சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்போது காலியாக உள்ள ஒரு கணக்காளர் பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான கணக்காளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்போது காலியாக உள்ள ஒரு கணக்காளர் பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கணக்காளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் / கணிதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் எவ்வளவு?
பொருத்தமான துறையில் குறைந்தபட்சம் 1 வருட பணி அனுபவமும். கணினி திறன்கள் மற்றும் Tally அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 42 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பதாரர்களுக்கு). இதற்கான தொகுப்பூதியமாக மாதந்தோறும் ரூ.18,536/- வழங்கப்படும்.
கணக்காளர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்ப படிவத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
குறிப்பாக, 23.03.2026 (திங்கள்கிழமை) மாலை 5.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை - வடக்கு, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-600010 என்ற முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது’’ என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























