மேலும் அறிய

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

பல தலைமுறைகளாக வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற தேர்தல் 

இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 -ம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஜுன் 4 -ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் தற்போது களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Lok Sabha Election 2024: நேற்று டீ கடை, இன்று காய்கறி கடை, நாளைக்கு என்ன வேட்பாளரே? - எதிர்பார்க்கும் மயிலாடுதுறை வாக்காளர்கள்


நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

வீட்டுமனை பட்டா கோரிக்கை 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இளையாலூர் ஊராட்சி புதுத்தெருவில் 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 600 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் 400 வாக்காளர்களும் அடங்குவர். இந்நிலையில் 3 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்கள் தொடர்ந்து தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இவர்களின் கோரிக்கை இந்நாள் வரை அரசு நிறைவேற்றி தரவில்லை. 

எனது நண்பர் ஸ்டாலின் தேர்தலில் நிச்சயம் வெற்றி அடைவார் - வானிலை புகழ் ரமணன்


நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

இன்னல்களுக்கு ஆளாகும் மக்கள்

இதனால் இருப்பிட சான்று கிடைக்காமல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கி கணக்கு தொடங்குவது, கல்வி கடன் பெறுவதில் என வாழ்வாதார சார்ந்து பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். மேலும் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அரசு அலுவலர்கள் புது தெரு குடியிருப்புகள் அர்ஜுனன் வாய்க்கால் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் அமைந்துள்ளதால் இலவச பட்டா வழங்குவதில் சிக்கல் உள்ளதாக கூறி தங்களுக்கு பட்ட வழங்காமலும் அல்லது மாற்று இடம் வழங்காமலும் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர் என குற்றச்சாட்டியுள்ளனர்.

SACON Recruitment:விலங்கியல் பட்டம் பெற்றவரா? கோவையில் வேலை; விண்ணப்பிக்கும் முறை - முழு விவரம்!


நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

தேர்தல் புறக்கணிப்பு

மேலும் இதனால் ஆத்திரமடைந்த புது தெரு கிராமவாசிகள் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து இன்று அவர்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டி, நடைபெற்ற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக கூறி கைகளில் கருப்பு கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தங்கள் பகுதிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அரசு 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தி பல்வேறு வகையான பிரச்சாரங்களையும், ஏற்பாடுகளையும் செய்து வரும் நிலையில், சுமார் 150 குடும்பங்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து கருப்பு கொடி கட்டியுள்ள சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன்.. 6-ஆம் தேதி வரை 41 டிகிரி செல்சியஸ்.. எச்சரிக்கை கொடுக்கும் வானிலை..

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
Embed widget