மேலும் அறிய

தீபாவளி விடுமுறைக்கு வந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு! திருவாரூரில் சோகம்!

விளமல் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டவேரா வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி உள்ளது.

தீபாவளி விடுமுறைக்கு வந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

திருவாரூர் மாவட்டம் விற்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஜெயராஜ் வயது 31. இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக ஜெயராஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

திருவாரூர் நகரத்திற்குட்பட்ட மருதப்பாடியை சேர்ந்தவர் ஜெயராஜின் உறவினரான பிரகாஷ் வயது 38. இவர் திருவாரூரில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஜெயராஜின் தங்கை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உணவு எடுத்து செல்வதற்காக ஜெயராஜும்  பிரகாசும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது விளமல் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டவேரா வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷிற்கு கால் முறிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டதால் டவேரா வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்றனர். 


தீபாவளி விடுமுறைக்கு வந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு! திருவாரூரில் சோகம்!

தகவலறிந்த திருவாரூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த ஜெயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் என்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் ஏற்படும் விபத்து என்பது வழக்கமான நாட்களை விட அதிகரித்து காணப்படுகிறது. பொதுவான காரணமாக கூறப்படுவதில் மிக முக்கியமானது மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுவது. திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் 5 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கும் தீபாவளி அன்று 3 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கும் மாவட்டம் முழுவதும் உள்ள 108 அரசு மது மதுபான கடைகளில் விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


தீபாவளி விடுமுறைக்கு வந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு! திருவாரூரில் சோகம்!

தனது தங்கைக்க்கு பிறந்துள்ள குழந்தையை பார்ப்பதற்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக தனது உறவினரான பிரகாசை அழைத்துக் கொண்டு ஜெயராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது விமா என்கிற பகுதியில் எதிரே வந்த டவேரா வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கால் முறிவு  ஏற்பட்டு உயிருக்கு போராடிய பிரகாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் கூடியதால் தவிர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் சமீப காலமாக கால்நடைகள் இரவு நேரங்களில் ரோட்டில் திரிவதாலும் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Embed widget