மேலும் அறிய

Lok Sabha Election 2024: அனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ண கோரிக்கை - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Lok Sabha Election 2024: வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்த உதவும், விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Lok Sabha Election 2024: விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து,  தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், VVPAT வாக்குச் சீட்டுகளை முழுமையாகக் கணக்கிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் விளக்கம் கோரியுள்ளது. விவிபாட் என்பது வாக்காளர் தாங்கள் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள உதவும், ஒரு சுயாதீன வாக்குச் சரிபார்ப்பு அமைப்பாகும்.

தற்போதைய நடைமுறை:

தற்போதைய நடைமுறையின்படி, தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஈவிஎம் இயந்திரங்கள் உடன் இனைக்கப்பட்ட,  VVPAT இயந்திரங்களின் வாக்குச் சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. வாக்களார் வாக்களித்த பிறகு VVPAT ஆனது ஒரு காகிதச் சீட்டை உருவாக்குகிறது, அதை வாக்காளர் பார்த்து, தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும், மேலும் அந்த காகிதச் சீட்டுகள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்பட்டு தேவை ஏற்படின் பயன்படுத்தப்படும். உதாரணமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் எந்த சின்னத்தில் எத்தனை வாக்குகள் என்பதை உறுதி செய்ய முடியும். 2019 ஆம் ஆண்டில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒரு சட்டமன்றப் பகுதிக்கு சரிபார்க்கப்படும் VVPAT வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையை, ஒன்றிலிருந்து 5 ஆக அதிகரிக்க உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

பொதுநல வழக்கு:

இந்த சூழலில் தான்,  VVPAT காகிதச் சீட்டுகள் மூலம் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து EVM களை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக, தேர்தலில் VVPAT சீட்டுகள் முழுமையான கணப்பிடப்பட வேண்டும் என அருண் குமார் அகர்வால் எனும் சமூக ஆர்வலர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும்.  அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகளை இந்த பணியில் ஈடுபடுத்தினால், ஐந்து முதல் ஆறு மணி நேரத்தில் VVPAT சீட்டுகளை முழுமையாக கணக்கிடலாம். ஏறக்குறைய 24 லட்சம் VVPAT களை வாங்குவதற்கு அரசாங்கம் கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, ஆனால் தற்போது, ​​சுமார் 20,000 VVPAT களின் VVPAT சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன” என முறையிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு:

மேலும், VVPATகள் மற்றும் EVMகள் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.  EVM மற்றும் VVPAT வாக்கு எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையிலான முரண்பாடுகள் நிலவுகின்றன. எனவே, அனைத்து VVPAT சீட்டுகளையும் எண்ண வேண்டியது அவசியம் எனவும் மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தொடர்ந்து, இதுதொடர்பாக தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Embed widget