Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் நகைகளை கண்டுபிடித்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் உண்மையை கண்டு பிடிப்பதாக சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அபிராமி நினைவிடத்தில் இன்சுலின் பாட்டில் கிடக்க, கார்த்திக் அதை மருந்து கடையில் காண்பித்து வாங்கியது யார்? என்ற தகவலை கண்டு பிடிக்கிறான்.
நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்:
அதன்பிறகு அந்த ரவுடி இருக்கும் இடத்திற்கு சென்று அவனை மடக்கி பிடிக்க முயற்சி செய்ய, உன்னை அறிந்த ரவுடி கார்த்தியின் பிரிவிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான். ஓடும்போது விபத்தில் சிக்கி மயங்கி விட கார்த்திக் அவனை ஹாஸ்பிடலில் அனுமதிக்கிறான். பிறகு அவனிடம் இருந்து கைப்பற்றிய நகைகளை பஞ்சாயத்தில் கொண்டு வந்து ஊர்காரர்களிடம் ஒப்படைக்கிறான்.
ஜாமினில் வந்த ரேவதி:
நகை கிடைத்து விட்ட காரணத்தால், கார்த்திக் ரேவதியை வெளியே விட சொல்ல இன்னும் நகை திருடியது யார் என்பது தெரியவில்லை என்பதால் ரேவதியை நிபந்தனையில் வெளியே அனுப்புகின்றனர். பிறகு கார்த்திக் ரேவதி வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி இனிமே இந்த வீட்டுக்குள்ளே வரக்கூடாது என கார்த்திகை தடுத்து நிறுத்துகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.






















