மேலும் அறிய

TN Board Class 10 Re Exam: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வா? - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விளக்கம்..

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு என்று தகவல் பரப்பி, அவர்களை மனதளவில் பாதிக்கும் செயலில் யாரும் ஈடுபடவேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 9,10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர்.


TN Board Class 10 Re Exam: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வா? - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விளக்கம்..

இந்நிலையில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நமது ABP நாடுக்கு விளக்கமளித்துள்ளார். அதில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கிய அரசின் உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மாணவர்களுக்கு மதிப்பெண்ணை உயர்த்த மாநில அளவில் பொதுவான தேர்வு என்பது முழுக்க முழுக்க தவறான தகவலாகும்” என்று கூறினார். மேலும், 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது முடிந்துபோன விவகாரம் என்றும், அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று பொய் தகவலைப் பரப்பி மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றால் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தவிர அனைவரும் தேர்வின்றி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதில், 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, கொரோனா தொற்று குறையாததால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அதன்பிறகு, கொரோனா தொற்று குறைய தொடங்கியதால், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.


TN Board Class 10 Re Exam: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வா? - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விளக்கம்..

இந்நிலையில், 12-ஆம் வகுப்பை தவிர இந்த ஆண்டும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி ஆல்பாஸ் என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.  இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது எனக்கூறி, வழக்கையும் முடித்து வைத்தது.

மேலும், 11-ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் தங்களுக்கான குரூப்பை தேர்வு செய்வதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவேண்டும் என்றும், 11-ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் சேர்க்கைக்கு தகுதியை கண்டறிய 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் கூறியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget