும் கடவுளை வணங்கியதால் தான் நாங்கள் நலமுடன் இருக்கிறேன். எனக்கு இது முதல் முறை. எனக்கு ஒரு கவலை என்னவென்றால், நான் தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது இது நடந்ததும், எனக்கு பெரிய கவலையை கொடுத்துவிட்டது. 

நான் 7 மொழிகளில் நடத்திருக்கிறேன். இதனால் 7 மொழிகளை கற்றிருக்கிறேன். என் சின்ன பையன் என்னை அழைக்கிறான், எனவே நான் இப்போது இந்த நேரலையை முடித்து அவனிடம் செல்கிறேன். விபத்து நடந்து 24 மணி நேரத்தில் சில சோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. நான் இப்போது புறப்படுகிறேன்; இன்னொரு நாளில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிச் செல்லுங்கள். குழந்தைகளுடன் செல்லும் போது இன்னும் பாதுகாப்பாக செல்லுங்கள்,’’

என்று அந்த வீடியோவில் ரம்பா பேசியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.