மேலும் அறிய

R Parthiban: ‘மணிரத்னம் என்ன கிழிச்சிருவாருன்னு பார்க்க போனேன்’ ... பார்த்திபன் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

விமர்சனம் என்பது கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களை பார்த்து நாம் பயப்பட வேண்டுமே தவிர ஒருத்தரை காலி செய்யும் விமர்சனமாக இருக்கக்கூடாது என பார்த்திபன் கூறினார்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது பற்றி நடிகர் பார்த்திபர் நேர்காணல் ஒன்றில் கொடுத்த பதில் ஒன்று ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. 

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radhakrishnan Parthiban (@radhakrishnan_parthiban)

5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி வசூலில் மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார். படம் வெளியானதை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் சென்ற அவர் அங்குள்ள பெரிய கோவிலில் தரிசனம் செய்தது மட்டுமல்லாமல், தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பார்த்திபன், தஞ்சாவூர் சென்று வந்ததற்கு ரூ.1 லட்சம் செலவானதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயணம் ஒரு சரித்திர பதிவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேசமயம் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனம், பிற படங்களுடன் ஓப்பிடு செய்யப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, விமர்சனம் என்பது கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களை பார்த்து நாம் பயப்பட வேண்டுமே தவிர ஒருத்தரை காலி செய்யும் விமர்சனமாக இருக்கக்கூடாது என பார்த்திபன் கூறினார். அதேபோல கல்கியின் பேத்தி அளித்த பேட்டியில் கூட பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் என்ன பண்ணிருக்காருன்னு தான் பார்க்க வந்தேன் என தெளிவாக குறிப்பிட்டார். அதனால் ஓப்பீடு என்பது தேவையில்லாதது. 

மணிரத்னம் பணத்துக்காக தான் பண்றாருன்னு நினைச்சா இந்த படம் எடுக்குற கேப்புல அவர் 2 படம் பண்ணிருக்கலாம். அவரின் வயது, உடல் நிலை பற்றி கவலைப்படாமல் எடுத்துருக்காரு. நானே நிறைய டைம் அவருடைய டென்ஷனை பார்த்துட்டு இதெல்லாம் தேவையான்னு கேட்டுருக்கேன். ஆனால் எல்லாரும் பண்றதை தவிர்த்து நாம வேற ஏதாவது பண்ணனும்  என சொல்வாரு. சொல்லப்போனா படம் வந்த பிறகு பொன்னியின் செல்வன் நாவலை அதிகமாக விற்க தொடங்கியுள்ளது என அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் இருபடத்திலும் சோழ அரசனாக நடித்தது எப்படியிருந்தது என்ற கேள்விக்கு, நான் மணி சார கூர்ந்து கவனிக்கத்தான் போனேன். இவர் எப்படி சரித்திர வசனங்களை பேச வைக்கப் போறாரு. அவரே அளந்து அளந்து தான் பேசுவாரு...இவருக்கு அதைப்பத்தி ஏதாவது தெரியுமா...அப்படி மணி என்ன கிழிச்சிருறான்னு பார்க்கத்தான் போனேன். அங்க பார்த்தா அவர் டயலாக் சொல்லி கொடுக்குறாரு..நான் அதை ரசிக்கிறேன். அவர் தீர்மானமா தான் இருந்தாரு..இந்த படம் இப்படித்தான் எடுக்கப்போறேன்னு என பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்பார்ப்பை எகிறவைத்த ஃபைனல்.. கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
யாரின் கனவு நிறைவேறும்? கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்பார்ப்பை எகிறவைத்த ஃபைனல்.. கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
யாரின் கனவு நிறைவேறும்? கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
Embed widget