மேலும் அறிய

Lok Sabha Election 2024: அனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ண கோரிக்கை - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Lok Sabha Election 2024: வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்த உதவும், விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Lok Sabha Election 2024: விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து,  தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், VVPAT வாக்குச் சீட்டுகளை முழுமையாகக் கணக்கிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் விளக்கம் கோரியுள்ளது. விவிபாட் என்பது வாக்காளர் தாங்கள் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள உதவும், ஒரு சுயாதீன வாக்குச் சரிபார்ப்பு அமைப்பாகும்.

தற்போதைய நடைமுறை:

தற்போதைய நடைமுறையின்படி, தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஈவிஎம் இயந்திரங்கள் உடன் இனைக்கப்பட்ட,  VVPAT இயந்திரங்களின் வாக்குச் சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. வாக்களார் வாக்களித்த பிறகு VVPAT ஆனது ஒரு காகிதச் சீட்டை உருவாக்குகிறது, அதை வாக்காளர் பார்த்து, தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும், மேலும் அந்த காகிதச் சீட்டுகள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்பட்டு தேவை ஏற்படின் பயன்படுத்தப்படும். உதாரணமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் எந்த சின்னத்தில் எத்தனை வாக்குகள் என்பதை உறுதி செய்ய முடியும். 2019 ஆம் ஆண்டில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒரு சட்டமன்றப் பகுதிக்கு சரிபார்க்கப்படும் VVPAT வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையை, ஒன்றிலிருந்து 5 ஆக அதிகரிக்க உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

பொதுநல வழக்கு:

இந்த சூழலில் தான்,  VVPAT காகிதச் சீட்டுகள் மூலம் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து EVM களை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக, தேர்தலில் VVPAT சீட்டுகள் முழுமையான கணப்பிடப்பட வேண்டும் என அருண் குமார் அகர்வால் எனும் சமூக ஆர்வலர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும்.  அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகளை இந்த பணியில் ஈடுபடுத்தினால், ஐந்து முதல் ஆறு மணி நேரத்தில் VVPAT சீட்டுகளை முழுமையாக கணக்கிடலாம். ஏறக்குறைய 24 லட்சம் VVPAT களை வாங்குவதற்கு அரசாங்கம் கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, ஆனால் தற்போது, ​​சுமார் 20,000 VVPAT களின் VVPAT சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன” என முறையிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு:

மேலும், VVPATகள் மற்றும் EVMகள் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.  EVM மற்றும் VVPAT வாக்கு எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையிலான முரண்பாடுகள் நிலவுகின்றன. எனவே, அனைத்து VVPAT சீட்டுகளையும் எண்ண வேண்டியது அவசியம் எனவும் மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தொடர்ந்து, இதுதொடர்பாக தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

போலி செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு... அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
போலி செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு... அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
சுந்தர் சி-க்கு சீட் கொடுத்ததால் எதிர்ப்பு... அதிமுக ex கவுன்சிலர் வேதனை ! - காரணம் என்ன?
சுந்தர் சி-க்கு சீட் கொடுத்ததால் எதிர்ப்பு... அதிமுக ex கவுன்சிலர் வேதனை ! - காரணம் என்ன?
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget