மேலும் அறிய

மாநிலம் முழுவதும் செப்.11-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்; ஆசிரியர் இயக்கங்கள் அறிவிப்பு- என்ன காரணம்?

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரில் செப்.11 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக டிட்டோ-ஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரில் செப்.11 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக டிட்டோ-ஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்கள் தெரிவித்துள்ளன. 

இதுகுறித்து டிட்டோ-ஜாக்‌ கூறி உள்ளதாவது:

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோ-ஜாக்‌ பேரமைப்பின்‌ மாநில உயர்மட்டக்குழு கூட்டம்‌ காணொளி வாயிலாக நடைபெற்றது. தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியின்‌ பொதுச்செயலாளர்‌ காமராஜ்‌ கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்‌. இக்கூட்டத்தில்‌ கீழ்க்கண்ட தீர்மானங்கள்‌ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்‌: 1

எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டத்தில்‌ மூண்றாம்நபர்‌ ஆய்வின்‌ போது பி.எட்‌. பயிற்சி மாணவர்கள்‌ ஈடுபடுத்தப்படுவார்கள்‌ என்ற SCERT இயக்குநரின்‌ சுற்றறிக்கைக்கு டிட்டோஜாக்‌ பேரமைப்பில்‌ இணைந்துள்ள இயக்கங்களின்‌ தலைவர்கள்‌ கரும்‌ எதிர்ப்பினைப்‌ பதிவு செய்த நிலையில்‌ பள்ளிக்கல்வி இயக்குநர்,‌ டிட்டோ-ஜாக்‌ உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து தொடக்கக்கல்வி இயக்குநர் முன்னிலையில்‌ நடத்திய பேச்சுவார்த்தையின்‌ முடிவில்‌ மூன்றாம் நபர்‌ ஆய்வில்‌ பி.எட்‌. பயிற்சி மாணவர்கள்‌ பயன்படுத்தப்பட மாட்டார்கள்‌ என்று பள்ளிக்கல்வி இயக்குநர்‌ உறுதி அளித்தார்‌. ஆனால்‌ அவர்‌ அளித்த உறுதிக்கு மாறாக  நேற்று (செப்.7) மாநிலம்‌ முழுவதும்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பள்ளிகளில்‌ நடைபெற்ற மூன்றாம்‌ நபர்‌ மதிப்பீட்டில்‌ முழுக்க பி.எட்‌. பயிற்சி மாணவர்கள்‌ ஈடுபடுத்தப்பட்டனர்‌. இது ஆசிரியர்கள்‌ மத்தியில்‌ கடும்‌ அதிர்ச்சியினை ஏற்படுத்தியது, பல பள்ளிகளில்‌ பி.எட்‌. பயிற்சி மாணவர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளனர்‌. பேச்சுவார்த்தையில்‌ அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக, SCERT தன்னிச்சையாக செயல்படுவதற்கு டிட்டோஜாக்‌ பேரமைப்பு கடும்‌ அதிருப்தியையும்‌, கண்டனத்தையும்‌ தெரிவிக்கிறது.

தீர்மானம்‌: 2

28.09.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட “எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டத்தை பி.எட்‌ படிக்கும்‌ மாணவர்களைக்‌ கொண்டு ஆய்வுச்‌ செய்திட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாகத்‌ தெரிய வருகிறது. எக்காரணம்‌ கொண்டும்‌ எந்த வடிவத்திலும்‌ கல்வித்துறை சார்ந்த மூன்றாம் நபர்‌ஆய்விற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்பதையும்‌, அவர்களை பள்ளியில் அனுமதிக்க வாய்ப்பில்லை என்பதையும்‌ டிட்டோஜாக்‌ ஒருமனதாக முடிவெடுத்து அறிவிக்கிறது” எனத்‌ தெரிவித்திருந்தோம்‌. பி.எட்‌ பயிற்சி மாணவர்களை ஆய்விற்கு பயன்படுத்துவது தொடாந்தால்‌ ஆய்வுக்கு அனுமதிப்பதில்லை என்ற டிட்டோஜாக்‌ முடிவினை உறுதிப்படச்‌ செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம்‌ : 3

11.09.2023 திங்கள்‌ மாலை மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டம்‌

பேச்சுவார்த்தையில்‌ அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி.எட்‌. பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதைக்‌ கண்டித்தும்‌, கைவிட வலியுறுத்தியும்‌, ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்தரத்தினை முற்றிலும்‌ பாதிக்கும்‌ எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டத்தை முழுவதும்‌ கைவிட வலியுறுத்தியும்‌, தொடக்கக்கல்வித் துறையில்‌ 1 முதல்‌ 8 வகுப்புகளைக்‌ கற்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து கற்பித்தல்‌ பணியில்‌ ஈடுபட இயலாத வகையில்‌ எமிஸ் செயலியில்‌ பல்வேறு பதிவேற்றங்களை செய்யும்‌ பணியினை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்‌. 

கற்பித்தல்‌ பணியில்‌ முழுமையாக ஈடுபட இயலாத காரணத்தால்‌ ஆசிரியர்கள்‌ கடும்‌ மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கல்விப்‌ பணியைத்‌ தவிர பிற பணிகளில்‌ குறிப்பாக எமிஸ் பதிவேற்றம்‌ செய்யும்‌ பணிகளில்‌ இருந்து ஆசிரியாகளை முழுமையாக விடுவித்திட வலியுறுத்தியும்‌, பயிற்சிகள்‌ மற்றும்‌ பிற பயிற்சிகளுக்கான ஏதுவாளர்களாக ஆசிரியர்கள்‌ பயன்படுத்தப்படுவதால்‌ கற்றல்‌, கற்பித்தல்‌ பணியில்‌ பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பயிற்சி ஏதுவாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்துவதை முற்றிலும்‌ தவிர்க்க வலியுறுத்தியும்‌,

பள்ளி மேலாண்மைக்குழு ஒவ்வொரு மாதமும்‌ கூட்டுவதால்‌ ஏற்படும்‌ பாதிப்புகளை கருத்தில்‌ கொண்டு 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே மேற்படி கூட்டங்களைக்‌ கூட்ட வலியுறுத்தியும்‌, 

விடுமுறை நாட்களில்‌ பயிற்சிகள்‌ அளிப்பதைக்‌ கைவிட வலியுறுத்தியும்‌,  11.09.2023 மாலை தமிழகம்‌ முழுவதும்‌ மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள்‌ பங்கேற்கும்‌ மாபெரும்‌ ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என டிட்டோஜாக்‌ பேரமைப்பு ஒருங்கிணைந்து முடிவு செய்து அறிவிக்கிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
மனப்பாடத்துக்கு நோ, தேர்வில் மாற்றம்: சிபிஎஸ்இ புதிய பாடத்திட்டம் அமல்- என்னென்ன மாற்றங்கள்?
மனப்பாடத்துக்கு நோ, தேர்வில் மாற்றம்: சிபிஎஸ்இ புதிய பாடத்திட்டம் அமல்- என்னென்ன மாற்றங்கள்?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியாகும்! திக் திக் மனநிலையில் மாணவர்கள்: தாமதமாகுமா 10ம் வகுப்பு ரிசல்ட்?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியாகும்! திக் திக் மனநிலையில் மாணவர்கள்: தாமதமாகுமா 10ம் வகுப்பு ரிசல்ட்?
Free AI Courses: ஹார்வர்டு வழங்கும் AI & கோடிங் இலவசப் படிப்புகள்! பொன்னான வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Free AI Courses: ஹார்வர்டு வழங்கும் AI & கோடிங் இலவசப் படிப்புகள்! பொன்னான வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
"விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சது கடுப்பா இருந்துச்சு.." மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
Embed widget