மேலும் அறிய

TNPSC Group 2A Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: என்னென்ன மாற்றங்கள்?- ஓர் அலசல்!

TNPSC Group 2, 2A Exam 2024: குரூப் 2 தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. Group 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் ஒன்றாக இணைத்து நடத்தப்பட உள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு ஒன்றாக இணைக்கப்பட்டு நடத்தப்பட்டது பல்வேறு சிரமங்களுக்கு வித்திட்டதாகத் தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், சில மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி முன்னெடுத்திருக்கிறது. என்னென்ன மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்திருக்கிறது? பார்க்கலாம்.

குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த திருத்தப்பட்ட ஆண்டு தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது. இதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளன.  

குரூப் 4 தேர்வுகள், 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகின்றன. அதேபோல, குரூப் 1 தேர்வு 90 காலி இடங்களை நிரப்ப, ஜூலை 13ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு (நேர்காணல் பணியிடங்கள்), ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

2030 பணி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 28ஆம் தேதி இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.

Group 2, 2 ஏ தேர்வில் முக்கிய மாற்றம்

இந்த நிலையில், TNPSC Group 2, 2 ஏ தேர்வில் முக்கிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் குரூப் 2 தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. Group 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் ஒன்றாக இணைத்து நடத்தப்பட உள்ளன.

எனினும் முதன்மைத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படும். அதேநேரத்தில் வழக்கம்போல குரூப் 2 மெயின்ஸ் தேர்வு விவரித்து எழுதும் வகையில் டிஸ்கிரிப்டிவ் முறையில் நடத்தப்படும். அதேநேரத்தில் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு, அப்ஜெக்டிவ் (கொள்குறி) முறையில் நடத்தப்பட உள்ளது. எனினும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வில் பின்பற்றப்படும் தமிழ் தகுதித் தேர்வு (Tamil Eligibility Test) மட்டும் விரித்து எழுதும் வகையில் நடைபெற உள்ளது.

மிக அதிகமான பணியிடங்கள்

Aptitude & Mental Ability தேர்வுக்குப் பதிலாக Reasoning and General Intelligence தேர்வு நடைபெற உள்ளது.  Group 2, 2 ஏ தேர்வுக்கு மொத்தம் 2030 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக குரூப் 4 தேர்வுக்குப் பிறகு மிக அதிகமான பணியிடங்கள் குரூப் 2 தேர்வில்தான் இருக்கும். அந்த வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 4 தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் குரூப்  2 ஏ தேர்விலும் கலந்துகொண்டு, வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.

திருத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை குறித்த முழுமையான தகவல்களுக்கு: https://tnpsc.gov.in/static_pdf/annualplanner/Annual%20Planner_2024_Revised.pdf  என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை தேர்வர்கள் க்ளிக் செய்து காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Breaking News LIVE: சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் - கே.என் நேரு
Breaking News LIVE: சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் - கே.என் நேரு
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Breaking News LIVE: சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் - கே.என் நேரு
Breaking News LIVE: சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் - கே.என் நேரு
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
Watch Video: அன்று சந்திரபாபுவின் வீடு, இன்று ஜெகன் மோகனின் அலுவலகம்- ஆந்திராவில் அனல்பறக்கும் பழிவாங்கும் அரசியல்?
Watch Video: அன்று சந்திரபாபுவின் வீடு, இன்று ஜெகன் மோகனின் அலுவலகம்- ஆந்திராவில் அனல்பறக்கும் பழிவாங்கும் அரசியல்?
திருச்சியில் நள்ளிரவில் ஆட்சியர் - எஸ்பி அதிரடி நடவடிக்கை - 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு
திருச்சியில் நள்ளிரவில் ஆட்சியர் - எஸ்பி அதிரடி நடவடிக்கை - 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு
Embed widget