மேலும் அறிய

மண்டபத்தில் 2.5 கடல் அட்டை; காரைக்குடியில் 1 டன் குட்கா’ சிக்கியது எப்படி !

காரைக்குடியில் 3 இலட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, அதே போல் மண்டபம் பகுதியில் 100 சாக்கில் 2.5 டன் கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  காந்தி வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதிக்கு புகார் வந்தது.
 

மண்டபத்தில் 2.5 கடல் அட்டை; காரைக்குடியில் 1 டன் குட்கா’ சிக்கியது எப்படி !
இதனையடுத்து, ரவிச்சந்திரன் வீட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்த போது, சுமார் ஒரு டன் அளவுள்ள சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான பான்பராக், பான்மசாலா, புகையிலை போன்ற குட்கா பொருட்களும், தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளும் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம்  குட்கா பொருட்கள் பதுக்கல்  குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவர் இதே வழக்கில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

மண்டபத்தில் 2.5 கடல் அட்டை; காரைக்குடியில் 1 டன் குட்கா’ சிக்கியது எப்படி !
மேலும் இது குறித்து காவல் துறையினர்..,” சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சட்ட விரோதமாக இயங்கிய குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஆய்வுக்காக கோவை மாவட்டத்திற்கு அனுப்பப்படுகிறது. ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது குறித்து கூடுதல் விசாரணை நடத்துவார்கள். கடந்த 2019-ல் இதே போல் ரவிசந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது” என்றனர்.
 

மண்டபத்தில் 2.5 கடல் அட்டை; காரைக்குடியில் 1 டன் குட்கா’ சிக்கியது எப்படி !
 
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் வனத்துறை மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து கடற்கரையில் கூட்டு ரோந்து மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு வல்லம் சோதனையிட்டபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வன உயிரின குற்றம் பதிவு செய்யப்பட்டது. வேதாளை தெற்குதெரு சேர்ந்த பிரபாகரன் வயது 42 மற்றும் முகமது அன்சார் வயது 19 ஆகிய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டபத்தில் 2.5 கடல் அட்டை; காரைக்குடியில் 1 டன் குட்கா’ சிக்கியது எப்படி !
 
வன உயிரின சரகம் மண்டபத்தில் விசாரணை நடத்தினர். பிடிபட்ட வல்லத்தில் சுமார் 100 சாக்குகளில் இறந்த கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்த எடை சுமார் 2.5 டன் (2500 கிலோ), மேற்படி ரோந்துந்து பணியில் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் மகேந்திரன் மற்றும் வனக் காப்பாளர்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படை டெபிட்டி கமாண்டர் ரோஷன் பால் சிங்  தலைமையில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
 
 

தலைப்பு செய்திகள்

காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Embed widget