மேலும் அறிய

Lok Sabha Election 2024: அனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ண கோரிக்கை - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Lok Sabha Election 2024: வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்த உதவும், விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Lok Sabha Election 2024: விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து,  தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், VVPAT வாக்குச் சீட்டுகளை முழுமையாகக் கணக்கிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் விளக்கம் கோரியுள்ளது. விவிபாட் என்பது வாக்காளர் தாங்கள் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள உதவும், ஒரு சுயாதீன வாக்குச் சரிபார்ப்பு அமைப்பாகும்.

தற்போதைய நடைமுறை:

தற்போதைய நடைமுறையின்படி, தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஈவிஎம் இயந்திரங்கள் உடன் இனைக்கப்பட்ட,  VVPAT இயந்திரங்களின் வாக்குச் சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. வாக்களார் வாக்களித்த பிறகு VVPAT ஆனது ஒரு காகிதச் சீட்டை உருவாக்குகிறது, அதை வாக்காளர் பார்த்து, தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும், மேலும் அந்த காகிதச் சீட்டுகள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்பட்டு தேவை ஏற்படின் பயன்படுத்தப்படும். உதாரணமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் எந்த சின்னத்தில் எத்தனை வாக்குகள் என்பதை உறுதி செய்ய முடியும். 2019 ஆம் ஆண்டில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒரு சட்டமன்றப் பகுதிக்கு சரிபார்க்கப்படும் VVPAT வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையை, ஒன்றிலிருந்து 5 ஆக அதிகரிக்க உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

பொதுநல வழக்கு:

இந்த சூழலில் தான்,  VVPAT காகிதச் சீட்டுகள் மூலம் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து EVM களை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக, தேர்தலில் VVPAT சீட்டுகள் முழுமையான கணப்பிடப்பட வேண்டும் என அருண் குமார் அகர்வால் எனும் சமூக ஆர்வலர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும்.  அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகளை இந்த பணியில் ஈடுபடுத்தினால், ஐந்து முதல் ஆறு மணி நேரத்தில் VVPAT சீட்டுகளை முழுமையாக கணக்கிடலாம். ஏறக்குறைய 24 லட்சம் VVPAT களை வாங்குவதற்கு அரசாங்கம் கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, ஆனால் தற்போது, ​​சுமார் 20,000 VVPAT களின் VVPAT சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன” என முறையிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு:

மேலும், VVPATகள் மற்றும் EVMகள் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.  EVM மற்றும் VVPAT வாக்கு எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையிலான முரண்பாடுகள் நிலவுகின்றன. எனவே, அனைத்து VVPAT சீட்டுகளையும் எண்ண வேண்டியது அவசியம் எனவும் மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தொடர்ந்து, இதுதொடர்பாக தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Embed widget