மேலும் அறிய

CBSE Class 12 Board Exam 2021: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து என்பது சூழ்ச்சியே! - வைகோ

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு, நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் உடல்நலனில் அக்கறை இல்லையா என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து என்பது சூழ்ச்சித் திட்டமே ஆகும். இந்தத் தேர்வை ரத்து செய்த மத்திய அரசு நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை. கொரோனா குறைந்த பிறகு மாநில அளவிலான பிளஸ் 2 தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கின்றார். 

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை, இந்த ஆண்டும் நடத்தப் போகின்றார்கள். அப்படியானால், அந்தத் தேர்வு எழுதுகின்ற அந்த மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்கள் மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா? அவர்களை மட்டும் கொரோனா தொற்று தாக்காமல், விதிவிலக்கு அளிக்குமா?


CBSE Class 12 Board Exam 2021: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து என்பது சூழ்ச்சியே! - வைகோ

எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும். காரணம், அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக்கொள்கையின்படி, கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலைப்பள்ளித் தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது  தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள். எனவே, இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எப்போதுமே மேனிலைப்பள்ளித் தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பதுதான் அவர்கள் திட்டம் ஆகும்.  

ஆனால், மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில், மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான், கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது. அயல்நாடுகளின் பள்ளி, கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில் 
எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் அதுவே தகுதியாக இருக்கின்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும்; நீட் தேர்வு கூடாது என்பதுதான், தமிழ்நாட்டின் கருத்து ஆகும். 

எனவே, ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்; கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒரு மாத முன் அறிவிப்போடு, மேனிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேனிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு ரத்து - பிரதமருக்கு இபிஎஸ் நன்றி

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
Embed widget