மேலும் அறிய

R Parthiban: ‘மணிரத்னம் என்ன கிழிச்சிருவாருன்னு பார்க்க போனேன்’ ... பார்த்திபன் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

விமர்சனம் என்பது கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களை பார்த்து நாம் பயப்பட வேண்டுமே தவிர ஒருத்தரை காலி செய்யும் விமர்சனமாக இருக்கக்கூடாது என பார்த்திபன் கூறினார்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது பற்றி நடிகர் பார்த்திபர் நேர்காணல் ஒன்றில் கொடுத்த பதில் ஒன்று ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. 

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radhakrishnan Parthiban (@radhakrishnan_parthiban)

5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி வசூலில் மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார். படம் வெளியானதை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் சென்ற அவர் அங்குள்ள பெரிய கோவிலில் தரிசனம் செய்தது மட்டுமல்லாமல், தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பார்த்திபன், தஞ்சாவூர் சென்று வந்ததற்கு ரூ.1 லட்சம் செலவானதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயணம் ஒரு சரித்திர பதிவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேசமயம் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனம், பிற படங்களுடன் ஓப்பிடு செய்யப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, விமர்சனம் என்பது கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களை பார்த்து நாம் பயப்பட வேண்டுமே தவிர ஒருத்தரை காலி செய்யும் விமர்சனமாக இருக்கக்கூடாது என பார்த்திபன் கூறினார். அதேபோல கல்கியின் பேத்தி அளித்த பேட்டியில் கூட பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் என்ன பண்ணிருக்காருன்னு தான் பார்க்க வந்தேன் என தெளிவாக குறிப்பிட்டார். அதனால் ஓப்பீடு என்பது தேவையில்லாதது. 

மணிரத்னம் பணத்துக்காக தான் பண்றாருன்னு நினைச்சா இந்த படம் எடுக்குற கேப்புல அவர் 2 படம் பண்ணிருக்கலாம். அவரின் வயது, உடல் நிலை பற்றி கவலைப்படாமல் எடுத்துருக்காரு. நானே நிறைய டைம் அவருடைய டென்ஷனை பார்த்துட்டு இதெல்லாம் தேவையான்னு கேட்டுருக்கேன். ஆனால் எல்லாரும் பண்றதை தவிர்த்து நாம வேற ஏதாவது பண்ணனும்  என சொல்வாரு. சொல்லப்போனா படம் வந்த பிறகு பொன்னியின் செல்வன் நாவலை அதிகமாக விற்க தொடங்கியுள்ளது என அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் இருபடத்திலும் சோழ அரசனாக நடித்தது எப்படியிருந்தது என்ற கேள்விக்கு, நான் மணி சார கூர்ந்து கவனிக்கத்தான் போனேன். இவர் எப்படி சரித்திர வசனங்களை பேச வைக்கப் போறாரு. அவரே அளந்து அளந்து தான் பேசுவாரு...இவருக்கு அதைப்பத்தி ஏதாவது தெரியுமா...அப்படி மணி என்ன கிழிச்சிருறான்னு பார்க்கத்தான் போனேன். அங்க பார்த்தா அவர் டயலாக் சொல்லி கொடுக்குறாரு..நான் அதை ரசிக்கிறேன். அவர் தீர்மானமா தான் இருந்தாரு..இந்த படம் இப்படித்தான் எடுக்கப்போறேன்னு என பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
தமிழில் முதல்முறையாக நான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறேன்..நடிகை மாளவிகா தகவல்
தமிழில் முதல்முறையாக நான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறேன்..நடிகை மாளவிகா தகவல்
முதல் முறையாக கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறேன்..நடிகை கெளரி கிஷன் தகவல்
முதல் முறையாக கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறேன்..நடிகை கெளரி கிஷன் தகவல்
விக்னேஷ் சிவனுக்கு எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை..எல்.ஐ.கே பட விழாவில் இயக்குநர் ராம்
விக்னேஷ் சிவனுக்கு எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை..எல்.ஐ.கே பட விழாவில் இயக்குநர் ராம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
Embed widget