மேலும் அறிய

Crime: செய்யாறு அருகே பயங்கரம்....அடுத்தடுத்து 6 பேரை வெட்டிய இளநீர் வியாபாரி; பெண் பலி - நடந்தது என்ன..?

தொடர்ந்து வெண்பாக்கம் நகர்பகுதிக்கு சென்று பஞ்சர் கடை நடத்தி வரும் காந்தி வயது (55) என்பவரிடம், 'உன்னால்தான் எனது பெயரில் நிலம் பட்டா செய்யப்படாமல் உள்ளது' எனக்கூறி அவரையும் வெட்டியுள்ளார்.

செய்யாறு அருகே நிலத்தகராறில் பெண்ணை வெட்டிக்கொன்றுவிட்டு, 6 நபரை சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரியை, பஞ்சர் கடைக்காரர் இரும்பு ராடால் அடித்து கொலைசெய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட அழிவிடை தாங்கி கிராமம், பைரவபுரம் பகுதியை சேர்ந்தவர் துலுக்கானம் வயது (75). இவரது தம்பி லட்சுமணன் வயது (70). ஆகிய இருவரும் விவசாயிகளான இவர்களுக்கு பூர்விக சொத்தான 18 ஏக்கர் நிலத்தை தலா 9 ஏக்கராக பிரித்துள்ளனர். லட்சுமணனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சரோஜாவின் மகன் செல்வம் வயது (50), 2வது மனைவி பார்வதியின் மகன் சுப்பிரமணி வயது (45). இவர் இளநீர் வியாபாரி. இவர்களுக்கிடையே 9 ஏக்கர் நிலத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் சுப்பிரமணி விவசாய நிலத்துக்கு வந்தபோது, செல்வம் மனைவி சங்கீதா வயது (45) துணிகளை துவைத்து விவசாய நிலத்தில் காய வைத்துள்ளார்.

 


Crime: செய்யாறு அருகே பயங்கரம்....அடுத்தடுத்து 6 பேரை வெட்டிய இளநீர் வியாபாரி; பெண் பலி - நடந்தது என்ன..?

இதைப்பார்த்த சுப்பிரமணி திடீரென இளநீர் வெட்டும் கத்தியால் துணி காய போட்டிருந்த கயிற்றை அறுத்துவிட்டாராம். இதை தட்டிக்கேட்ட சங்கீதாவையும், இளநீர் வெட்டும் கத்தியால் வெட்டியுள்ளார். இதனை பக்கத்து நிலத்துக்காரரான வெங்கடேசனின் மனைவி வேண்டாஅமிர்தம் வயது (55), தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவரது கழுத்தில், சுப்பிரமணி வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சங்கீதா வெட்டு காயத்துடன் ரத்தம் வழிந்தபடி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது வெறிபிடித்தபடி கத்தியுடன் சுப்பிரமணி அவரை துரத்திக்கொண்டே சென்றுள்ளார். பின்னர் எதிரே வந்த தனது கணவர் செல்வம், வேண்டா அமிர்தத்தின் கணவர் வெங்கடேசன் ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை சங்கீதா கூறியுள்ளார். பின்னர் சுப்பிரமணியை மடக்கி கண்டித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே செல்வம், சங்கீதா, வெங்கடேசன் ஆகிய 3 நபர்களையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அப்போது அவரை பிடிக்க முயன்ற அழிவிடை தாங்கி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலேந்திரன் என்பவரையும் வெட்டியுள்ளார்.

 


Crime: செய்யாறு அருகே பயங்கரம்....அடுத்தடுத்து 6 பேரை வெட்டிய இளநீர் வியாபாரி; பெண் பலி - நடந்தது என்ன..?

தொடர்ந்து வெண்பாக்கம் நகர்பகுதிக்கு சென்று பஞ்சர் கடை நடத்தி வரும் காந்தி வயது (55) என்பவரிடம், 'உன்னால்தான் எனது பெயரில் நிலம் பட்டா செய்யப்படாமல் உள்ளது' எனக்கூறி அவரையும் வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற அவரது மனைவி லதா வயது (50) அவரையும் வெட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காந்தி, கடையில் இருந்த இரும்பு ராடை எடுத்து சுப்பிரமணியின் பின்பக்க தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெட்டுபட்டு காயமடைந்த 6 நபர்களையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சங்கீதா, லதா, காந்தி ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சொத்து பிரச்னைக்காக சொந்த அண்ணன் மற்றும் உறவினர்கள் என்று பாராமல் இளநீர் சீவும் கத்தியில் அனைவரையும் இளநீர் சீவுவது போல் சீவிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025):
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
Embed widget