மேலும் அறிய

அரிசி சாதத்திற்கு ஏங்கி கஷ்டப்பட்டவன் நான்.. ஜெய்பீம் விழாவில் சிவக்குமார் உருக்கம்..

அரிசி சாதத்திற்கு ஏங்கி கஷ்டப்பட்டவன் நான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவரைவிடவும் கஷ்டப்பட்டவன் என்று நடிகர் சிவக்குமார் பேசினார்.

அரிசி சாதத்திற்கு ஏங்கி கஷ்டப்பட்டவன் நான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவரைவிடவும் கஷ்டப்பட்டவன் என்று நடிகர் சிவக்குமார் பேசினார்.

சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜெய்பீம். விமர்சன ரீதியகா சர்வதேச அளவில் வரவேற்பை இத்திரைப்படம் பெற்றுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியானாலும் கூட உலகம் முழுவதும் இருந்து பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் அண்மையில் நடிகர் சிவக்குமார் ஜெய்பீம் பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சி பொங்க நினைவு கூர்ந்தார்.


அரிசி சாதத்திற்கு ஏங்கி கஷ்டப்பட்டவன் நான்.. ஜெய்பீம் விழாவில் சிவக்குமார் உருக்கம்..

சிவக்குமார் பேசியதாவது:

”ஜெய்பீம் என்றொரு சிறந்த படத்தை ஞானவேல் இயக்கியிருக்கிறார். இனி அவரே நினைத்தாலும் கூட இப்படியொரு படத்தை இயக்க முடியுமா என்று தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிற எல்லாரை காட்டிலும் மிகவும் வறுமையில் வளர்ந்தவன் நான். இன்று எனது குடும்பத்தினர் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று மதிய சாப்பாட்டை சாப்பிட்டால் 15,000 ரூபாய் செலவாகிகிறது. ஆனால் அந்தக் காலத்தில் நான் ஒரு வேளை அரிசி சாதத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். அரிசி சோறு பொங்கிப் போட முடியலைன்னா ஏன் பெத்த என்று எங்கம்மாவ கோபமா பேசியிருக்கிறேன். எங்கம்மா வாய் திறந்து ஒருநாளும் பேசினது இல்ல. எளிமையான மனுஷி. நான் கேட்ட கேள்விக்காக எங்கம்மா வெறும் கேப்பைக்கூழா சாப்பிட்டு உழைத்து என்னை வளர்த்தார். என்னை படிக்க வைத்தார். நான் சென்னையில் படிச்சேன். ஏழு ஆண்டுகள் ஓவியம் வரைந்து ஊர் ஊராகத் திரிந்து நான் 7 ஆண்டுகளில் சம்பாதித்த பணம் வெறும் 7 ஆயிரம்தான். ஏழு ஆண்டுகள் 15 ரூபாய் வாடகை அறையில் வாழ்ந்தேன். அந்த வீட்டில் இருந்தே என் உயரம் இவ்வளவு குறைவாகிவிட்டது,

ஜெய்பீம் படக்குழுவினர் இங்கு வந்திருக்கின்றனர், அந்த திரைப்படத்தில் உயர் நீதிமன்றத்தை போலவே அச்சு அசலாக உருவாக்கிய கலை இயக்குநர் கதிர் இவர்தான். 

கதிர் உருவாக்கிய அந்த நீதிமன்றம் செட் இன்று உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது.  ஒரிஜினல் ஹைகோர்ட்க்கும் அந்த படத்தில் வரும் கோர்ட்டுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத அளவிற்கு செட்டு அமைத்துள்ளார். 


அரிசி சாதத்திற்கு ஏங்கி கஷ்டப்பட்டவன் நான்.. ஜெய்பீம் விழாவில் சிவக்குமார் உருக்கம்..

அதேபோல இங்கே இயக்குநர் தா.செ.ஞானவேல் வந்திருக்கிறார். இவன் எனக்கு இன்னொரு மகன், ஞானவேலை இவன் என்றுதான் நான் சொல்லமுடியும், அவர் என்று நான் கூப்பிட முடியாது. ஏனென்றால் எனக்கு இன்னொரு மகன் ஞானவேல். அவன் முதலில் ஒரு படம் எடுத்தான், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படமெடுக்க நீ லாயக்கு கிடையாது என பேனாவை பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டேன். அப்புறம் அவனுக்கு ரோசம் வந்திருச்சு.  

துணிந்து இந்தப் படத்தை எடுத்துள்ளான்.  ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி ஒரு படம் எடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவயப்பட்டு ஒவ்வொரு பழங்குடியின மக்களுக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அவர்களின் தேவைகளை உடனே செய்து கொடுக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போட வைத்திருக்கிறது இந்த படம். ஒடுக்கப்பட்ட இனத்திற்கு பட்டா கொடுக்க சொல்லி உத்தரவு போட வைத்திருக்கிறது இந்தப் படம்”
இவ்வாறு சிவக்குமார் உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Heavy Rain Alert: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
Embed widget