மேலும் அறிய

Crime: உடல் உபாதைகளை தாங்க முடியாமல் தனக்குத்தானே சிதை மூட்டிக் கொண்ட முதியவர்! நடந்தது என்ன?

நேற்று முன்தினம் தனது குடும்ப வீடு அமைந்திருக்கும் புதூர் கிராமத்துக்குச் சென்ற விஜயகுமார், அங்கே தனக்கு சிதை மூட்டத் தொடங்கியுள்ளார். 

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த  மரநாட்டைச் சேர்ந்தவர் விஜயகுமார் (68). இவர் முதுமை காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தன் உடல் உபாதைகளால் கடந்த சில நாட்களாக வேலைக்கும் செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

சொந்த ஊரில் தனக்கு தானே சிதை

இந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப்.08) இரவு தனது குடும்ப வீடு அமைந்திருக்கும் புதூர் கிராமத்துக்குச் சென்ற விஜயகுமார், அங்கே தனக்கு சிதை மூட்டத் தொடங்கியுள்ளார்.  தொடர்ந்து அதில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், அருகேயுள்ள வீட்டில் வசித்து வந்த விஜயகுமாரின் சகோதரி, திடீரென வீட்டில் தீ கொழுந்து விட்டு எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து அங்கு விரைந்த விஜயகுமாரின் சகோதரி பின்னர் இன்னொரு நபரையும் துணைக்கு அழைத்து போராடி தீயை அணைத்தார். ஆனால் அது ஏதோ தானாக பிடித்துக்கொண்ட தீ என நினைத்து அவர் சென்று விட்ட நிலையில், தொடர்ந்து காலையில் சென்ற பார்த்தபோது அவரது சகோதரரின் விஜயகுமார் உடல் கருகிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கடிதம் எழுதி வைத்த முதியவர்

தொடர்ந்து காவல் துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் அங்கு வந்து அவர்கள் நடத்திய விசாரணையில், விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

மேலும் விஜயகுமார் கைப்பட எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் ஒன்றும் காவல் துறையினரிடம் சிக்கியது. இந்நிலையில், இதில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா என காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உடல் உபாதைகளால் முதியவர் தனக்குத்தானே சிதை மூட்டி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும் துன்பங்களும் வந்து கொண்டும் சென்று கொண்டும் தான் இருக்கும். அவற்றை எல்லாம் தற்காலிகமாக்குவதும் நிரந்தரமாக்குவதும் நாம் அவற்றை கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது.

வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறியத் தொடங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060

மேலும் படிக்க: Crime : கோவை: ரூ. 33 லட்சம் மதிப்பு: தங்க நகைகளுடன் எஸ்கேப் ஆன நகைக்கடை தொழிலாளி: பறந்து சென்று பிடித்த காவல்துறை

தலைப்பு செய்திகள்

கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

வீடியோ

Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Chennai Power Cut: சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
Embed widget